என் மலர்
நீங்கள் தேடியது "banned"

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை கள்ளழகர் கோவில் மற்றும் கோவிலைச் சேர்ந்த மலைப்பகுதியில் மது அருந்த தடை விதித்து உத்தரவிட்டனர். கோவில் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகப்படிகள் உள்ளன? எவ்வளவு சொத்துக்கள் உள்ளன? அவற்றை நிர்வகிப்பது யார்? எவ்வளவு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து பிப்ரவரி 26-ம்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையும் பிப்ரவரி 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Kallalagartemple #MaduraiHC
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய எளிதில் மக்கும் தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் ஓட்டல்களில் பார்சல் வாங்கும் போது சாம்பார், ரசம், மோர், காய்கறி போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கப்பட்டு வந்தது. அவை அனைத்தும் பிளாஸ்டிக் பைகளிலேயே வினியோகம் செய்யப்பட்டது.
தற்போது அதற்கு மாற்றாக ஓட்டல்கள் அனைத்திலும் மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் குவளைகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைகள் விலை உயர்வு என்பதால் பார்சல் கட்டணமும் உயர்ந்துள்ளது.
பஸ் நிலையம் அருகே உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் இது போன்ற பைகளே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒரு பார்சல் சாப்பாடு ரூ.80 என இருந்த நிலையில் தற்போது ரூ.105 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் காலை சிற்றுண்டியும் மாற்று பிளாஸ்டிக் பைகளுடன் சேர்த்து ரூ.5 முதல் ரூ.10 வரை விலை அதிகரித்துள்ளது.
இது குறித்து ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தற்போது எளிதில் மக்கும் தன்மை கொண்ட அரசால் சான்று பெற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை உயர்வு என்ற போதும் வாடிக்கையாளர்கள் இதனை வாங்கிச் செல்கின்றனர்.
அடுத்த முறை வரும் போது பாத்திரம் எடுத்து வருவதற்கும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கிறோம். சிறிய ஓட்டல்களில் நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு மிகுந்த சுமையை ஏற்படுத்தும். அவர்களும் விரைவில் பழைய நிலைக்கே பாத்திரம் கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்ல பழகிக் கொள்வார்கள் என்றனர்.
ராமநாதபுரம்:
மன்னார் வளைகுடா பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல்சீற்றம் காரணமாக கடலுக்கு செல்லும் மீன்பிடி படகுகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து ராமநாதபுரம் பகுதிக்கு மீன் வரத்து குறைந்துள்ளது. நாட்டுப் படகுகளில் கொண்டு வரப்படும் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் அசைவ பிரியர்கள் காய்கறி கடைகளை தேடி செல்கின்றனர்.
ராமநாதபுரம் நகர் பகுதிக்கு தினந்தோறும் கீழக்கரை, ஏர்வாடி, ராமேசுவரம், மண்டபம், பாம்பன், வாலிநோக்கம், முந்தல் பகுதியிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகிறது. ராமநாதபுரம் சாலை தெரு, பாரதி நகர் பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்பு வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக அடிக்கடி புயல் மையம் கொண்டது. இதனால் கடல் சீற்றமாக இருந்தது.
இதையடுத்து மீன்வர்கள் கடலுக்கு செல்ல அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமநாதபுரம் நகர் பகுதிக்கு மீன் வரத்து குறைந்தது. தொடர்ந்து மார்க்கெட்டில் மீன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது கடல்சீற்றம் குறைந்து காணப்படுகிறது. மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது நாட்டுப் படகிலும் குறைந்த அளவு மீன்களே வரும் நிலையில் அவைகள் ராமநாதபுரம் நகர் பகுதியில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. வரத்து குறைவால் அசைவ பிரியர்கள் வேறு வழியில்லாமல் கூடுதல் விலை கொடுத்து அதிருப்தியுடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
மீன் மார்க்கெட்டில் வெளமீன், கிலக்கான், மாவுளா, போன்ற மீன்கள் கிலோ ரூ.300க்கும், முரல் மீன் கிலோ ரூ.300 வரையிலும், கும்ளா மீன் ரூ.250 வரையிலும், நண்டு, இறால் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்களின் பார்வை காய்கறி கடைகளின் பக்கம் திரும்பி உள்ளது.

