என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistance"

    தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருமங்கலத்தில் நடந்த விழாவில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளா் மணிமாறன் வழங்கினார்.
    திருமங்கலம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா    கொண்டாடப்பட்டது. திருமங்கலத்தில் உள்ள மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவ லகத்தில் கருணாநிதி படத்திற்கு  மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்காளன்பட்டி கிராமத்தில் தெற்குமாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சலவைபெட்டி, மளிகைபொருள்கள், அரிசி, மாற்றுதிறனாளிகளுக்கு நலஉதவிகள்  வழங்க ப்பட்டன. 

    இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், மாவட்ட பொருளாளர் பொடா நாகராஜன், மாவட்ட துணைசெயலாளர் சிவனாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,சாமிநாதன், லதாஅதியமான்  திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    மயிலாடுதுறையில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் 99 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்.எல்.. நிவேதா முருகன் வழங்கினார்.

    செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி படத்திற்கு மாலை மாலை அணிவித்து மாயாதை செய்தனர்.

    தொடர்ந்து சின்னூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளர் ஜி. சித்ரா மற்றும் திருக்களாச்சேரி உதவிபெறும் பள்ளி சத்துணவு சமையலர் எஸ்.சீதா ஆகியோர் பணியின்போது காலமானதை தொடர்ந்து அவர்களது குடும்ப வாரிசுகளுக்கு குடும்ப நல நிதியாக தலா ரூ.5 லட்சத்துக்கான ஆணைகள் வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் செம்பனார்கோவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் அவரது திரு உருவப் படத்திற்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், பரசலூர் வர்த்தக அணி சங்க தலைவர் பாலையா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருக்கடையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.மயிலாடுதுறையில் திமுக நகர செயலாளரும் நகர மன்ற தலைவருமான செல்வராஜ் தலைமையில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன் முன்னிலையில் கருணாநிதி பிறந்த நாள் விழா கிட்டப்பா அங்காடியில் நடைபெற்றது.

    இதில்பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஏழைகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் உணவுகள் வழங்கி கொண்டாடினர். இதில் நகர துணை செயலாளர் ஆர். கே. சங்கர் உள்ளிட்ட திமுக வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் தொடங்கி 50ம் ஆண்டு பொன்விழா நிறைவையும், 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்றார்.

    தலைமை கழக பேச்சாளர்கள் இடி முழக்கம் இளமுருகன், தீப்பொறி ராமலிங்கம் ஆகியோர் கட்சியின் வரலாறு தொடர்பாக விளக்க உரையாற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் எம்எல்ஏ பேசியபோது கூறியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தொடங்கிய கட்சியினை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்டிக் காத்து வருகிறார்.

    கட்சியின் பொன்விழா என்று நினைவாக இந்த கூட்டத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசியுடன் மீண்டும் அதிமுக வெற்றி நடை போடும்.

    விரைவில் தமிழகத்தின் ஆட்சியைப் கைப்பற்றும். இவ்வாறு கூறினார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் அமைப்பு செயலாளர் சிவா.இராஜமாணிக்கம், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், திருவாரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் எஸ்.கலியபெருமாள், மாவட்ட கழகப் பொருளாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் பி.கே.யூ.மணிகண்டன், செந்தில் வேல், திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதி, திருவாரூர் மாவட்ட ஒன்றிய துணைத் உள்ளிட்ட திருவாரூர் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்விழா என்று நினைவாக ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளிடம் கறந்த பாலை சேகரித்து விநியோகம் செய்து வருகிறார்.
    • பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருகிறார்.

    பூதலூர்:

    தமிழ்நாட்டில் பல்வேறு நிலைகளில் மாணவியர் தற்கொலை செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதில் பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    இந்த சூழ்நிலையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மாணவி ஒருவர் தற்போது மருத்துவம் படித்தாலும் தன் குடும்ப நலனுக்காகவும் தந்தையின்உதவிக்காகவும் விடுமுறை நாட்களில் வீடுகள் தோறும் மாடுகளை பால் கறந்து பாலை சேமித்து வீடுகள், தேனீர் கடைகளுக்கு வழங்கியும் வருகிறார். ஆணுக்கிங்கே இளைப்பில்லை‌ என்ற மகாகவி பாரதியாரின் கூற்றை நிரூபிக்கும் புதுமைப் பெண் இவர்.

    பூதலூர் ஒன்றியம் செல்லப்பன் பேட்டை கிராமம் வானம் பார்த்த பூமி. இந்த கிராமத்தில் உள்ள 2 ஏரிகள் நிரம்பினால் தான் இந்த கிராமத்தில் விவசாயம் நடைபெறும். இந்த கிராமத்தில் உள்ள விவசாயி நடராஜன்- செந்தமிழ் செல்வி தம்பதியரின் 2வது மகளாக பிறந்தவர் சூரியகலா (வயது21).

