என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » aiims hospita
நீங்கள் தேடியது "AIIMS Hospita"
மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் உதயகுமார் அறிவித்துள்ளார். #AIIMS #TNMinister #Udhayakumar
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறினேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
18 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தான் சிறப்பாக இருக்கும்.
திருமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வெளியூர் பஸ் நிலையம் ரூ.22 கோடி செலவில் அமைய உள்ளது. விரைவில் திருமங்கலம் நகர்பகுதிக்கு பாதாளசாக்கடை திட்டத்தையும் கொண்டு வருவேன்.
மத்திய அரசு பஸ்போர்ட் அமைய 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. அவை சேலம், கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் அமைய இருக்கிறது.
மதுரையில் பஸ்போர்ட் அமைய 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய இருக்கிறோம். அனைத்து வசதிகள் நிறைந்த பஸ்போர்ட்டை திருமங்கலம் பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.
ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் பல்வேறு நலத்திட்டங்களை திருமங்கலத்திற்கு கொண்டு வந்து 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Udhayakumar
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையவில்லை என்றால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே கூறினேன். என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
18 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைவது தான் சிறப்பாக இருக்கும்.
திருமங்கலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான வெளியூர் பஸ் நிலையம் ரூ.22 கோடி செலவில் அமைய உள்ளது. விரைவில் திருமங்கலம் நகர்பகுதிக்கு பாதாளசாக்கடை திட்டத்தையும் கொண்டு வருவேன்.
மத்திய அரசு பஸ்போர்ட் அமைய 3 இடங்களை தேர்வு செய்துள்ளது. அவை சேலம், கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் அமைய இருக்கிறது.
மதுரையில் பஸ்போர்ட் அமைய 65 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தேர்வு செய்ய இருக்கிறோம். அனைத்து வசதிகள் நிறைந்த பஸ்போர்ட்டை திருமங்கலம் பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன்.
ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வழங்க மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
மேலும் பல்வேறு நலத்திட்டங்களை திருமங்கலத்திற்கு கொண்டு வந்து 234 தொகுதிகளில் திருமங்கலம் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றுவேன்.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #AIIMS #TNMinister #Udhayakumar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X