search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati Crocodile Farm"

    • நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன.
    • அணை பூங்கா போதிய பராமரிப்பின்றி கிடந்தது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகள், பஞ்சலிங்க அருவி, அமணலிங்கே ஸ்வரர் கோவில், அமராவதி முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கு தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமூர்த்தி அணைக்கு செல்லும் சுற்றுலா பயணி கள் பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்தில் உள்ள தடாகத்தில் குளித்து மகிழ்வார்கள். நீச்சல் குளம், வண்ண மீன் காட்சியகம் போன்றவையும் உள்ளன. அங்கு பெரிய அளவில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அமராவதி அணை பகுதியில் முதலை பண்ணை உள்ளது. இதனை தவிர சிறுவர் பூங்கா அமைக்க ப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவை சுற்றுலா பயணிகள் கண்டு ஏமாற்றமடையும் நிலை இருந்தது. அணை பூங்கா போதிய பராமரிப்பின்றி கிடந்தது. மேலும் அனை வரும் விரும்பி பார்க்கும் முதலைப்ப ண்ணை போதிய வசதிகள் இன்றி இருந்தது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமராவதி நகர் முதலை பண்ணையில் வனத்துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு ள்ளன. அமராவதி முதலைப் பண்ணை 1975-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அமராவதி அணையில் இருந்து வெளியேறும் முதலைகள் பிடிக்கப்பட்டு இங்கு பராமரிக்கும் பணி தொடங்கியது.

    இவை நன்னீர் இனத்தை சேர்ந்த முதலைகள் ஆகும். இங்கு மொத்தம் 90 முதலைகள் உள்ளன. 13 வயது முதல் 48 வயது வரை உள்ள முதலைகள் வயது க்கேற்றவாறு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தனித்தனி தண்ணீர் தொட்டிகளில் விடப்ப ட்டுள்ளன. முதலைகள் ஒன்றுக்கொன்று சண்டையி டுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு பிரித்து விடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த காலங்க ளில் ஒரே வயது டைய முதலைகள் சண்டை யிட்டு ரத்தக்களரியான சம்பவ ங்களும் நடைபெற்று ள்ளது.

    இந்நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட முதலை பூங்காவில், கழி வறை வசதி, அமர்ந்து இயற்கையின் அழகை ரசிக்கும் வகையில் இருக்கை கள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பசும்புல் தரைகள் அமைக்க ப்பட்டுள்ளன. சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் முதலைகளை பார்வையிட வசதியாக பாதுகாப்பான முறையில் உயரமான கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணையில் ஆங்காங்கே யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகள், அரிய வகை பறவைகளின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளையும், குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. மேலும் கேரளாவைச் சேர்ந்த ஓவியர் மூலம் முதலை பண்ணையின் சுவர்களில் விலங்கு, பறவையினங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு, அவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில் அமராவதி வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் முதலை பண்ணைக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.

    இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறுகையில்:- பண்ணையில் பெரிய மற்றும் சிறிய முதலைகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகளுடன் பொழுது போக்குவதற்கு ஏராளமான வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. குடும்பத்துடன் இங்கு வந்து செல்ல ஏற்ற இடமாக உள்ளது. மிக குறைந்த கட்டணமே வசூலி க்கப்படுகிறது. அமராவதி அணை பூங்காவில் போதிய வசதிகள் இல்லாமல் இருந்த நிலையில் இப்போது அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த முதலை பண்ணை பயனு ள்ளதாக உள்ளது. கோடை விடுமுறையில் குழந்தை களுடன வந்து கண்டு களிக்கலாம் என்றனர்.

    ×