என் மலர்
நீங்கள் தேடியது "bus"
- பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி
பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அப்புறப்பட்டது.
- முதியவர்கள் பலர் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் வேலை நிமித்தமாக அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இ.சி.ஆர். சாலையில் உள்ள பஸ் நிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்புறப்பட்டது.
ஆனால், இது நாள் வரை அங்கு பஸ் நிலையம் கட்டவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் பலர் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையில் நனைந்தபடியும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த முதியவர் இறந்தார்.
- விபத்து குறித்து பெருங்குடி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண் ராஜா (43). இவர் சம்பவத்தன்று மனைவி பவித்ரா, மாமனார் சுரேந்திரநாத், மாமியார் சுகுணா தேவி மற்றும் பவித்ரா, தங்கை சுகன்யா ஆகியோருடன் காரில் மதுரைக்கு வந்தார். அப்போது அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில், வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எனவே அருண் ராஜா உடனடியாக பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சுரேந்திரநாத், பவித்ரா, சுகுணா தேவி, சுகன்யா படுகாயம் அடைந்தனர். அவர்களை வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேந்திரநாத் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருங்குடி போலீசார் சுரேந்திரநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேருந்துகளில் ஏறும் பயணிகளை தகாத வாா்த்தைகளால் திட்டி இறக்கி விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
- பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா்.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் பெரும்பாலான தனியாா் பேருந்துகள் வழித்தடமான அவிநாசி, தெக்கலூா் நகருக்குள் வந்து செல்வதில்லை. மேற்கண்ட ஊா்களுக்காக பேருந்துகளில் ஏறும் பயணிகளை தகாத வாா்த்தைகளால் திட்டி இறக்கி விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இந்நிலையில் தெக்கலூா் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மனைவி செல்வி( வயது 47) என்பவர் திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெக்கலூா் செல்வதற்காக தனியாா் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது பேருந்து கண்டக்டர்,அவிநாசி, தெக்கலூா் பகுதிக்குள் பேருந்து செல்லாது, புறவழிசாலை வழியாகதான் செல்லும் எனக் கூறி அப்பெண்ணை கீழே இறங்கு எனக் கூறியுள்ளாா்.
செல்வி பேருந்தில் இருந்து இறங்குவதற்குள் டிரைவர் பேருந்தை இயக்கியுள்ளாா். அப்போது செல்வி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தாா். உடனே அருகில் இருந்தவா்கள் செல்வியை மீட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியாா், அரசுப் பேருந்துகள், அவிநாசி, தெக்கலூா் பகுதிக்குள் வராமல் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் வழியாக சென்று வருவது வழக்கமாகிவிட்டது. திருப்பூா், கோவையில் இருந்து வரும் எந்தப் பேருந்துகளிலும் அவிநாசி, தெக்கலூா் உள்ளிட்ட பகுதி பயணிகளை ஏற்றுவதில்லை. தவறி சில நேரங்களில் பயணிகள் ஏறினாலும், தேசிய நெடுஞ்சாலை பாலம் என்று கூட பாா்க்காமல் இறக்கி விடப்படுகிறாா்கள். இப்பிரச்சனை தொடா்பாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் என அனைத்து தரப்பினரும் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது இப்பிரச்னையால் ஒரு பெண் உயிரிழந்தாா். ஆகவே மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
- கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார்.
- திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவிநாசி :
அவிநாசி அடுத்த அம்மாபாளையத்தில், கடந்த 2ம் தேதி, தனியார் பஸ்சில் தெக்கலுார் செல்வதற்காக, செல்வி என்பவர் ஏறினார். அவரிடம், கண்டக்டர் அவிநாசி, தெக்கலுாருக்குள் பஸ் செல்லாது என கூறி இறங்க சொன்னார். செல்வி இறங்குவதற்குள் அஜாக்கிரதையாக டிரைவர் பஸ்ஸை நகர்த்தியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த செல்வி மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்த செல்வி பலியானார். பல்வேறு சமூக நல அமைப்புகள், தன்னார்வலர்கள், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் பஸ்ஸை இயக்கிய கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யும் படி கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவிநாசி வந்த நீலகிரி தொகுதி எம்.பி., ராஜாவிடம், பொதுமக்கள் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் கோவையிலிருந்து செல்லும் பஸ்களும், சேலம், ஈரோடு, திருப்பூரிலிருந்து கோவைக்கு செல்லும் பஸ்களும் பயணிகளை இறக்கி, ஏற்றி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.பி. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
- கடந்த 2ஆம் தேதி செல்வி என்பவர் தெக்கலூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
- கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள அம்மாபாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த 2ஆம் தேதி செல்வி (47) என்பவர் தெக்கலூர் செல்ல தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
ஆனால் பேருந்து உள்ளே செல்லாது. தேசிய நெடுஞ்சாலையில் நேராக சென்று விடும் என கூறி நடத்துனர் அவரை கீழே இறங்க சொல்லி உள்ளார்.
