search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "aditi shankar"

    • 2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான ’குறும்பு’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன்.
    • நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார்.

    2003 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

    அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, ரகுமான், பிரபு, ஆதித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

    அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் பஞ்சா திரைப்படத்தை இயக்கினார், ஆனால் இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. மீண்டும் அஜித்தை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார்.

    2021 ஆம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB 2பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

    இப்படத்தின் டைட்டில் வரும் ஜூன் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர்
    • அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது

    தமிழக் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு இயக்குநர் ஷங்கர் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி ஷங்கர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில, மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

    ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திக் ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க இருக்கிறார். அண்மையில் கோலாகலமாக நடந்த இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்நிலையில், இன்று இயக்குனர் ஷங்கர் தனது மனைவி ஈஸ்வரியுடன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.

    விரைவில் இவர்களது திருமணத்திற்கான தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக 2022-ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
    • மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த தகவலை அவரது தங்கையான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இயக்குநர் ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதில் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தற்போது இவர் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

    கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022ம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    ஆனால் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவும் ரோஹித்தும் ஆறு மாதங்கள் கூட ஒன்றாக சேர்ந்து வாழவில்லை. திருமணமான உடனே ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் புகார்களும் உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதனால் ரோஹித்தும் ஐஸ்வர்யாவும் சட்டப்படி மணமுறிவு பெற்று பிரிந்தனர்.

    இப்போது, ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளார் எனற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தை ஷங்கரின் இரண்டாவது மகள், நடிகை அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா மற்றும் மாப்பிள்ளை புகைப்படங்களைப் பகிர்ந்து, இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். மாப்பிள்ளை தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சூர்யா.
    • இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இப்படத்தின் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்திருந்தார்.


    இந்நிலையில், 'சூர்யா 43' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நஸ்ரியா இப்படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது.

    • முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி நடிப்பில் வெளியான படம் விருமன்.
    • விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார்.


    விருமன்

    மேலும், இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    விருமன்

    இந்நிலையில், 'விருமன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளது.


    • இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ''மாவீரன்''.
    • இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    'டாக்டர்', 'டான்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படம் மாவீரன். இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர்.


    மாவீரன்

    இதற்கான அறிவிப்பை படக்குழு முன்னதாகவே வெளியிட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிகை அதிதி சங்கர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


    அதிதி சங்கர்

    மேலும், இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×