search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amirthakadeshwarar"

    • இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.
    • அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.

    "அபிராமி" பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. "ரம்யம்" என்றால் அழகு. ரம்யத்தை உடையவள் "ராமி" (அழகுடையவள்), அபி&மேலான, எனவே "அபிராமி" என்ற சொல்லுக்கு "மேலான அழகுடையவள்" என்பது பொருள்.

    தன்னையே துதித்து, தன் பெயரையே பெயராக்கிக் கொண்ட அபிராமி பட்டருக்கு அருள் செய்து அதன் வழி உலகுக்கு "அபிராமி அந்தாதி" கிடைக்கச் செய்தாள்.

    இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.

    அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.

    ''தனந்தரும், கல்வி தரும், ஒரு

    நாளும் தளர்வறியா

    இனந்தரும், தெய்வ வடிவுந்தரும்,

    நெஞ்சில் வஞ்சமில்லா

    இனந்தரும், நல்லன எல்லாந்தரும்,

    அன்பர் என்பவர்க்கே

    கனம்தரும் பூங்குழ லாள்அபி

    ராமி கடைக்கண்களே.''

    அபிராமி அந்தாதி

    • அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.
    • திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.

    அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.

    திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.

    மார்க்கண்டேயன் உயிரைக் கவர எமன் வந்த போது எமதர்மனை சிவபெருமான் காலால் உதைத்த சிவனுறைத் தலம் இது.

    எனவே இங்குள்ள இறைவனான அமிர்தகடேஸ்வரரைத் தொழுவதால் எமபயம் நீங்கும்.

    'சஸ்டியப்த பூர்த்தி' என்று கூறப்படுகின்ற அறுபது வயதை முடித்தவர்கள் அவசியம் இக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

    இதனால் பூரண ஆயுள் கிட்டும் என்பது நம்பிக்கை.

    ×