என் மலர்
நீங்கள் தேடியது "advocate"
- ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
- கருப்பு ‘கோட்’ மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்.
சென்னை :
கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், மார்ச் முதல் ஜூலை மாதம் வரை வக்கீல்கள் கருப்பு 'கவுன்' அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை கடிதம் வழங்கும். அந்த வகையில், அண்மையில், ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த மனுவை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "கோடைகாலம் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு வருகிற ஜூன் 30-ந்தேதி வரை 'கவுன்' அணிவதில் இருந்து வக்கீல்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேசமயம் கருப்பு 'கோட்' மற்றும் கழுத்தில் வெள்ளை நிற பட்டை அணிவது கட்டாயம்'' என்று கூறியுள்ளார்.
- மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர்.
- இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் மணிராஜ் (56). இவரது மனைவி சாந்தி(52). இவர்கள் திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பொதிகை நகரில், ஜவுளி நிறுவனம் நடத்தி வருவதாகவும் தமிழ்நாடு முழுவதும் பகுதி வாரியாக ஷோ ரூம்கள் அமைக்க ஏஜென்டுகள் தேவை என்றும் கடந்த 2020-ம் ஆண்டு விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி ஜவுளி விற்பனை மையம் அதைப்பதற்காக திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த வக்கீல் அரசபிரபாகரன் இவர்களை அணுகி உள்ளார். ஒரு கிளைக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்தால், தேவைப்படும் இடத்தில் கடையின் உள்அலங்காரம் செய்து கொடுப்பதுடன், தங்கள் நிறுவனத்தின் தரமான வேட்டி, சட்டை, பனியன், ஜட்டி மற்றும் மாஸ்க் உள்ளிட்ட தயாரிப்புகளை யாரும் தர முடியாத அளவில் குறைந்த விலைக்கு விற்பனைக்காக தருவதாகவும் கூறி உள்ளனர்.
இதனை நம்பி அரசபிரபாகரன் மற்றும் அவரது 4 நண்பர்கள் சேர்ந்து 5 கிளைகள் அமைப்பதற்காக ரூ. 61 லட்சத்தை மணிராஜ்-சாந்தியிடம் கொடுத்துள்ளனர்.
மணிராஜ்-சாந்தி தம்பதி மற்றும் இவர்களது மகள் பவித்ரா, மருமகன் சசிகுமார் ஆகியோர் பல தவணைகளில் பணத்தை பெற்றுள்ளனர். அதன் பின் ஷோரூம் அமைத்துதராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அரசபிரபாகரன் பணத்தை திருப்பி கேட்ட போது ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மட்டும் திருப்பி தந்துள்ளனர். மீதி தொகையாக ரூ. 59 லட்சத்து 25 ஆயிரம் தராமல் காலம் தாழ்த்தி உள்ளனர். இதனால் அரசபிரபாகரன் ஈரோடு மாவட்டம் சித்தோடு போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சித்தோடு போலீசார், ஜவுளி நிறுவனம் அமைத்து தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த மணிராஜ் மற்றும் சாந்தியை நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் இவர்களின் மகள் மற்றும் மருமகனை தேடி வருகின்றனர். மணிராஜ் மற்றும் சாந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இதே போல் வேறு யாரையும் ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளியில் "லிப் ரீடிங்" முறையில் விடாமுயற்சியுடன் கல்வியை பயின்றார்
- 2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரூவை சேர்ந்தவர் 27 வயதான சாரா சன்னி (Sarah Sunny).
இவருக்கு மரியா சன்னி எனும் சகோதரியும் பிரதிக் குருவில்லா எனும் சகோதரனும் உள்ளனர். பிரதிக் அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மரியா பட்டய கணக்காளராக பணிபுரிகிறார்.
இவர்கள் மூவருக்கும் சிறு வயது முதலே இரண்டு செவிகளிலும் கேட்டல் குறைபாடு உண்டு. இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை இவர்கள் அடைந்தனர்.
இவர்களது பெற்றோர், கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக பள்ளிகளில் இவர்களை படிக்க வைக்காமல், இத்தகைய குறைபாடுகள் உள்ளவர்களையும் பிற குழந்தைகளுடன் படிக்க அனுமதிக்கும் பள்ளிகளிலேயே இவர்களை சேர்த்தனர்.
பள்ளியில் சாரா "லிப் ரீடிங்" (lip reading) எனும் உதடுகளின் அசைவை உணரும் வழிமுறை மூலமாக கல்வி கற்று கொண்டார். பெங்களூரூவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் சட்ட கல்வியில் சேர்ந்தார். அங்கும் அதே முறையில் பயின்றார்.
2021ல் பார் தேர்வில் வெற்றி பெற்று வழக்கறிஞர் ஆனார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன்பாக தனது கட்சிக்காரருக்காக வாதாடினார்.
சாராவிற்காக ஒரு சைகை மொழி மொழிபெயர்ப்பாளரை (sign language interpreter) வைத்து கொள்ள உச்ச நீதிமன்றம் உதவியது. சைகை மொழி மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் இவர் தனது வாத பிரதிவாதங்களை வைக்க, அதனை தலைமை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.
இந்திய சட்ட வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய குறைபாடு உள்ள ஒருவர் வாதாடியது இதுவே முதல் முறை.
சன்னிக்கு கிடைத்த இந்த வாய்ப்பின் மூலம் இந்தியாவில் எதிர்காலத்தில் சட்டத்துறையில் கல்வி பெறவும், வழக்கறிஞராக பணியாற்றவும் இவரை போன்ற பலர் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள் என பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
- குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பாப்பா. இவர்களது 2-வது மகன் தமிழ்ச்செல்வன்.
2 கை மற்றும் கால்கள் ஆகியவை போலியோவால் பாதிக்கப்பட்டதால், மற்ற மாணவர்கள் போன்று செயல்படும் நிலை இல்லாமல் இருந்து வருகிறார். பிறவியிலேயே இந்த பாதிப்பு இருந்தாலும் படிப்பு ஒன்று தான் முக்கியம் என அவர் கருதியதால் அவரது பெற்றோர் அவருக்கு கல்வியை கற்க அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அந்த மாணவன் ஆசிரியர் உதவியுடன் எழுதினார். இன்று வெளியான தேர்வு முடிவில் மாணவன் தமிழ்ச்செல்வன் மொத்தமாக 500-க்கு 420 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். குடும்பத்தினரும், அக்கம் பக்கத்து வீட்டாரும் இதனை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மாணவனுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதுகுறித்து மாணவர் கூறும் போது, தொடர்ந்து படித்து சிறந்த வக்கீலாக வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றார்.
ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும் கல்வியை கண்ணாக கொண்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்து மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
- அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது
- மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான கணல் கதிரவனை, அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பொய் வழக்கு ஒன்றில் சூளகிரி காவல்துறையினர் சேர்த்திருக்கின்றனர். அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
வழக்கறிஞர் கணல் கதிரவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வரும் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பா.ம.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் க. பாலு பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விபத்து நடந்த சில நிம்டங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
- போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் அதிகம் பேர் பெண்கள் ஆவர். 80,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2.5 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடியதாலும், போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க நெறுக்கியடித்ததாலும் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே போலே பாபா அங்கிருந்து நழுவிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தேவப் பிரகாஷ் மதுக்கருக்கு அரசியல் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சியின் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாததையும் கவனிக்க வேண்டி உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்கு மிக்க போலே பாபாவின் சொத்துமதிப்பு 100 கோடியாக உள்ளது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் போலே பாபாவின் வழக்கறிஞர் ஏ.பி சிங் கூட்டநெரிசல் குறித்து கூறியுள்ள கருத்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போலே பாபாவின் அன்றைய கூட்டத்தில் சுமார் 15 முதல் 16 பேரின் கையில் விஷத் தன்மையுள்ள பொருள் அடைத்த பாட்டில்கள் இருந்துள்ளது என்றும், அதை அவர்கள் திறந்துவிட்டதாலேயே இந்த கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் பங்கேற்ற சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். மேலும், விஷ பாட்டில்களை வைத்திருந்த நபர்கள் தப்பிச் செல்ல கார்களும் அங்கு தயாராக இருந்துள்ளதாக குறிப்பிடடுள்ளார்.