    2018ம் ஆண்டில் முழுவதும் தமிழ் வழியில் பயின்ற சூரியகலா யாருடைய உதவியும் இன்றி நீட் தேர்வை எதிர் கொண்டுள்ளார். அதில் 200 மதிப்பெண் பெற்று தனியார் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற போதிலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலை மனதில் கொண்டு யாரிடம் என்ன எப்படி கேட்பது என்று தயங்கிய நிலையில், இவருடைய உறவினர் ஒருவர் இவரை இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தரிடம் அழைத்துச் சென்று நிலைமையைகூறியுள்ளார். அவர் உடனடியாக பல் மருத்துவமனையில் இடம் கொடுத்து சில சலுகைகளையும் கொடுத்துள்ளார்.

    தற்போது சென்னையில் காட்டாங்குளத்தூரில் பல் மருத்துவமனையில் 4ம் ஆண்டு படித்து வரும் மாணவி சூரியகலா விடுமுறை நாட்களில் செல்லப்பன்பேட்டை கிராமத்திற்கு வரும்போது தனது தந்தையை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, தனது கிராமத்தில் காலையும், மாலையும் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மாடுகளை கறந்து பாலை சேகரித்து பூதலூர் வரை எடுத்து சென்று விநியோகம் செய்து வருகிறார்.

    இதுகுறித்து கேள்விப்பட்டு அவருடைய கிராமத்திற்கு சென்ற போது தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் பால் கறக்க வேகமாக சென்றவரை தொடர்ந்து போன போது அவர் ஒரு வீட்டில் வண்டியை நிறுத்திவிட்டு கன்று குட்டியை அவிழ்த்துவிட்டு அதை இழுத்துக்கட்டி விட்டு லாவகமாக கீழே உட்கார்ந்து பாலை கறக்கத் தொடங்கினார். கறந்து முடிந்ததும் வீட்டுக்காரர்களுக்கு தேவையான பாலை கொடுத்துவிட்டு மீதத்தை அளந்து அவரிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு பறந்து சென்றார்

    ஒவ்வொரு நாளும் காலை 50 லிட்டரும் மாலையில் 40 லிட்டருமாக தானே வீடுகள் தோறும் சென்று கறந்து அவற்றை விநியோகம் செய்து வருகிறார்.எட்டாம் வகுப்பில் இருந்து தனது தந்தைக்கு உதவியாக இந்த செய்து வருவதாக கூறும் சூரியகலா முதலில் இதைஎல்லாம் செய்ய வேண்டாம் என்று தடுத்த தந்தை, காலப்போக்கில் மாடுகளில் பால் கறப்பதற்கான எளிய உத்திகளை சொல்லிக் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் தான் முயற்சி செய்து தற்போது அதை வெற்றிகரமாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    தொடக்கப் பள்ளியில் படித்த போதும், அதன் பின்னர் உயர்நிலையில் பள்ளியில் படித்த போதும், அதனை தொடர்ந்து பல் மருத்துவமனையில் சேர்ந்த போதிலும் தனது பால் விநியோக வேலையை உற்சாகத்துடன் செய்து வருவதாக கூறும் சூரியகலா,

    தற்போது பயிலும் கல்லூரியில் பாரிவேந்தரின் தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளராக இருப்பதாகவும், கவிதை போட்டியிலும் பரிசு பங்கு பெற்று பரிசு பெற்றிருப்பதாகவும் கூறுகிறார்.

    பல் மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்கவும் உதவிகளை எதிர்பார்க்கும் இந்த மாணவி அதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஆனால் எது வந்தாலும் சமாளிப்பேன், தந்தைக்கு உதவியாக இருப்பேன் பல்மருத்துவத்திலும் சாதனை படைப்பேன் என்கிறார் எதிர் கால பல் மருத்துவர் விடுமுறை கால‌பால்கார சூரியகலா!!

    • கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில் பகுதி நேர நியாயவிலைக்கடை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று ரேசன்கடையை திறந்து வைத்தார். மேலும் 78 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.37.88 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 59 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    குடும்ப அட்டை தாரர்களின் சிரமத்தைப் போக்குவதற்காக 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாயவிலைக் கடைகளை பிரித்து தனியாக புதிய நிலைவிலைக்கடைகள் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டதற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதில், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி பாரதி நகரில், தற்போது செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையில் 454 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறப்பு பொது விநியோகப் பொருட்கள் மாதந்தோறும் உரிய அளவின்படி விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    கிருங்காக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அணை க்கரைப்பட்டி பகுதி நேர நியாயவிலைக்கடையில் பாரதி நகர் கிராமத்தில் 168 குடும்ப அட்டைகள் உள்ளன.

