என் மலர்
நீங்கள் தேடியது "auction"
- கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது.
- எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் ஓவிய கலைஞர் எம்.எப்.ஹூசைன். இந்தியாவின் பிகாசோ என போற்றப்படும் உலக புகழ்பெற்ற இவர் உலகம் முழுவதும் கலை மற்றும் உரையாடல்களை ஊக்குவிக்கும் இந்தியாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
இவர் கடந்த 1954-ம் ஆண்டு வரைந்த பெயரிடப்படாத ஓவியம் (கிராம யாத்திரை) என்ற ஓவியம் அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 19-ந்தேதி நடைபெற்ற கிறிஸ்டி ஏலத்தில் பங்கேற்றது. சுதந்திர இந்தியாவின் பன்முக தன்மை மற்றும் சுறுசுறுப்பை கொண்டாடும் எம்.எப்.ஹூசைனி படைப்பாக கருதப்படும் இந்த ஓவியம் 13.8 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.119 கோடி) ஏலம் போய் உள்ளது. இது முந்தைய சாதனையான அமிர்தா ஷெர்-கில்லின் தி ஸ்டோரி டெல்லர் படத்தை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாகும்.

ரூ.119 கோடிக்கு ஏலம்போன ஓவியம்.
கடந்த 2023-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஏலத்தில் இது 61.8 கோடிக்கு ஏலம் போனது. இந்த சாதனையை தற்போது எம்.எப்.ஹூசைனின் படைப்பு முறியடித்துள்ளது.
ஏலத்தை நடத்திய நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், எம்.எப்.ஹூசைனின் படைப்புக்கு மிகப்பெரிய மதிப்பை அமைப்பதில் இது ஒரு பகுதியாக இருந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது ஒரு முக்கியமான தருணம் என்றார்.
இந்த ஓவியத்தை இந்தியாவின் முக்கிய கலை சேகரிப்பாளரான கிரன் நாடாரின் கலை அருங்காட்சியகம் (கே.என்.எம்.ஏ.) ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆர்.பி.ஜி. நிறுவன தலைவரும், கலை சேகரிப்பாளருமான ஹர்ஸ்கோயங்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எம்.எப்.ஹூசைனின் கிராம் யாத்திரா ஓவியம் ரூ.100 கோடி தடையை உடைத்து கிரன் நாடாருக்கு 13.8 மில்லியன் டாலருக்கு விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
- 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.
இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
தீபாவளி பண்டிகையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த தேங்காய் பருப்பு ஏலம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நேற்று 191விவசாயிகள் கலந்து கொண்டு93 ஆயிரத்து 118கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 76.65க்கும், குறைந்தபட்சம் ரூ.54க்கும் கொள்முதல் செய்தனர்.நேற்று மொத்தம் ரூ.62லட்சத்து 39ஆயிரத்து 823க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
- பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது
- ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பணமாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டவை உள்பட உரிமை கோரப்படாத இரு சக்கர வாகனங்கள்-251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-15 என மொத்தம் உள்ள 266 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வாகனங்கள் அனைத்தும் நெல்லை மாவட்ட அரசிதழில் கடந்த மே மாதம் 18-ந்தேதி வெளியிடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு முன்னீர்பள்ளம் மற்றும் தாழையூத்து போலீஸ் நிலையங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு அந்த வாகனங்கள் தாழையூத்து போலீஸ் நிலைய வளாகத்தில் வருகிற 14 மற்றும் 15-ந்தேதிகளில் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க விரும்புபவர்கள் முன்பண மாக ரூ.1000-யை நெல்லை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் வருகிற 12-ந்தேதி கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை முன்கூட்டியே வந்து பார்வையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
- மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.
அவினாசி:
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,121 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆா்.சி.ஹெச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,500 முதல் ரூ.9,999 வரையிலும், மட்டரக (கொட்டு ரக) பருத்தி குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.31 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
- கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்கள் 24-ந் தேதி ஏலம் விடப்படுகிறது.
- தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
மதுரை
தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி, மதுரையில் உள்ள அலுவலக வளாகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் இந்த அலுவலக வளாகத்தில் 24-ந் தேதி காலை 11 மணிக்குள் ரூ.1000/- முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள் காவல் வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜி.எஸ்.டி. விற்பனை வரியுடன் சேர்த்து 24-ந் தேதி உடனே செலுத்த வேண்டும்.
மேற்கண்ட தகவலை மதுரை தமிழ்நாடு சிறப்புகாவல் படை 6-ம் அணி தளவாய் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
- விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.
மூலனூர்:
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.
முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
- குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
- ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம்.
