search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "behalf of"

    • வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
    • தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வில்லியனூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜெயலலிதா உருவ படத்துக்கு தெற்கு மாநில செயலாளர் யூ.சி.ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் அரி கிருஷ்ணன், இணைச் செயலாளர் லாவண்யா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நந்தகோபால், ஜெ.பேரவை செயலாளர் காண்டீபன், தொழிற்சங்க செயலாளர் சுரேஷ் சிறு பான்மை பிரிவு செயலாளர் ஜான்சன் மகளிரணி புஷ்பா, தொகுதி செயலா ளர்கள் செந்தில் என்ற குமாரவேல், தனவேலு, செல்லா என்ற தமிழ்செல்வன், ராமசந்திரன், கலியமூர்த்தி, முருகன், கட்சி நிர்வாகிகள் சிவகுமார், சண்முகம், பிரவீன், மோகன், சபா, அய்யனார், வாசு, சரளா, அமலா, உமா, பூங்காவனம், சந்திரா மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    ×