search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahma lotus"

    • பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    • இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா கொளப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது.

    ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்று கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

    இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். பல வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்தாலும் தற்போது பந்தலூரில் பூத்துள்ள இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில் பூத்துள்ளதால் தங்கள் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என கருதி சிலர் அந்த பூக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×