search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    இந்தியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த அமரர் ‘பாரத ரத்னா’ அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் சில சிறப்புகளை அவரது பிறந்தநாளான இன்று நினைவுகூர்வோம். #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 25-12-1924 அன்று பிறந்த அடல் பிஹாரி வாஜ்பாய், வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து, இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அன்றுமுதல் தீவிரமாக தன்னை பொதுசேவையில் ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி. ஆனார்.

    அவரது பேச்சாற்றலை கண்டு வியப்படைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, 'என்றாவது ஒரு நாள் வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக வருவார்' என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 1970-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை சட்டம் (மிசா) பிரகடனப்படுத்தப்பட்டபோது, அதனை எதிர்த்துப் போராடி, கைதாகி, சிறைச் சென்ற முக்கிய அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார்.

    பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்த வாஜ்பாயின் பெயர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியலோடு ஒன்றிணைந்த பெயராகவே மாறிப்போய் விட்டது. அவரது சேவையை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசு 1992-ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்திருந்தது.

    திருமணமே செய்து கொள்ளாமல் முழுநேர அரசியல்வாதியாக வாழ்ந்த அவர், இந்தியாவின் 10-வது பிரதமராக 16-5-1996 அன்று பதவி ஏற்றார். எனினும், பாராளுமன்றத்தில் போதுமான எம்.பி.க்களின் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.

    பின்னர், 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து, இரண்டாவது முறையும் பிரதமராக அவர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மற்றும் கொள்கை முரண்பாடுகளின் விளைவாக இந்த முறையும் 13 மாதங்கள் மட்டுமே பிரதமராக அவர் பதவி வகிக்க முடிந்தது.

    அதன் பிறகு, அடுத்த ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 1999-ல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 303 எம்.பி.க்.களுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. இதனையொட்டி, 13-10-1999 அன்று மூன்றாவது முறையாக அவர் இந்தியாவின் பிரதமர் ஆனார்.

    இம்முறை, முழுமையாக ஐந்தாண்டுகாலம் தனது பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இதன் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையையும் உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.

    தங்க நாற்கர விரைவு நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக இந்தியாவின் உள்கட்டமைப்பையும் அவர் மேம்படுத்தினார்.

    தேர்ந்த அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி என புகழப்படும் வாஜ்பாய் கவிதைகள் எழுதும் கலையிலும் கைதேர்ந்து விளங்கினார்.



    2004-ம் ஆண்டு தனது ஐந்தாண்டுகால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், அரசியலில் இருந்து விலகுவதாக 2005-ல் அறிவித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பூரண ஓய்வில் இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 2015-ம் ஆண்டு நாட்டிலேயே மிகவும் உயரியதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.

    மரபுகளை எல்லாம் கடந்த வகையில் அந்நாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.

    அடல் பிஹாரி வாஜ்பாய்(94) கடந்த 16-8-2018 அன்று உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். முழு அரசு மரியாதையுடன்  நடைபெற்ற இறுதி ஊர்வலத்துக்கு பின்னர் ராஷ்டரிய  ஸ்மிரிதி ஸ்தல் திடலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    டெல்லியில் எரியூட்டப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய ஆறுகளில் கரைக்கப்பட்டது.

    அவரது 94-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் வாஜ்பாயின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டு அவரது புகழுக்கு இந்திய அரசின் சார்பில் மணிமகுடம் சூட்டினார்.

    இந்நிலையில், வாஜ்பாயின் பிறந்தநாளான இன்று அமரர் வாஜ்பாய் தொடர்பான நினைவுகளையும் அவரது தனிச்சிறப்புகளையும் குறிப்பிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  #Vajpayee #Vajpayeebirthday #Vajpayeetribute 
    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவை பிரசாத் பாண்டியன், துரைக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
    தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவ. 7-ந்தேதி வருகிறது.

    இந்த நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு நலத்திட்ட உதவிகள் செய்யுமாறு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கேக் வெட்டுதல் உள்ளிட்ட ஆடம்பர செலவுகள் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

    கமல்ஹாசன், பள்ளி மாணவிகள் 2 பேருக்கு படிப்பை தொடர நிதி உதவி வழங்கினார்.


    சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தங்கராஜ், கேரளாவுக்கு விற்பனைக்கு துணிகளை அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார். சமீபத்தில் கேரளா வெள்ளத்தால் பெரும் அவதிக்குள்ளான தங்கராஜ், 12-ம் வகுப்பு படித்து வந்த மகள் தமிழரசிக்கும், 11-ம் வகுப்பு படித்து வந்த மகள் வைஷ்ணவிக்கும் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தார். இதன் காரணமாக, இருவருமே படிப்பை பாதியில் நிறுத்தினர்.

    மாணவிகள் இருவரும் யோகா, பேச்சுப்போட்டி, விளையாட்டு என்று பல துறைகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்று இருந்ததாக செய்தி வெளியானது.

