என் மலர்
நீங்கள் தேடியது "Bridge"
- அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
- பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும்.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள விச்சனூர் படுகை கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கவில்லை என்ற கூறி இன்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பாக காலிகுடங்களுடன் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
போராட்டத்திற்கு தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் கிளைச் செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பொதுவுடமை இயக்கத்தின் நிர்வாகிகள் தேவதாஸ், வைத்தியநாதசுவாமி, முருகையன், ஜெயராஜ், திருநாவுக்கரசு, மணிகண்டன், விஜயகுமார், பகத்சிங் ஆகியோர் பேசினர்.
மேலும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும், மேலும் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும், சாலை வசதியை மேம்படுத்தி வேண்டும், பழுதடைந்த ஆனந்தகாவேரி வாய்க்கால் பாலத்தை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
- மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
- 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் சிராஜூதீன் நகர் பெரியசாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது.
இந்த வாய்க்காலின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் செலவில் புதிய தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தின் வழியாக மணல் ஏற்றி கொண்டு லாரி சென்றதால் திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
பாலம் கட்டப்பட்டு 18 நாட்களில் இந்த பாலம் இடிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் ஆதாம் வடிகால் வாய்க்கால் பாலம் புனரமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், தேர்தல் தாசில்தார் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வாகனங்கள் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
- பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே தளியில் இருந்து எரிசனம்பட்டி வழியாக தேவனூர்புதூர் வரை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட இடங்களுக்கு இந்த ரோட்டில் அதிக அளவு செல்கின்றன.
இந்த ரோட்டில் தீபாலபட்டி அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. இந்த கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் ,தொடர் பயன்பாடு, நீண்ட காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வலுவிழந்து வருகிறது.
பாலத்தின் மீதுள்ள ஓடுதளம் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. அருகிலுள்ள குடிநீர் குழாய் உடைப்பில் தொடர்ந்து தண்ணீர் வெளியேறி அப்பகுதியில் தேங்குவது பாலத்தின் உறுதித்தன்மையை பாதிக்கிறது.இவ்வாறு படிப்படியாக வலுவிழந்து வரும் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுனர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் கூறுகையில், தளி- எரிசனம்பட்டி ரோட்டில் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே பி.ஏ.பி., பாலத்தை புதுப்பிக்க வேண்டும். உடனடி நடவடிக்கையாக ஓடுதளத்தை சீரமைக்காவது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
- தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் பாலம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் லிங்காபுரம் கிராமம் உள்ளது.
இங்கிருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலுர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பவானிசாகர் நீர்த்தேக்கத்தை தாண்டி செல்ல வேண்டும்.
இந்த நிலையில் ஆண்டு தோறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கேரளா பகுதியில் பெய்து வரும் மழைநீர் பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் தேங்கி நிற்கும்.
இதனிடையே வருடத்தில் 6 மாதங்கள் லிங்கபுரத்திலிருந்து காந்தவயல், ஆலுர், மேலூர், உலியூர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.
இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
ஆனால் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் நீர் பிடிப்பு அதிகமாகும் போது பாலம் தண்ணீரில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், தங்களது அன்றாட தேவைகளுக்கு சென்று வரவும் சாலை வசதி இல்லாததால் நீர் தேக்கத்தின் வழியாக பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி செலவில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
தற்போது இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனிடையே இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கந்தர்வகோட்டை அருகே ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது
- அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆற்றங்கரை வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார். விழாவுக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமை தாங்கினார். பின்னர் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இதன்மூலம் பொதுமக்களின் பொருளாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படுகிறது. அதன்படி இன்றையதினம் நபார்டு 2021-22 திட்டத்தின்கீழ், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஆற்றங்கரை-வெள்ளாளவிடுதி பாலம் கட்டும் பணி அடிக்கல்நாட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, சாலைவசதி, மின்வசதி உள்ளிட்டவைகள் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கந்தர்வ க்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், கோட்டப் பொறியாளர் நபார்டு வி.செந்தில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் சி.நளினி, மா.தமிழய்யா, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மா.பரமசிவம், கோ.அருணாசலம், உதவிப் பொறியாளர் நபார்டு ராஜதுரை, எம்.எம்.பாலு, ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் ராஜேந்திரன், திருப்பதி, முருகேசன் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.
- சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே நமச்சிவாயபுரம் என்ற ஊரில் பழவாற்றின் குறுக்கே சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இருந்தது.
சிறிய பாலமாக இருந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு சுமார் ரூ. 6 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கியது.
இதற்காக பழைய பாலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே மணல் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டு அதன் வழியே மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் சென்று வந்தன.
நமச்சிவாயபுரம் கல்யாண சோழபுரம், கடலங்குடி, பூதங்குடி, உத்தரங்குடி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் மயிலாடுதுறை மற்றும் திருமணஞ்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழை காரணமாக பழவாற்றில் மழைநீர் வடிந்து வருகிறது.
இந்த தண்ணீர் அனைத்தும் தேனூர் கதவனை வழியே கடலுக்குள் திருப்பி விடப்படும்.
தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளுக்காக தேனூர் கதவனை மூடப்பட்டதால் தண்ணீர் தேங்கி தற்காலிக பாலத்தை தண்ணீர் மெல்ல மெல்ல சுழ்ந்து வருகிறது.
இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது மேலும் பாலம் கட்டுமான பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக கதவணையைத் திறந்து தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விரைந்து பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித்துறை கட்டப்பட்டுள்ளன.
- நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர் யாதவர் வடக்கு, தெற்கு தெருக்களில் ஊராட்சி பொது நிதியில் சுமார் ரூ.5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, தரைமட்ட பாலம், படித் துறை கட்டப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவி அனுராதா ரவிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய சாலை மற்றும் பாலங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் பலவேசம் இசக்கிபாண்டி, மேலூர் தி.மு.க. கிளைச் செயலாளர் சுப்பிர மணி, அரசு ஒப்பந்த தாரர் மணி கண்டன், தீபம் கோபால், மணி, முருகேசன், ரங்கன் பண்ணையார், பரம சிவன், நம்பி, போல்ராஜ், வீர லட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் பாலம் 48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரமக்குடி
மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெளிச்சாத்தநல்லூர் தொடக்கத்தில் உள்ள பாலம் 1974-ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது வரை பயன் பாட்டில் இருந்து வருகிறது.
குறுகிய பாலமாக இருப்பதால் அந்த வழியாக செல்லும் 4 சக்கர வாக னங்கள், இருசக்கர வாக னங்கள், பாதசாரிகள் நடந்து செல்லும்போது தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. பழமையான பாலம் என்பதால் மராமத்து செய்யப் படாமல் பழுதடைந்துள்ளது.
இதனால் மதுரை -ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பாலத்தை கடந்து தான் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
பாலம் கட்டிய நாள் முதல் இன்றுவரை சம்மந்தப்பட்ட துறை மூலம் எவ்வித பராமரிப்பு பணியும் நடைபெறாமல் இருப்பதால் பாலம் முழுமை யாக சேதமடைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாலத்தை சுற்றிலும் செடிகள் முளைத்தும், ஆங்காங்கே சிமெண்டு கற்கள் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் விபரீதம் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
48 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
பல்லடம் :
பல்லடத்திலிருந்து சரக்கு வேன் ஓன்று கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு கேரளா சென்று விட்டு மீண்டும் பல்லடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை கமுதியை சேர்ந்த குமரவேல் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆரோக்கியசாமி(38) என்பவர் உடன் வந்துள்ளார். இந்தநிலையில் சரக்கு வேன் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் க.அய்யம்பாளையம் என்ற இடம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- லோடு ஆட்டோவில் எடுத்து சென்று பட்டம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே புதைத்தது தெரியவந்தது.
- புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்டு கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.
கும்பகோணம்:
திருப்பனந்தாள் அருகே கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 35), இவரது மனைவி திவ்யா (27), இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பாரதி, சென்னையில் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பாரதி திடீரென மாயமானார்.
இதைத் தொடர்ந்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லுார் போலீசார், பாரதியை தேடினர்.
