என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Agalvilkam"
புதுச்சேரி:
விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளி பிழம்பாய், சிவன் காட்சி யளித்த நாள் கார்த்திகை பவுர்ணமியாகும்.
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் தீபம் ஏற்றி வைப்பதும், எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபம் வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அகல் விளக்கு செய்யும் பணி புதுவையில் தீவிரமாக நடக்கிறது. முருங்கபாக்கம், திருக்காஞ்சி, பிள்ளையார்குப்பம் பகுதியில் அகல்விளக்கு செய்யும் பணிகளில் கைவினை கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களை கவர புது வகையான விளக்குகளை தயாரிப்பர். இந்த ஆண்டு 9 வண்ண ங்களில் 20 வகையான விளக்குகளை கைவினை கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். 5 முகலட்சுமி, விநாயகர், யானை, அலாவுதீன், ராந்தல், தாமரை, நட்சத்திரம், துளசி மாடம் போன்ற வடிவங்க ளிலும் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் புதுவை மட்டுமின்றி கோவை, சேலம், திருச்சி, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விளக்குகள் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்