search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aluminum oars"

    • ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு
    • ஜெயிலில் அடைத்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் - மும்பை ரெயில் மார்கத்தில் திருத்தணி -பொன்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத நபர்கள் அலுமினிய ஒயர்களை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைப்பதாக அரக்கோணம்ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அந்தப்பகுதிகளில் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணியை அடுத்த பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் அலுமினிய ஒயரை வைத்தது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ×