search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol sales"

    அயனாவரம் அருகே மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    அம்பத்தூர்:

    அயனாவரம் ராஜிவ்காந்தி நகரில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.சி.எப். போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர்.

    அப்போது மகாராணி (50), சீத்தா (34) ஆகியோர் டாஸ்மாக் பாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றது தெரிய வந்தது. ‘மாவா’ போதை பவுடரும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    திருக்கழுக்குன்றம் அருகே சாராயம் விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தை அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியில் கள்ளச் சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கெம்புராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த பெண் சாராய வியாபாரிகள் ரூபாவதி, தனலட்சுமி ஆகியோரும் பிடிபட்டனர்.

    ×