என் மலர்
நீங்கள் தேடியது "arrest"
- அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர்.
- வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்த கொரியர் மூலம் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவருக்கு பெங்களூருவில் இருந்து வந்த கொரியரை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 90 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி மோகன் மற்றும் மாத்திரை விற்பனையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். 90 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
- கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியாவின் ஸ்டைரியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு சமூகவலைதளம் மூலம் ஒருவர் அறிமுகமானார். நட்பாக பழகிய அந்த நபரை சந்திக்க வாலிபர் சென்றிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கும்பல் அவரை தாக்கி பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதில் அந்த கும்பல் சமூகவலைதளம் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து பழகியதும், பின்னர் அவர்களை நேரில் வரவழைத்து பணமோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
- போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.
இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
- நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது ராம்கோ நகர் பகுதி. வளர்ந்து வரும் இப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.
திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியாக உள்ள ராம்கோ நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பொது மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் தனித்தனியே இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் ராம்கோ நகர் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனியாக உள்ள வீடுகளை நோட்ட மிட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மற்றொரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி திறக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது முகமூடி அணிந்த 2 பேர் கதவை உடைப்பது தெரியவந்தது.
உடனே அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். போலீசார் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது டவுசர் அணிந்த 2 மர்ம நபர்கள் தலையில் குரங்கு குல்லாவுடன் கதவை ஆயுதங்களால் உடைப்பது பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 39), சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
- ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விடிய விடிய சிபிஐ விசாரணை நடத்தியது.
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகள் மூட்டை மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
சிபிஐ நடத்திய விசாரணையில் ரூ.7 கோடி ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு தங்கும் விடுதியில் விடிய விடிய தொடர்ந்து 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று தொடர்ந் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது.
- முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
மும்பை:
மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது. மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்த முக்கிய குற்றவாளியான வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தாவை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள வங்கியின் முன்னாள் தலைவர் ஹிதேன் பானு, அவரது மனைவி கவுரி பானுவை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஹிதேஷ் மேத்தாவுக்கு போலீசார் உண்மை கண்டறியும் சோதனை மேற்கொண்டனர் இந்த சோதனையில் போதுமான அளவு வழக்கு தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீசார் அவருக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஹிதேஷ் மேத்தாவுக்கு 'பிரைன் மேப்பிங்' சோதனை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம். அதுதொடர்பான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே அவருக்கு தடயவியல், உளவியல் சோதனைகள் மேற்கொள்ள கோர்ட்டு அனுமதி அளித்துவிட்டது" என்றார்.
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
மும்பை:
மும்பை பாந்திரா கே.சி. சாலையில் உள்ள குடிசை பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட குடிசை வீட்டுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 286 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.71 லட்சத்து 68 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இம்ரான் கமாலூதீன் அன்சாரி(வயது36) என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர்.
- தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் லூட்டன் நகரைச் சேர்ந்தவர் நிக்கோலஸ் பிரோஸ்பர் (வயது 19). கடந்த ஆண்டு இவருக்கும், தாய் ஜூலியானா பால்கனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நிக்கோலஸ் திடீரென வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் தாய் ஜூலியானா மற்றும் தங்கை கிசேல் உள்பட 3 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார் நிக்கோலசை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார். எனவே நிக்கோலசுக்கு 49 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
- சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த 9-ந்தேதி பக்கத்து வீட்டுக்காரருடன் வீரபனேனி குடேமில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 13-ந்தேதி உறவினருக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இதனை கவனித்த 15 வயது சிறுவன் மற்றும் ரசாக் என்ற வாலிபர் சிறுமியிடம் வந்து நைசாக பேசினர். பைக்கில் அழைத்து சென்று வீட்டில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய சிறுமி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்களின் நண்பர்களான அணில் குமார், ஜிதேந்திராவுக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர்களும் சிறுமியை வன்கொடுமை செய்தனர். அதன் பின்னர் அனித், ஹர்ஷவர்தன், கேசர்ப்பள்ளியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சிறுமியை 4 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
4 நாட்களுக்கு பிறகு சிறுமியை என்.டி.ஆர் மாவட்டம் மச்சாவரம் சாலையில் விட்டு தப்பி சென்றனர்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
இதையடுத்து போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது சம்பந்தமாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.