    பாரதி நகர் கிராமம் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசியப் பொருட்களை பெறும் வகையிலும், மகளிர் சுயஉதவிக் குழு கட்டிடத்தில் இயங்குவதற்கு பகுதிநேர நியாயவிலைக்கடையாக அமைக்கப்பட்டு, இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று, பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழக அரசால் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் கோ.ஜீனு, துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) குழந்தைவேல், சரகத்துணைப் பதிவாளர் (காரைக்குடி) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டாட்சியர் கயல்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவர் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.43 லட்சம் மதிப்பில் 2,328 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
    • விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 551 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,328 பயனாளி களுக்கு ரூ. 43 லட்சத்து 18 ஆயிரத்து 7 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கலைய ரங்கில் தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டு மானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்.குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.விழாவில் பதிவு பெற்ற கட்டுமான தொழி லாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைகவசம், முககவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின் பாதுகாப்பு காலணி, கையுறை (காட்டன்), ரப்பர் காலணி, மின் பாதுகாப்பு கையுறை, கண்கண்ணாடி, ரப்பர் கையுறை மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 743 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்து 7 ஆயிரத்து 954 மதிப்பீட்டிலும் , பதிவு பெற்ற அமைப்புசாரா ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சீருடை, காலணி, முதலுதவி பெட்டி மற்றும் பை அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் 1034 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 31 ஆயிரத்து 803 மதிப்பீட்டிலும் மற்றும் பதிவு பெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு கல்வி, ஓய்வூதியம், திருமணம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 551 பயனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 78 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் என மொத்தம் 2,328 பயனாளி களுக்கு ரூ. 43 லட்சத்து 18 ஆயிரத்து 7 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி), .பிரவீன் குமார், தொழிலாளர் இனை ஆணையர் . சுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணை யர் (ச.பா.தி.), மலர்விழி உள்ளிட்ட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி கலெக்டர் தேசியக்கொடிைய ஏற்றி, ரூ.1 கோடியே 55 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • றப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 55 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றிய 90 காவல்துறையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்கள் 457 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தின விழாவில் ரூ.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வழங்கினார்.
    • அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    75-வது சுதந்திர தின விழாவை கொண்டாட ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு இன்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து மூவர்ண பலூன் பறக்க விட்டு, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    காவல்துறையை சேர்ந்த 45 பேருக்கும், வருவாய்த்துறை, சமூக ஆர்வலர்கள் மாவட்ட அளவிலான துறை தலைவர்களுக்கான நற்சான்றிதழ் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் உள்பட 11 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 158 அலுவலர்களுக்கும், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழிட மேம்பாட்டு வாரியம், கலை பண்பாட்டுத் துறைகளின் சார்பில் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலையில்லா தையல் எந்திரங்கள், சலவைப்பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சத்து 81 ஆயிரத்து 451 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    மாணவ- மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயின்று வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வள மையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு, வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாற்று திறன் மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்றுநர்கள் அருள்ராஜா, சரவணன், இயன்முறை மருத்துவர் சுஷ்மிதா ஆகியோர் உபகரணங்களின் பயன்பாட்டினை பெற்றோர்களுக்கு விளக்கிக் கூறினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் முருகேசன், சியாமளா, பகல் நேர பராமரிப்பு மைய ஆசிரியர் வளர்மதி, உதவியாளர் வரதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழ்நாடு–பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார–மேம்பாட்டு கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான–சிறு தொழில் கடன், கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இதன் மூலம் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடன் பெற விரும்புபவர்கள் பிற்படுத்த ப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 60 வயது க்குள் இருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொதுகாலக் கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிக பட்சமாக ரூ.15 லட்சம் வரையும் பெண்களுக்கான–புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரைகடனுதவி–வழங்கப்படு கிறது.

    சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு–அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு–அதி கபட்சமாக ரூ.15 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க –வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதி க்கப்படுவார்கள்.

    சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவி க்குழுவில் உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு அதிக பட்ச கடன் தொகை ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு– ரூ.30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60 அயிரம் வரை கடனுத–வி வழங்கப்படுகிறது.

    மாவட்ட பி–ற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவுவங்கி–கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்திசெய்தவிண்ணப்பங்களைசம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் ஒப்படைக்க வேண்டும்.

    எனவே ஈரோ–டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சாதிச்சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்-திட்ட அறிக்கை மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி கோரும் ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    மேற்படி திட்டத்தில் பயன்பெற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக–விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி வழங்கப்பட்டது.
    • அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர் சி.ஐ.டி.யு. உறுப்பினர் ஆவார். அவர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு நலவாரிய நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதுபற்றி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.

    • பரமத்தி வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைந்து பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் பழனிவேல் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர்சோமசேகர் முன்னிலை வகித்தார். 14-வது வார்டு உறுப்பினர் முருகன், ஹேமாமாலினி, செம்பருத்தி ஆகியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும், வீல்சேர், தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முடிவில் பரமத்திவேலூர் மாற்றுத்திறனாளி நல சங்க செயலாளர் சதீஸ் நன்றி கூறினார்.

    ×