அவினாசி :
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பிரதிவாரம் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு புளியம்பட்டி, அன்னூர்,சேவூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1918 முட்டை பருத்தி வந்தது.
இதில் ஆர்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் மட்டரகப் பருத்தி குவின்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ .49 லட்சத்து 44 ஆயிரம். இந்த தகவலை சங்க மேலாண்மை இயக்குனர் மோசஸ் ரத்தினம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
- ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
- ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் ஒன்றியத்தில் அக்கரைப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்பிடிக்க, ராசிபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை (நீர் வளம்) அலுவலகத்தில் ராசிபுரம் கோட்ட உதவி செயற்பொறியாளர் பார்த்திபன், பொறியாளர் ரஞ்சிதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.
இதில், ரூ.56,950-க்கு அடிப்படை குத்தகை உரிமம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஏலத்தில் கலந்து கொண்டவர்களில் அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அதிக தொகையான ரூ.3,01,100-க்கு ஏலம் எடுத்து மீன் பிடிக்க குத்தகை உரிமத்தை பெற்றார்.
- சோளம்-பாசிப்பயிறு ஏலம் நடந்தது.
- மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருமங்கலம்
திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குளத்துவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயா என்ற பெண் விவசாயியின் 266கிலோ இருங்குசோளம் மறைமுக ஏலத்திற்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.37.25-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.9,909க்கு வர்த்தகம் நடந்தது.
லாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 2.501 கிலோ பாசிப்பயிறு அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.72.50 க்கும் குறைந்தபட்சமாக கிலோ ஒன்றிற்கு ரூ.71-க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 889-க்கு வர்த்தகம் நடந்தது. இங்கு வேளாண் விளைபொருள் வரத்து அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சராலும், வேளாண் உற்பத்தி ஆணையராலும், வேளாண் விற்பனைத் துறை இயக்குநராலும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமானது மின்னணு தேசிய வேளாண் சந்தையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேசை 90251 52075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ் சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக்கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக் குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். ஏலத்தில் 142 மஞ்சள் மூட்டைகள் ரூ.6 லட்சத்திற்கு ஏலம் போனது.
இதில் விரலி ரகம் 100 மூட்டைகளும், உருண்டை ரகம் 40 மூட்டைகளும், பணங்காளிரகம் 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6020 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7032-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.5902-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6142-க்கும், பணங்காளி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.2012-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8542-க்கும் ஏலம் விடப்பட்டது.
- தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
- 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-க்கு ஏலம் போனது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.
ஆனால் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும், அதனை, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாகத் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தொடக்க நிகழ்வு அங்கு நடைபெற்றது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்து ஏலத்தைத் தொடங்கி வைத்தார். வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர்வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ் பாபு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்கள் தாட்சியாயினி, முருகானந்தம், விளம்பர மற்றும் பிரசார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், பாபநாசம் உழவர் சந்தை வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன், கும்பகோணம் வேளாண்மை அலுவலர் தாரா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஏலத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, இலுப்பக்கோரை, கணபதி அக்ரகாரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலிருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர். இதில் திருச்சி, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியிலிருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-ம், குறைந்த பட்சமாக ரூ. 950-ம், சராசரியாக ரூ, 1100 என விலை ஏலம் தொகையாகக் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கான தொகை வழங்கப்பட்டது.
- கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது.
- இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளான அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, செவ்வந்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குண்டு மல்லிகை பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மல்லிகை பூ செடிகளை பட்டம் மாறுவதற்காக விவசாயிகள் கடந்த மாதம் வெட்டி விட்டனர். இதனால் மிக குறைந்த அளவிலேயே மல்லிகை பூ செடிகளில் இருந்து பறிக்கப்பட்டு ஏலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எருமைப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதால் கடந்த 4 நாட்களாக மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000 வரை ஏலம் போனது. இனி வரும் நாட்களிலும் இந்த விலை உயர்வு நீடிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மல்லிகை பூ செடி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மல்லிகை பூ செடிகள் பட்டம் மாறுவதற்காக கடந்த மாதம் வெட்டி விடப்பட்டது. தற்போது செடிகள் பூக்கும் நிலைக்கு வராமல் உள்ளன. மேலும் இந்த பகுதியில் பனியின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மல்லிகை பூ வரத்து முற்றிலும் குறைந்தது.கடந்த மாதம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோ வந்த மல்லிகை பூக்கள், தற்போது ஒரு கிலோ கூட வரவில்லை. இதனால் நேற்று வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் ஒரு கிலோ மல்லிகை பூவை ரூ.2000-க்கு ஏலம் எடுத்து சென்றனர். இனிவரும் நாட்களிலும் இந்த விலை நீடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.