search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avoid conflicts"

    • திருவிழா காலங்களில் ஏற்படும் மோதல்களை தவிர்க்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தப்பட்டது.
    • தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் கண்காணிக்க வலியுறுத்தல்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்களில் உள்ள கோவில்களில் திரு விழாக்கள் மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெறுவது வழக்கம்.

    குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களில் நடக்கும் திருவிழாக்களின்போது இருதரப்பினரிடையே ஏதேனும் ஒரு சிறிய பிரச்சினை பூதாகரமாக வெடித்து மோதல் ஏற்படும் நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களின்போது ஏற்படும் தகராறுகளை தனிப்படை போலீசார், வருவாய்த்துறையினர் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றாற்போல் பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோவில் திருவிழாக்களில் மோதல் ஏற்படும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகாசி அருகே உள்ள சொக்கலிங்காபுரத்தில் கோவில் திருவிழா வின்போது மோதல் ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் ராஜ பாளையத்திலும் திருவிழா ஊர்வலத்திலும் வன்முறை வெடித்தது.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தனிப்பிரிவு போலீசார் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட்டு பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதற்கு உயரதி காரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அப்போது தான் விருதுநகர் மாவட்டத்தில் கோவில் திருவிழாக்களில் நடக்கும் மோதல்கள் தடுக்கப்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×