search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bahraich riots"

    • பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது.

    உத்தர பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலைகளை கரைக்கும் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைகலப்பு மற்றும் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுங்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் அமைதி திரும்பியது. இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று காலை கலவரம் வெடித்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

    மேலும் கடைகள் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தினர். இதுமட்டுமல்லாமல் மருவத்துவமனைகளுக்குள் புகுந்து படுக்கைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர்.

    வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×