என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bakthi Songs"
- கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
- நவராத்திரி நாட்களில் கோவில்களில் சாமி விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சுவாமிமலை:
முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் நவராத்திரி விழாவினை முன்னிட்டு, வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மைகள் கடைகளில் விற்பனைக்கு தயார்.
தமிழர்கள் கலை பண்பாடு, கலாச்சாரத்துடன் நாகரீகம், விருந்தோம்பல், பண்புகளை உள்ளடக்கி கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று 10 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரிப் பெருவிழா.
மும்பெரும் தேவியரையும் தலா மூன்று நாட்கள் வீதம் 9 நாட்களுக்கு கொண்டாடி நிறைவாக, பத்தாம் நாளை வெற்றி நாளாக கருதி, விஜயதசமி நாளான அன்று, கல்வி உள்ளிட்ட, சகல விதமான கலைகளை துவக்கவும், சிறந்த நாளாக கருதப்படுகிறது, வழக்கம்
இவ்விழா, புரட்டாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் பிரதமை திதியில் இருந்து தசமி திதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறும்.
இவ்வாண்டு விழா வருகிற 26ம் தேதி தொடங்கி, அக்டோபர்5ம் தேதி புதன்கிழமை வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்நாட்களில், கோயி ல்களில் சுவாமிகளுக்கு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் அதே வேளையில், ஏராளமானோர் தங்கள் வீடுகளில் 5 படி, 7படி, 9படி, 11படி என பல்வேறு எண்ணிக்கையிலான படிகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரி நாட்களில் பக்தி பாடல்கள் பாடி, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி மகிழ்வர்.
இந்நிலையில் கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரத்தில் தினேஷ் என்பவர், இந்த நவராத்திரி கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மரபொம்மைகள், பேப்பர் பொம்மைகள், மிக சிறியது முதல் 3 இன்ஜ் முதல் 7 அடி உயரம் கொண்ட பலவிதமான உயரங்களில் ரூ. 10 முதல் ரூ. 7 ஆயிரம் மதிப்பிலானவை விற்பனைக்கு வைத்துள்ளார்
இவை தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது/ இங்கு, 63 நாயன்மார்கள் செட், தசவதாரப்பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள் சமயபுரம் மாரியம்மன், சிவபெருமான், கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர், திருமண செட், ராமாயண செட், மகாபாரத செட், இசை கலைஞர்கள் செட், உள்பட பல்பவேறு வகை பொம்மைகளை விற்பனைக்காக வைத்துள்ளார்.
இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்