இதனையடுத்து செல்வி கீழே இறங்கும் முன்பாக ஓட்டுநர் பேருந்து இயக்கியதால் நிலை தடுமாறி விழுந்த செல்வி மீது பேருந்து பின் சக்கரம் ஏறியது இதில் பலத்த காயமடைந்த செல்வி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும் உயிரிழந்த செல்வியின் இரண்டு மகள் படிப்பு செலவை அரசு ஏற்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அனைத்து பேருந்துகளும் தெக்கலூர் வந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்து தெக்கலூர் பகுதி பொதுமக்கள் இன்று 100க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை - சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வசதி வேண்டும்.
மயிலாடுதுறை சீர்காழி சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் வள்ளாலகரம் ஊராட்சியில் 5 பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.
வள்ளாலகரம் ஊராட்சியில் இருக்கக்கூடிய அங்காடியை இரண்டாக பிரித்து நாகங்குடி சாலையில் ஒரு புதிய அங்காடியை தொடங்கிட வேண்டும் என 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (7-ந்தேதி) செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகவலை அறிந்த அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கூட்டமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் அவர்களுடைய மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததனர்.
நடைபெற இருந்த உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கிகொள்வதாக கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இதன் ஒரு பகுதியாக கூட்டமைப்பின் முதல் கோரிக்கையான மயிலாடுதுறை-சீர்காழி மார்க்கத்தில் நகர பேருந்து வேண்டும் என்ற கோரிக்கை நேற்று நிறைவேற்றப்பட்டது.
சிவப்ரியா நகர் பஸ் நிறுத்தத்தில் புதிய பஸ் இயக்க தொடக்க விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயின், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், கூட்டமைப்பின் பொருளாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சாமி செல்வம், கூட்டமைப்பு தகவல் நெறியாளர் கார்த்திகேயன், கூட்டமைப்பு நிர்வாகிகள் துரை.குணசேகரன், கோபு, பொன்.நக்கீரன், உதயகுமார், இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் செய்தார்.
- இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.
அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக வேலை பார்ப்பதாகவும், எனவே டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி அடையாள அட்டையை காண்பி த்துள்ளார்.
அதனை பார்த்த ராம கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலி அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணம் செய்தது மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்த பாண்டித்துரை எனவும், இவர் அப்பக்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஓராண்டாக அரசு பஸ்சில் மோசடி செய்து இலவச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது.
- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் ஒரு பகுதியிலும், வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் மற்றொரு பகுதியிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனை தவிர மினிபஸ்கள் பஸ் நிலையத்தின்முகப்பில் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் பேருந்துகளை இயக்கும் டிரைவர்கள் கட்டுப்பாடின்றி தங்களது விருப்பம் போல் அதிவேகத்தில் பஸ்சை ஓட்டி பஸ் நிலையத்திற்குள் நுழைகின்றனர். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைகின்றனர்.
இது குறித்து பயணிகள் கூறுகையில்:- பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் ஒன்றை மற்றொன்று முந்தி செல்ல முயற்சிக்கிறது. அந்த நேரத்தில் நடந்து செல்லும் பயணிகள்ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு நடந்து செல்ல அச்சமாக உள்ளது. நிலையத்திற்குள் வரும் பஸ்கள் மெதுவாக பொறுமையாக வர அறிவுறுத்த வேண்டும். இப்படித்தான் வர வேண்டும். இப்படித்தான் செல்ல வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் . அப்படி இல்லாத பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.
- புதிய பஸ் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.
நெல்லை:
ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், மெஞ்ஞானபுரம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில்அதிகமான மக்கள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.
உடன்குடி, மெஞ்ஞான புரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல்லைக்கு செல்லும் போதும் நெல்லை, பாளை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து உடன்குடி பகுதிக்கு வருபவர்களும் இந்த வழித்தட பயணத்தை தான் அதிகமாக விரும்புகின்றனர்.