இதற்கான தகுந்த ஆதாரத்தை வெளியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதற்கு புறம்பாக போலே பாபாவின் வக்கீல் சொல்லும் புதிய குற்றச்சாட்டுகள் வழக்கை திசை திருப்பும் முயற்சியா என்ற கேள்வியும் பலர் மத்தியில் எழுந்துள்ளது.
- என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி என்று கோபமாக பேசியுள்ளார்
- பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது
உச்சநீதிமன்றம் ஒன்றும் காபி ஷாப் இல்லை என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வக்கீலுக்கு பாடம் எடுத்த சம்பவம் நிகழ்ச்த்துள்ளது. இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் வக்கீல் ஒருவருடன் சட்டப்பிரிவு 32 இந்த கீழ் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றின் மீது சந்திரசூட் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
2018 தேதியுடைய அந்த மனுவில் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை அந்த வக்கீல் குறிப்பிட்டுள்ளார். அதாவது, 2018 இல் இந்த வக்கீல் வாதாடிய அந்த பொதுநல வழக்கை அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அந்த மனுவில் எந்த தவறும் இல்லை என்பதால் அதை தள்ளுபடி செய்திருக்கக்கூடாது என்று தற்போது மீண்டும் அந்த வக்கீல் உச்சநீதிமன்றத்தில் மறுபரிசீலனை மனுவை சமர்ப்பித்துள்ளார். எனவே அதில் ரஞ்சன் கோகாய் பெயரை வக்கீல் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பொது நல மனுவில் ரஞ்சன் கோகாய் பெயரை குறிப்பிட்டது தலைமை நீதிபதியையே எதிர்ப்பதாகிறது என்று சந்திரசூட் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய வக்கீல், சாதாரணமாகப் பேசுவதுபோல், 'யா [Yeah] யா [Yeah], அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய்... மறுபரிசீலனை மனு..' என்று இழுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசூட், உடனே அந்த வக்கீலை இடைமறித்து, 'இது ஒன்றும் காபி ஷாப் கிடையாது, என்ன இது யா யா, இந்த யா யா எல்லாம் எனக்கு அலர்ஜி, இதற்கு இங்கு அனுமதி கிடையாது' என்று கோபமாகக் கடிந்துகொண்டார். இதனால் நீதிமன்ற அவையே சற்று நேரம் சற்று நேரம் அமைதியில் மூழ்கியது.
- பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மாவை பொதுவெளியில் வழக்கறிஞர் ஒருவர் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் வழக்கறிஞரை கடுமையாக தாக்கினர். பின்னர் போலீசார் இதில் தலையிட்டு சமாதானப்படுத்த முற்பட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
எம்எல்ஏவை அறைந்த வழக்கறிஞர் உள்ளூர் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அவதேஷ் சிங் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக் குழு தேர்தல் நடைமுறையில் மோசடி நடந்துள்ளது ஆகவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எம்எல்ஏ யோகேஷ் வர்மா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று கூடுதல் மாவட்ட நீதிபதி சஞ்சய் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
- வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
- பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதா 2025 சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு" – பேரறிஞர் அண்ணா!
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத்துறையின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
2014ம் ஆண்டு முதல், பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை முறையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களை அபகரிக்க முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும். இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத்துறையின் சுயாட்சியை அரிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.
"தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
தன்னிச்சையான போராட்டங்களும் வரைவு மசோதாவுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பும் மத்திய அரசை அதை திரும்பப் பெற கட்டாயப்படுத்தினாலும், அது மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் செயல்படுத்தப்படும் என்ற கூற்று கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், சட்டத்துறையின் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் திமுக வலியுறுத்துகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் வடிவேல்சாமியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழனியை சேர்ந்த வக்கீல்கள் சுரேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் படியும், கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதன்பேரில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டு பணிகளையும் புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன."
- போலீஸ்காரரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
- குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் குற்றாலம் அருவிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஐந்தருவியில் மட்டும் 2 கிளைகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
இந்நிலையில் நேற்று அருவியில் குளிப்பதற்காக தென்காசி செங்குந்தர் முதலியார் தெருவை சேர்ந்த வக்கீலான ஷேக் என்ற அயூப்(வயது 38) என்பவர் சென்றுள்ளார்.
அப்போது அவர் அங்கு பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் குற்றாலம் போலீசார் ஷேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை ஆதீனத்தின் விஷம பிரசாரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என்று வக்கீல் பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.
- மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் சே. பசும்பொன் பாண்டியன் இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய பா.ஜனதா அரசுக்கு ஆதீனங்கள் வக்காலத்து வாங்கி வருவதால் அவர்களது ஆன்மீக ப்பணி பயங்கர வாத ஆர்.எஸ்.எஸ். பணியாக மாறும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. மதுரையில் விஷ்வ இந்து பரிஷத் ஆதரவோடு நடைபெற்ற துறவிகள் மாநாட்டில் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும், கம்யூனிஸ்ட்கள் ஆபத்தானவர்கள் என்றும் குறிப்பாக மதுரை ஆதீனம் தி.மு.க.வையும், தமிழக அரசையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
துறவிகள் தி.மு.க. அரசை மிரட்டி பேசியதோடு ஒட்டு மொத்தத்தில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் வெறுப்பைக் கக்கும் மாநாடாக நடந்துள்ளது. சிறுபான்மையினரை வசைமாறி பொழிந்ததோடு மதுரை மீனாட்சி அம்மனையும் கேலி செய்து அவதூறு சேற்றை அள்ளி வீசி இருக்கிறார்கள், ஆதீனங்கள் சைவத்தையும் தமிழையும் வளர்க்கின்ற பணியை மட்டுமே செய்ய வேண்டும்.
ஆதீனங்கள் ஆன்மீக பணியை விட்டு ஆர்.எஸ்.எஸ். பணியில் ஈடுபட்டால் மக்கள் சக்திக்கு முன் ஆதீனங்கள் தாக்க பிடிக்க முடியுமா? கோவில் நிலங்க ளை தங்களி டம் ஒப்படைக்க வேண்டு மென மதுரை ஆதீனம் கூறுகின்றார்.
ஏற்கெனவே ஊழல் முறைகேடு நடைபெற்றதால் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அறநிலையத்துறையால் தான் கோவில்களை பாதுகாக்க முடியும். மதுரை ஆதீனத்துக்கு நிலங்கள் எப்படி வந்தது ? அவர் யார் யாருக்கு நிலங்களை கொடுத்துள்ளார் என்று பொதுவெளியில் விவாதிக்க தயாரா ?
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசாக நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் தொடங்கிய அறநிலையத்துறையை பாதுகாத்து வருகிறார். அந்த ஆட்சிக்கு எதிராக துறவிகள் மாநாடு என்ற பெயரில் மதுரை மண்ணில் விஷத்தை கக்கினால் அதை முறியடிப்பதற்கு திராவிட பட்டறை உரிய முறையில் ஆதீனங்களை சந்திப்போம் என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்,
மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்.சின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வருவதோடு மதுரை ஆதீனமடத்தை ஆர்.எஸ்.எஸ்.சின் பயங்கரவாத கூடாரமாக மாற்றி வருவதை மதுரை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மதுரை ஆதீனத்தின் விஷம பிரசா ரத்தை திராவிட பாசறை முறியடிக்கும் என மதுரை ஆதீனத்திற்கு எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.