search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Around 100 people were arrested"

    • காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறத்தினர்
    • சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்துணவு ஓய்வு ஊதியர் சங்க மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் சுசிலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற சத்துணவு ஊழியர்கள் சுமார் 100 பேரை கைது செய்தனர்.

    ×