அதனால் நெல்லையில் இருந்து உடன்குடிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தவறாமல் அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால் நண்பகல் நேரத்தில் ஓட்டு னர்கள், நடத்துனர்கள் மாறுவதால் சில அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
உடன்குடியில் இருந்து புறப்படும் பஸ் ஸ்ரீவை குண்டத்தில் திரும்புகிறது. நெல்லையில் இருந்து புறப் படும் பஸ் ஸ்ரீவைகுண்டத் தில் திரும்புகிறது. இதனால் நெல்லை புதிய பஸ் நிலை யத்தில் இருந்து நண்பகல் 12.30 மணிக்கு உடன்குடிக்கு புறப்படும் பஸ் முறையாக வருவதில்லை.
இதை நம்பி காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படு கின்றனர். இதனால் நண்பகல் நேரத்தில் சுமார் 3 மணி நேரம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அவல நிலையை போக்கவும், நண்பகலில் இடைப்பட்ட நேரத்தில் ஒரு அரசு பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இதுபற்றி பயணி ஒருவர் கூறியதாவது:-
பிற்பகல் நேரத்தில் 3 மணி நேரம் நெல்லை-உடன்குடிக்கு பஸ் போக்கு வரத்து தடை செய்தால் பயணிகள் சார்பில் உடன் குடியில் பஸ்களை சிறை பிடிக்கும் போராட்டம் நடை பெறும் என்று கூறினார்.
- சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.
- வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார்.
வெள்ளகோவில் :
கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியை சேர்ந்த நாச்சி முத்து மகன் சத்தியமூ ர்த்தி (வயது 42). இவர் திருப்பூர் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகின்றார். சத்தியமூர்த்தி சனிக்கிழமை பரமத்தியிலிருந்து வெள்ளகோவிலுக்கு கோவை செல்லும் அரசு பஸ்சில் வந்துள்ளார்.அப்போது வாழைப்பழம்கொண்டு வந்துள்ளார். வாழைப்பழத்தை பரமத்தியில் ஏறும்போது பின் சீட்டு வழியாக ஏறி பஸ்சில் வைத்துவிட்டு சத்தியமூர்த்தி முன்னாள் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது பஸ் கண்டக்டர் மணி மாறன் இந்த வாழைப்பழம் யாருடையது ,லக்கேஜ் வாங்க வேண்டும் என்று கேட்டு ள்ளார். இது தொடர்பாக சத்தியமூ ர்த்திக்கும், கண்டக்டருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சத்தியமூர்த்தி என்னுடையது தான் என்று கூறவில்லை.
உடனே கண்டக்டர்மணிமாறன் வாழைப்பழத்தை பஸ் டிரைவர் சீட் அருகே எடுத்துச் சென்று வைத்து விட்டார். பின்னர் சத்தி யமூர்த்தி வெள்ளகோவிலில் இறங்கும் போது வாழை ப்பழத்தை காணவில்லை என கண்டக்டர் மணிமா றனிடம் கேட்டபோது, சத்தியமூர்த்திக்கும் மற்றும் கண்டக்டர் மணிமாறன், பஸ்சில் பயணம் செய்த கோவை பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் பஸ்சில் தகராறு செய்ததாக கூறப்படும் பஸ் பயணிகள் கோவை சதீஷ்குமார் ,கிணத்துக்கடவு வெங்கடாஜலபதி , கோவை ராமச்சந்திரன், கிணத்துக்கடவு கோபால், கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பாறை ராஜேஷ் ,கோவை மாணிக்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சரியான நேரத்தில் பஸ் இயக்காததால் பள்ளி மாணவிகள் அவதியடைந்துள்ளனர்.
- மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கெருக்கான்பட்டி கிராமம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. இந்த பகுதியில் 1995-ம் ஆண்டு முதல் காலை 7. 40 மணியளவில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களை கருத்தில் கொண்டு பஸ் இயக்கப்பட்டுள்ளது. தற்போது பஸ் இயக்கும் நேரம் மாற்றப்பட்டு காலை 6.15 மணியளவில் இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் 10 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன், பணிமனை கிளை மேலாளர் மாரியப்பனிடம் பஸ்சை சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும், பஸ் சரியான நேரத்தில் இயக்கப்படாமல் இருக்கிறது. காலை 6.15 மணிக்கு வரும் பஸ் இந்த பகுதியில் பெயருக்காக இயக்கப்படுவதால் எந்த பயனும் இல்லை. ஆகையால் சரியான நேரத்தில் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.