search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery"

    • அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.
    • தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    சீர்காழி:

    தஞ்சாவூர் 39 வார்டு பகுதியை சேர்ந்த கர்ணன் மகன் கைலாஷ்.

    இவர் அகில இந்திய அளவில் வில்வித்தை போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பெற்று பதக்கங்களை வென்றார்.

    இந்த சாதனையின் மூலம் தமிழ்நாட்டிற்கு சிறுவயதிலேயே கைலாஷ் பெருமை சேர்த்துள்ளார்.

    இதனை அறிந்த சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், சிறுவனை நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று பாராட்டு பெற வைப்பதாக அப்போது தெரிவித்தார்.

    • செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர்.
    • இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர்

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகள் குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற வில் வித்தை போட்டியில் கலந்து கொண்டனர். பாரத் மாண்டிசேரி, இசக்கி வித்தியாஷ்ரம், வேல்ஸ் வித்யாலயா, செய்யது ரெசிடென்சியல் போன்ற பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி ரஸினா ரீஜா 1-ம் இடத்தையும், 8-ம் வகுப்பு மாணவன் முஹம்மது ஜமால் ஜக்கரியா 1-ம் இடத்தையும், 7-ம் வகுப்பு மாணவன் ஹமீத் அல்தைப் 2-ம் இடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பெற்று பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளியின் வில்வித்தை பயிற்சியாளர் ஜாகிர் உசேன் பாராட்டினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. #AsianGames2018
    ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இன்று காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக்வர்மா- ஜோதி சுரேகா ஆகியோரை கொண்ட இந்திய அணி கால்இறுதிக்கு முந்தை சுற்றில் ஈராக் அணியுடன் மோதியது.

    இதில் இந்திய அணி 155-147 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தது. கால்இறுதியில் இந்தியா, ஈரான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் மாலை நடக்கிறது.

    ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அட்னு தாஸ்- தீபிகா குமாரி ஜோடி 5-4 என்ற புள்ளிகள் கணக்கில் மங்கோலியா ஜோடியிடம் தோற்று வெளியேறியது. #AsianGames2018
    ×