    மாணவிகள் படிப்பை நிறுத்திய தகவலறிந்த கமல் ஹாசன், இருவரையும் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு வரவழைத்து நிதியுதவி வழங்கியதோடு, படிப்பை தொடர வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 53வது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவு முதலே அவரது வீட்டை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மும்பை:

    பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இன்று 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு முதலே அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

    ஷாருக் கான் தற்போது நடித்து வரும் ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது.

    இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஷாருக் கானுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறிய வண்ணம் உள்ளனர்.



    இந்நிலையில், மும்பையில் உள்ள மன்னாட் பகுதியில் வசித்து வரும் ஷாருக் கான் வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கிலான ரசிகர்கள் குவிய தொடங்கினர்.

    ரசிகர்கள் கூடியதை அறிந்த ஷாருக் கான், தனது வீட்டின் பால்கனிக்கு வந்து நின்றார். அங்கிருந்து தனது ரசிகர்களை பார்த்துக் கையசைத்து வாழ்த்து பெற்றார். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. #HappyBirthdaySRK
    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் ஜெயமணி செய்திருந்தார்.



    மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த விழாவில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி தாளாளர் கிறிஸ்து ராஜா, கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் சாலமன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல திருப்பத்தூர் அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமிர்பாதுஷா அப்துல் கலாமை பற்றிய அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்து கூறினார். பள்ளி முதல்வர் கவிதாமேரி வரவேற்றார். இதில் அப்துல்கலாமை பற்றி பாடல்கள் பாடப்பட்டன. பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஹேமலதா வாழ்த்தி பேசினார். முடிவில் ஆசிரியை முத்துக்குமாரி நன்றி கூறினார்.

    கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி விக்டர் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ‘விஷன்2020‘ என்ற தலைப்பில் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் சிவராஜ், கல்வியாளர் ரங்கசாமி, முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் தலைவர்கள் ஜெப்ரீ, முத்துமீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கியும், 1,800 மாணவ- மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா உள்பட 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் முகாமில் பணியாற்றினர். இதில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குனர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி, காளிதாஸ், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முகாம் அமைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார். 
    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். #GandhiJayanti #MahatmaAt150 #NarendraModi #RahulGandhi
    நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 (இன்று) காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

    டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



    அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்

    மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் பலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். #GandhiJayanti #MahatmaAt150 #NarendraModi #RahulGandhi
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், வலிமையுடனும் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு சேவையாற்ற பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்தில் தெரிவித்துள்ளார். #RamNathKovind #Edappadipalaniswami
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #RamNathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்தவண்ணம் உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

    பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். அதில், ‘ஜனாதிபதியின் ஞானம் மற்றும் பல்வேறு விஷயங்களில் அவரது செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது. நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

    மதிப்பிற்குரிய ஜனாதிபதிக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதேபோல் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிருதி இரானி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஜனாதிபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். #RamNathKovind
    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #SivanthiAditanar
    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 83-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி போயஸ் கார்டனில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ‘மாலைமலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், பா.ஆதவன் ஆதித்தன், மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

    தினத்தந்தி, மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினர்.

    மேலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்தவர்கள் விவரம் வருமாறு:-



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. எம்.பி. கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், த.மா.கா. மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், டாக்டர் கருணாநிதி, முன்னாள் எம்.எல்.சி. கடலூர் எல்.ஜெயச்சந்திரன், தண்டு பத்து ஜெயராமன், முல்லை ராமராஜன், காயாமொழி முருகன் ஆதித்தன்.



    சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஆர்.சி.பால்கனக ராஜ், மெர்க்கண்டைல் வங்கி முன்னாள் இயக்குனரும் இந்திய நாடார்கள் கூட்டமைப்பின் தலைவருமான ராஜ்குமார், எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன்.

    அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கவிஞர் காசி முத்துமாணிக்கம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், சிம்லா முத்துச்சோழன்.

    காங்கிரஸ் மாநில பொருளாளர் நாசே.ராமசந்திரன், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரூபி மனோகரன், எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகர், டி.நகர் பகுதி தலைவர் நாச்சிகுளம் சரவணன்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஆதித்தன், தொழில் அதிபர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நெல்லை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் தோப்பு மணி, மாநில நிர்வாகக் குழு இயக்குனர் காயல் இளவரசு, மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.நாசர், தென்காசி ஆல்பா பீர்முகமது, திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் முல்லைராஜா, தொழில் அதிபர் முல்லை பிரைசன், வடசென்னை மாவட்ட நற்பணி மன்ற செயலாளர் ஜி.ராபர்ட், ஆர்.கே.நகர் நற்பணி மன்ற தலைவர் திராவிட சக்கரவர்த்தி.