1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.
இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! என குறிப்பிட்டார்.
ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் மூலமாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். யூதர்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப்போவதாக நேரடியாகவே மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இவை எல்லாம் பேஸ்புக் போலீஸ் கண்களில் படவில்லை.
கருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார். #IsraelPM #YairNethanyahu #Facebookbanned
விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் வி.வி.எஸ்.யோகன், முதல்- அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் ஆணை எண் 84-ன்படி குறு மற்றும் சிறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருட் கள் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இல்லை. இதனால் குறு, சிறு நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை தடுக்க வாய்ப்பு இருக்காது. பிற மாநிலங்களில் தடை இல்லாமல் தமிழகத்தில் மட்டும் தடை செய்வதால் நம்முடைய உற்பத்தி மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். அதிலும் பிளாஸ்டிக் உற்பத்தியை வாழ்வாதாரமாக கொண்டுள்ள சிறு நிறுவனங்களும் அவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். தமிழகத்தில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுக்கும் முறையை முழுமையாக செயல்படுத்திட வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான பிளாஸ்டிக் தார்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. இவைகளை நிறைவேற்றுவதால் கழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து மாசு ஏற்படுவதை தடுக்க முடியும்.
எனவே பொதுமக்கள் நலனிலும், குறு,சிறு நிறுவனங்களின் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு அமல்படுத்த உள்ள தடையை உடனடியாக செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்து அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து பெங்களூருவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பின்னர் நகர மேம்பாட்டு துறை மந்திரி யு.டி.காதர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் உள்ள அம்சங்களை மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுபான விடுதி, உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் ஏற்கனவே புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் வரி இல்லாத கடைகளில் மதுபானம் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது. புகையிலை பொருட்கள், மதுபானம் மீதான வரி சலுகையை திரும்ப பெற அரசு ஆலோசித்து முடிவு எடுக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, மாநில அரசு கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 30-க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும் மதுபான விடுதி, உணவகம், கேளிக்கை விடுதிகளில் புகைப்பிடிக்க தனியாக இடம் ஒதுக்க சட்டத்தில் இடம் உள்ளது. இருப்பினும் அங்கு 18 வயது நிரம்பாதவர்கள், புகைப்பழக்கம் இல்லாத பொதுமக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். புகைப்பிடிக்க ஒதுக்கும் இடத்தில் மதுபானம், அனைத்து வகையான தின்பண்டங்களை விற்கக்கூடாது. தனியாக இடம் ஒதுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, தீயணைப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ‘கஜா’ புயல் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த புயலானது கடலூர்-பாம்பனுக்கு இடையே நாளை மறுநாள் (15-ந்தேதி) கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. நாகர்கோவில், சுருளோடு, ஆரல்வாய்மொழி, மயிலாடி, கொட்டாரம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் கனமழை கொட்டி தீர்த்ததால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சிற்றாறு-2-ல் அதிகபட்சமாக 41 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
கஜா புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் 48 மணி நேரம் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள பங்கு தந்தைகள், மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி கடல் பகுதியில் இன்று 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென்று எச்சரிக்கை வந்துள்ளது. இதையடுத்து மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் 2 நாள் கடலுக்கு செல்லக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். #GajaCyclone #GajaStorm #Fishermen
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ‘உன்னத உதகை‘ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தவிர மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்வோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் முன்னாள் ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், பறிமுதல் செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கான ரசீது வினியோகிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், நீலகிரி மாவட்ட வியாபாரிகள் துணிப்பை பயன்பாட்டுக்கு மாறி இருக்கின்றனர். தங்கள் கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை துணிப்பையில் போட்டு கொடுத்து வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. துரித உணவகங்களில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள், தேநீர் விற்பனை நிலையங்களில் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் எளிதில் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளில் உணவு பொருட்கள் பேக்கிங் செய்து தரப்படுகின்றன. மேலும் பேக்கிங் செய்வதற்கு செய்தித்தாள்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தவிர கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் துணிப்பைகளை கொண்டு வருவதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான மாவட்ட நிர்வாகம் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது.
மேலும் தமிழக அரசும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே அமிர்தியில் சிறு வன உயிரின பூங்கா உள்ளது. ஜவ்வாது மலைத்தொடரில், இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதலை, மான், முள்ளம்பன்றி, நரி, பாம்பு வகைகள், மயில், வெள்ளை மயில் உள்ளிட்டவைகள் உள்ளன.
இந்த பூங்காவை உரசியபடி பீமன் நீர்வீழ்ச்சி எனும் கொட்டாறு செல்கிறது. ஜவ்வாதுமலையில் இருந்து உருவாகும் இந்த மழைநீர் ஓடைக்கால்வாய்கள் மூலமாக அமிர்தி நீர்வீழ்ச்சி வழியாக நாகநதி ஆற்றுக்கு செல்கிறது. இயற்கை அழகுடன் அமைந்துள்ள இந்த அமிர்திக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வந்து வன உயிரின பூங்காவை பார்வையிடுவதுடன், நீர்வீழ்ச்சியில் குளிக்கவும் செய்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பசுமையுடன் அமைந்துள்ள அமிர்திக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அரிய வகை பறவைகள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் அமிர்தி காட்டில் அரியவகை பறவைகள் இடம் பெயர்ந்ததுடன், கூடும் கட்டியுள்ளது. இந்த கூடுகளில் பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து உள்ளது.
இதனை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களாக அமிர்திக்கு வரத்தொடங்கியுள்ளனர். உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த அமிர்தி வனக்காட்டில் பறவைகளை பார்வையிட்டு, ஆராய்ச்சி கட்டுரைகளும் தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அமிர்திக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கவும், மேளம் அடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமிர்தி வனச்சரக அலுவலர் ராஜா தெரிவித்தார்.
2 அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகளை குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகள் எப்.டி.சி. மருந்துகள் என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துகளை இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சோதனை செய்தது. அப்போது 344 வகையான மருந்துகள் குறிப்பிட்ட விகித சேர்க்கை இன்றியும், அலட்சியமாகவும் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மருந்துகளால் உடல் நலத்துக்கு கேடு என்பதால் கடந்த 2015-ம் ஆண்டு அவை தடை செய்யப்பட்டன. இதை எதிர்த்து சில மருந்து நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த மருந்துகளின் தயாரிப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்யுமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.

அதன்படி இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்தின் சிறப்பு வல்லுனர் குழு மீண்டும் இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 328 வகையான மருந்து தயாரிப்பில் மேற்படி மோசடிகள் நடைபெறுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எனவே அந்த மருந்துகளை தடை செய்யுமாறு நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து அந்த மருந்துகளை தயாரித்தல், விற்பனை மற்றும் வினியோகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகள் பெரும்பாலும் வலி நிவாரணிகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கிருமி நாசினிகள் ஆகும். இதில் பிரபல தலைவலி மாத்திரையான சாரிடானும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை தவிர மேலும் 6 எப்.டி.சி. மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. #Saridon #CombinationDrugs #Banned #Govenment