என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "AR Rahman"
- பனையூரில் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது.
- வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை பனையூரில் நடைபெற இருந்த 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், அரசாங்கத்தின் உதவியுடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மாநாடு, கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தும் வகையில் விரைவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கலைஞர் கூட்டரங்கு அமைக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
- நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2989 ஏடி' திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தின் அறிமுக விழா அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் லோலா விஎஃப்எக்ஸுடன் உருவாகி வருகிறது. இந்தியன் -2 திரைப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து சிம்பு நடிக்கும் 48-வது படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2989 ஏடி' படத்தின் அறிமுக விழாவிற்காக அமெரிக்கா சென்றார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் தனது நாற்பது வருட கால நண்பரும் ஹாலிவுட் ஒப்பனைக் கலைஞருமான மைக் வெஸ்ட்மோரையும் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஆஸ்கர் மியூசியத்தை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.
- இவர் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தன் இசையால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50-வது படத்திற்கு ஏ.ஆர்.இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சமீபத்தில் தனியார் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் தான் மதம் மாறியது குறித்து பேசியுள்ளார். அதில், "என் அப்பா கடைசி காலத்தில் போராடிக் கொண்டிருந்த போது பல குருக்களை சந்தித்தோம். கடைசியாக சூஃபி ஆன்மிக குருவை சந்தித்தோம். அப்போது அவர் பத்து வருடங்களுக்கு பின் நீ மீண்டு வருவாய் என்று கூறினார்.
பத்து வருடங்களுக்கு பின் ஒருநாள் ஸ்டூடியோவில் இருந்து உபகரணங்களை எடுத்து செல்லும் போது சுங்கவரித் துறை அதிகாரிகள் எங்களிடம் கடும் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த மதகுருவின் மாணவர் ஒருவர் எங்களுக்கு உதவினார். தொடர்ந்து நாங்கள் மீண்டும் அந்த சூஃபியை சந்திக்க சென்றோம். அவர் என்னுடைய ஸ்டூடியோவை ஆசீர்வதித்தார். பின்னர் வாழ்க்கையில் எல்லாம் மாற ஆரம்பித்தது.
யாருமே நீங்கள் இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என எங்களிடம் சொல்லவில்லை. நாங்களாக தான் இந்த நம்பிக்கையை கடைபிடித்தோம். நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியபோது எந்தவித சமூகம் சார்ந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள் பெரும்பாலும் வெளிப்படையானவர்கள். குறிப்பாக தென்னிந்திய மக்கள் மிகவும் வெளிப்படையானவர்கள்; அனைவரையும் அரவணைத்து 'வாழு வாழ விடு' என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியுடன் வாழ்பவர்கள். கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களால் சில விஷயங்கள் புதிதாக இருக்கிறது என நினைக்கிறேன்" என்றார்.
- இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மரியான்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமத்திருந்தார்.
இயக்குனர் பரத்பாலா இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரியான்'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பார்வதி நடித்திருந்தார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தனுஷ் தனது சிறந்த நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதில், 'நேற்று அவள் இருந்தால்', 'கொம்பன் சூறா', 'சோனா பரியா' போன்ற பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இந்நிலையில், 'மரியான்' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக ஏ.ஆர்.ரகுமான், தனுஷ், பார்வதி, பரத்பாலா ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ் செய்து மகிழ்ந்தனர். இந்த லைவ்விற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கொண்டாடினர்.
இந்த லைவ் வீடியோவிற்கு முன்பு மரியான் புகைப்படத்தை பகிர்ந்து இன்று லைவ் போலாமா நமது சிந்தனனைகளை பகிர்ந்துகொள்ள என ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தை தொடர்ந்து தனது 50வது படத்தை இயக்கி நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நேற்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு நேற்று போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தனுஷ்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் மரியான், ராஞ்சனா, அந்த்ராங்கி ரே ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. நான்காவது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ள படத்தில் ஆதித்யா வர்மா, மகான் படங்களில் நடித்த துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வோரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்கர் விருது குழுவில் தேர்வாகியுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ராஜமவுலி பதிவிட்டுள்ளார். அதில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிலிருந்து 6 நபர்கள் ஆஸ்கர் தேர்வு குழுவில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாகவுள்ளது. இந்திய சினிமாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் அனைவருக்கும் வாழ்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Extremely proud that 6 members of our RRR team have been invited as members for The Academy Awards this year.
— rajamouli ss (@ssrajamouli) June 29, 2023
Congratulations Tarak, Charan, Peddanna, Sabu sir, Senthil &Chandrabose garu.
Also, congrats to the members from Indian Cinema who received the invitation this year :)
- ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைச்சிறந்த கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைப்பு விடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர்.
Dear KK ..what’s the hurry buddy ..gifted singers and artists like you made this life more bearable..#RIPKK
— A.R.Rahman (@arrahman) June 1, 2022
- தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
- இப்படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்த்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன்பு திரிஷா, தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.
- இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
'மாமன்னன்' படத்தில் வடிவேலு பாடியுள்ள பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு, "பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில் அலையடிக்கிறது கடல்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
"பசித்த மீனை தின்றவர்களின் வயிற்றில்
— Udhay (@Udhaystalin) May 19, 2023
அலையடிக்கிறது கடல்"#RaasaKannu 1st single from #MAAMANNAN?at 5 PM today
Music by @arrahman
Sung by #Vadivelu.@mari_selvaraj @KeerthyOfficial #FahadhFaasil @thenieswar @editorselva @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off… pic.twitter.com/HhJDt854Y2
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்