என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AR Rahman"
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
- இவர் இசையில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் - 1.
ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.
ஏ.ஆர். ரஹ்மான்
தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், "அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.
Turning Vegan for the next ten days ..🥗 pic.twitter.com/jP5vwS3gJ2
— A.R.Rahman (@arrahman) July 30, 2022
- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
- இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றுள்ளது.
ஏ. ஆர். ரஹ்மான்
முதலமைச்சரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, நேப்பியர் பாலத்தில் விளம்பர படப்பிடிப்பிற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு'.
- பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டெம்பர் மாதம் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து புதிய தகவலை தனது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மொஸார்ட் ஆஃப் தி மெட்ராஸ் ஏ.ஆர் ரஹ்மானை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் எளிமை கண்டு வியந்தேன். வெந்து தணிந்தது காடு படம் குறித்து நிறைய பேசினோம். ரசிகர்களுக்கான சிறப்பான இசை விருந்து வந்து கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Happy to have met the Mozart of Madras himself, Mr @arrahman . Amazed by his simplicity and astonished by his vision. We had a little chat on our new movie together "#VendhuThanindhathuKaadu ". A beautiful movie coming up for you with a stunning musical treat.#DrIshariKGanesh pic.twitter.com/hFY0092hMY
— Dr Ishari K Ganesh (@IshariKGanesh) June 29, 2022
- நடிகர் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.
- பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என வீடியோ பதிவின் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
#VendhuThanindhathuKaadu
— Gauthamvasudevmenon (@menongautham) June 28, 2022
🔗 https://t.co/UJ3X0aSZFG
We have a date with all of you.#VTKOnSep15th in theatres! @SilambarasanTR_ @arrahman
Produced by VelsFilmIntl @IshariKGanesh
- மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி முதலமைச்சர் வாழ்த்து.
- ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் பல நெஞ்சங்களை இணைக்க வாழ்த்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா-ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் பங்கேற்று மணமக்களுக்கு மரக்கன்று பசுமைக் கூடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் இது குறித்து சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதாவது:
ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் புதுமண இணையரை வாழ்த்தினேன்.
அன்புக்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது உயிரோட்டமான இசையால் எல்லைகளையும் தடைகளையும் கடந்து மேலும் பல நெஞ்சங்களை ஆற்றவும் இணைக்கவும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா (ஐ.ஐ.எப்.ஏ.) அபுதாபியில் உள்ள யாஸ் ஐலேண்டில் எத்திஹாட் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த விருது வழங்கும் விழாவை நடிகர்கள் சல்மான் கான், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் மணீஷ் பால் ஆகியோர் முன்னின்று தொகுத்து வழங்குகின்றனர். இதில், நடிகர் நடிகைகளான ரன்வீர் சிங், கார்த்திக் ஆர்யன், சாரா அலி கான், வருண் தவான், அனன்யா பாண்டே, திவ்யா கோஸ்லா குமார் மற்றும் நோரா பதேஹி உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குகின்றனர்.
இந்த விழாவிற்கான ஒத்திகை நிகழ்ச்சியில் பஞ்சாப்பை சேர்ந்த ராப் இசை பாடகரான ஹனி சிங் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். மேடையில் பாடல்களை பாடியபடி இருந்த அவர் பின்பு கீழே இறங்கி நடந்து சென்று பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் காலில் விழுந்து வணங்கினார். அவரை வாழ்த்திய ஏ.ஆர். ரகுமான், ஹனி சிங் எழுந்ததும் அவருக்கு கைகொடுத்து புன்னகைத்தார். இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஹனி சிங் வெளியிட்டு உள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் சாருடனான எனது வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என அதில், தலைப்பிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் தங்க பல்லி போன்ற நெக்லெஸ் ஒன்றை ஹனி சிங் அணிந்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். அவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுடன் ஒன்றாக நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தலப் பக்கத்தில் ஜாக்குலின் வெளியிட்டு உள்ளார். இந்த விழாவில் குரு ரந்தாவா, புஷ்பா பட இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவி ஸ்ரீ பிரசாத், தனிஷ்க் பக்சி, நேஹா கக்கர் மற்றும் துவானி பானுஷாலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்