search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Rahman"

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Sarkar #Vijay #KeerthySuresh
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்கார் படத்தின் கதை பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. வெளிநாட்டில் பிரபல தொழிலதிபராக இருக்கும் விஜய் தனது ஓட்டுரிமையை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார். அவர் வரும் விமானம் தாமதமாவதால், அவரது ஓட்டை திருட்டுத்தனமாக ஒரு அரசியல் கட்சி ஆட்கள் போட்டு விடுகிறார்கள்.

    அந்த கள்ள ஓட்டு சம்பவத்தால் அரசியலில் குதிக்கிறார் விஜய். அரசியலில் புரட்சி செய்கிறார் என்பதே படத்தின் கதை என்கிறார்கள். இந்த கதை கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கிறது. தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பெரிய டிரீட் காத்திருக்கிறது எனலாம். 



    சர்கார் படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay

    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள நான்கு நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகிய நிலையில், அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #CCV #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நாயகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அதன்படி அரவிந்த்சாமி வரதன் என்ற கதாபாத்திரத்திலும், அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்திலும், சிம்பு எதி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தின் போஸ்டர் நாளை காலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV
    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் குடும்ப பெண்களுக்கான 10 கட்டளைகள் உருவாக்கியிருந்தது பிடித்திருப்பதாக ஜோதிகா கூறியுள்ளார். #KaatrinMozhi #Jyothika
    ஜோதிகா திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காற்றின் மொழி என்ற படத்தில் ராதா மோகன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இதுபற்றி ஜோதிகா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.



    அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது’ என்றார். #KaatrinMozhi #Jyothika

    ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தில் நடித்துள்ள 4 நட்சத்திரங்களின் முதல்பார்வை போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #ChekkaChivanthaVaanam
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. 

    மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தில் நடித்திருக்கும் 4 நட்சத்திரங்களின் 4 முதற்பார்வை போஸ்டர்கள் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தெலுங்கில் ‘நவாப்’ என்ற பெயரில் இந்த படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. #ChekkaChivanthaVaanam #CCV

    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் வியப்பு இன்னமும் நீங்கவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். #2Point0 #Rajinikanth
    ரஜினியின் ‘2.0’, விஜய்யின் ‘சர்கார்’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ஏலியன் படம், மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்‘ என தமிழிலேயே நிறையப் படங்களில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பாலிவுட், ஹாலிவுட் படங்கள், இசை நிகழ்ச்சிகள் என தீவிரமாக இயங்கி வருகிறார். மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

    ஏ.ஆர்.ரகுமான் அளித்த ஒரு பேட்டியில், சங்கரின் 2.0 பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரகுமான், “2.0 போன்ற படத்தை ‌ஷங்கரால் மட்டும்தான் உருவாக்க முடியும். அவர் விரும்பும் தரத்திற்கு வரும் வரை மிக மெனக்கெட்டு வருகிறார்.



    படத்தில் ஒரு பாடலைப் பார்த்தேன். எந்த கிராபிக்சும் இல்லாமலேயே அவ்வளவு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. முக்கியமாகப் படத்தின் மொத்த கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். எனக்கு அதன் வியப்பு இன்னமும் நீங்கவில்லை. ‌ஷங்கர் போன்ற திறமைசாலி இந்தியாவுக்கே பெருமை” என்று பதிலளித்தார்.

    ரஜினிகாந்துடன், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் போன்ற பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. #2Point0 #Rajinikanth

    `சர்கார்' படத்திற்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையவிருக்கும் விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Atlee
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்க படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

    தெறி, மெர்சல் என விஜய்யை வைத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்துள்ள அட்லி, சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மெர்சல், சர்கார் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்கார் படப்பிடிப்பு முடிந்த பிறகே, விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே விஜய் 63 குறித்த அறிவிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vijay63 #Atlee

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், பாடல் காட்சிக்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளனர். #Vijay #Sarkar
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், படக்குழு தற்போது அமெரிக்கா விரைந்துள்ளது.

    அங்கு படத்தின் அறிமுக பாடல் மற்றும் சில முக்கிய காட்சிகளை படமாக்குகின்றனர். இந்த பாடல் காட்சியை நடன இயக்குநர் ஷோபி வடிவமைக்கிறார். முன்னதாக கத்தி படத்தில் `பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா' என்ற பாடலுக்கு ஷோபி நடனம் வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    இந்த பாடலில் வரலட்சுமியும் இடம்பெறுவதாக கூறப்படும் நிலையில், `சர்கார்' படப்பிடிப்புக்காக வேகாஸ் வந்துள்ளதாக நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். 

    ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். 

    தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற தீபாவளிக்குப் ரிலீஸாகும், இந்த படத்தின் பின்னணி இசைக்கான பணிகளை ஏ.ஆர்.ரஹ்மான் செப்டம்பரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. #Vijay #Sarkar

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி' படத்தில் `ஜிமிக்கி கம்மல்' பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #KaatrinMozhi #Jyothika
    கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற `ஜிமிக்கி கம்மல்' என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி' படத்திலும் இடம்பெற இருக்கிறது. 

    சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

    இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.



    விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் ரிலீசாகிறது. #KaatrinMozhi #Jyothika #JimikkiKammal

    விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    தற்போது உலக திரைப்பட விழாக்களில் `மெர்சல்' படம் திரையிடப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக `மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    முன்னதாக, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `தும்ஹரி சூளு' படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது `காற்றின் மொழி'. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராதா மோகன் இயக்க்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது.

    இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `நாச்சியார்' படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் `2.0' படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இந்த படம் 3டியில் உருவாகி இருக்கிறது.

    படம் நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததும் டீசர், டிரைலருக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் 2.0 படத்தின் டீசர் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.



    டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகலாம் என படத்தின் ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பே லீக் ஆனது. இதனால் அதிர்ச்சியான படக்குழு கிராபிக்ஸ் வேலைகளை மும்முரப்படுத்த தொடங்கியது. #2Point0 #Rajinikanth

    ×