search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boyce Garden"

    • அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள்
    • திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள்

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    நான் நடப்பதை எல்லாம் பொறுமையாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எம்.ஜி. ஆர் என்னுடன் பல அரசியல் விவகாரங்களை பேசியிருக்கிறார். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்து வருகிறது.

    அதிமுகவில் ஒரு சாதாரண ஏழைகூட எம்எல்ஏ ஆகலாம், எம்பி ஆகாலாம் இது நமது கட்சிக்கு உள்ள முறைகள். ஆனால் திமுகவில் எல்லோரும் உழைக்கணும், எல்லோரும் வேலை செய்யணும் ஆனால் திமுக குடும்பத்தில் உள்ளவர்களின் வாரிசுகள் தான் அரசியலுக்கு வருவார்கள். மற்றவர்கள் தேர்தலுக்கு வேலை செய்துவிட்டு சத்தம் போடாமல் இருக்கணும். ஆனால் நம் தலைவர்கள் அப்படி இல்லை. அவர்களையே நானும் பின்பற்றி வருகிறேன். எனக்கு குறிப்பிட்ட சாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதா ஜாதி பார்த்து பழகியவர் அல்ல.

    ஆனால் அதிமுகவில் தற்போது குறிபிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். அதிமுக தற்போது 3வது இடத்துக்கும், 4வது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர்.

    அதிமுகவில் தனது பிரவேசம் தொடங்கிவிட்டது. இனி கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.

    ×