    அசோக்நகர் கிளை செயலாளர் பொன். அருணாசல பாண்டியன், துணை செயலாளர் ஸ்ரீதரன் பாண்டியன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, அணியாபூர் நற்பணி மன்ற அமைப்பாளர் மணலி ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுக் குழு தலைவர் சாமிநாதன், செயலாளர் சீனிவாசன்.

    பெரம்பூர் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் பத்மநாபன், செயலாளர் செல்வம், பொருளாளர் தாமோதரன், ஆலோசகர் ரெங்கசாமி, தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், கூடுதல் பொதுச்செயலாளர் மாரிதங்கம், மாநில துணை தலைவர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரன், செயலாளர் தங்கதுரை, மாடசாமி, தென்சென்னை மாவட்ட தலைவர் இம்மானுவேல், மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர், வடசென்னை இளைஞர் அணி தலைவர் கனகராஜன், தயானஷ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் சிதம்பரம்.

    பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க தலைவர் காளிதாஸ், பொதுச் செயலாளர் தனம் என்ற ராமச்சந்திரன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் அ.முத்துக்குமார், எழில் நகர் நாடார் சங்க தலைவர் மாடசாமி, அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் தலைவர் தங்கபெரு மாள், ஆர்.கே.நகர் ஆதித்தனார் முரசு கணேசா.

    நந்தம்பாக்கம் நாடார் சங்க தலைவர் ஆர்.வி.கணேசன், ஆலந்தூர் நாடார் சங்க தலைவர் கணேசன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் லட்சுமணன், துணை தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் ஆர்.ஏ.கதிரேசன், நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், சென்னை புறநகர் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரே சன், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார், துணைத் தலைவர் பூபாண்டியன், பால்ராஜ், தென்னிந்திய நாடார் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாநில இளைஞர் அணி தலைவர் விஜயகுமார், உமரிசங்கர், அகில இந்திய நாடார் சக்தி தலைவர் விஜயா சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சண்முக பாலாஜி, தமிழ்நாடு நாடார் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் மார்க்கெட் ராஜா. #SivanthiAditanar
    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவித், நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #HappyBdayPMModi #HappyBirthDayPM
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார். மோடி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மோடியின் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயார் ஹிராபாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி. இந்த ஆண்டு வாரணாசியில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் அவர் பின்னர் காசி விஸ்வநாதர் ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிக்க உள்ளார்.

    வாரணாசி சுற்றுப்பயணத்தின்போது பாபத்பூர்-ஷிவபூர் சாலை விரிவாக்கம், ரிங் ரோடு-2 மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சில திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி சுற்றுப்பயணத்தை முன்னிட்ட வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன. #HappyBdayPMModi #HappyBirthDayPM 
    புதுவையில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். #narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசின் சார்பில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சதுக்கத்தில் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

    தொடர்ந்து, மும்மத பிரார்த்தனை நடந்தது. பாரதிதாசன் பல்கலைக்கூட மாணவிகள் தேசபக்தி பாடல்கள் பாடினர். முதல்- அமைச்சர் நாராயணசாமி உறுதிமொழி வாசிக்க அதனை பின்தொடர்ந்து மற்றவர்கள் எடுத்துக் கொண்டனர்.

    விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான் கமலக்கண்ணன், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக் கொழுந்து எம்எல்ஏக்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி.

    முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், துணை தலைவர்கள் விநாயக மூர்த்தி, தேவதாஸ், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், தனுசு, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா, தாழ்த்தப்பட்டோர் பிரிவு தலைவர் வீரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். #narayanasamy #rajivgandhibirthday

    பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவை நேற்று சந்தித்த டி.டி.வி. தினகரன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். #Sasikala #TTVDhinakaran #Birthday
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில், நேற்று சசிகலாவுக்கு பிறந்தநாள் ஆகும்.

    இதையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் தனது மனைவி அனுராதா மற்றும் குடும்பத்தினருடன் நேற்று பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு வந்தார்.

    பின்னர், அவர்கள் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்த சந்திப்புக்கு பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. தமிழகத்தில் ஏரி, குளங்களை தூர்வார தமிழக அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த பணம், தூர்வாரும் பணி என்ற பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். இதற்கு மாறாக, தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படும் என கூறுவது எந்த விதத்தில் நியாயம்.

    காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு ஒருபோதும் செய்யாது.

    ஊழல் செய்வதற்கான ஒரு திட்டம் என்று கூறினால் அது தமிழக அரசின் தூர்வாரும் திட்டம் தான். தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் குக்கர் சின்னம் தான் வெற்றி பெறும். சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு எப்போதோ முடிந்திருக்க வேண்டியது. கால சூழலால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. நீதிமன்ற கருணையால் தமிழகத்தில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sasikala #TTVDhinakaran #Birthday 
    ×