தொடர்ந்து விசாரணை யில், போலீசாருக்கு பாரதி மனைவி மீது சந்தேகம் ஏற்பட, அவருடைய மொபைல் எண்ணை பரிசோதனை செய்தனர். அப்போது, திவ்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை தெரிந்துக் கொண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், திவ்யா தனது கள்ளக்காதலனுடம் சேர்ந்து தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. விசாரணையில், திவ்யாவுக்கும், கீழ்மாந்துார் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கள்ளக்காதல் விவகாரம் தனது கணவருக்கு தெரிந்த நிலையில், இடையூராக இருப்பார் என்பதால், அவரை தனது கள்ளக்கா தலுனுடன் சேர்ந்து கொலை செய்ய திவ்யா திட்டமிட்டுள்ளார்.
தனது கணவரை கட்டையால் தலையில் அடித்து, கயிற்றால் கழுத்தை நெறித்து கள்ளகாதலுடன் சேர்ந்து கொலை செய்துள்ள னர். பின்னர், பாரதியின் உடலை, மூட்டை யாக கட்டி, சதீஷ்குமார், திவ்யா இருவரும், லோடு ஆட்டோ வில் எடுத்து சென்று, திருப்பனந்தாள் அருகே பட்டம் பகுதியில் உள்ள பாலத்தில் அருகே புதைத்து தெரியவந்தது.
இதையடுத்து பந்தநல்லுார் போலீசார், திவ்யா, சதீஸ்குமார் இருவரையும் கைது செய்தனர்.
அத்துடன் லோடு ஆட்டோ டிரைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டம் குறுக்கு சாலையில் நான்கு வழிப்பாதையில் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைப்பெற்ற போது சாலை மேம்பாலம் தூண்கள் மேல் பகுதி இணைப்பு பணிகள் நடந்த போது தான் அந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட பாரதி புதைக்க ப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் ஒரு மாதம் முன்பு புதைக்கப்பட்ட இடத்தில் தற்போது சிமெண்ட் கலவை கொண்டும், சாலையும் போடப்பட்டிருந்தது.
பாரதி புதைக்கப்பட்ட இடத்தினை திருவிடை மருதூர் தாசில்தார் சுசீலா டிஎஸ்பி ஜாபர் சித்திக் முன்னிலையில் தோண்டி எடுக்கும் பணி நடந்தது.
சாலையை சுமார் ஏழு அடி பள்ளம் தோன்றிய நிலையில் சாக்கு மூட்டையில் பாரதி உடலில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
பாரதியின் முகம் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக் கொண்டு மூடியதோடு எட்டு சாக்குகள் கொண்டும் அவரது உடலை கட்டி புதைத்து ள்ளனர்.
தங்கள் வீட்டில் பூஜை செய்த பொருளை புதைக்க வேண்டும் என்று கூறி லோடு ஆட்டோவில் ஏற்றி வந்து சாலை பணியில் ஈடுபட்டிருந்த சில வட மாநில பணியா ளர்களின் உதவி யோடு சதீஷ்குமார் உடலை புதைத்துள்ளது போலீசாரை திகைக்க செய்துள்ளது.
சாலையை தோண்டி மீட்கப்பட்ட பாரதி உடலை டாக்டர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இச்சம்பவத்தில் சாலை பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்ளின் தொடர்பு உள்ளதா? வேறு யாருக்கேனும் தொடர் உள்ளதா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- குறுகலான பாலத்தை கடந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
- புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி மேலத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் திருமருகல், திட்டச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர மேலத்தெருவில் இருந்து முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகலான பாலத்தை கடந்து வாளாமங்கலம் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவர்க ளும் பாலத்தை கடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் தற்போது அதிக பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இதனால் ஆட்டோ,கார் மற்றும் அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வசதி இல்லாமல் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றி வரும் நிலை உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி இப்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே கட்டுமாவடி ஊராட்சியையும் சீயாத்த மங்கை ஊராட்சியையும் இணைக்கும் வகையில் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே குறுகலான பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டி ஆற்றங்கரையில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது.
அதன்பின் அப்பகுதியில் இருந்த தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது.
100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. மேலும் இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.