என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் மோதி காரில் வந்த முதியவர் சாவு
- அரசு பஸ் மோதிய விபத்தில் காரில் வந்த முதியவர் இறந்தார்.
- விபத்து குறித்து பெருங்குடி ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் அருண் ராஜா (43). இவர் சம்பவத்தன்று மனைவி பவித்ரா, மாமனார் சுரேந்திரநாத், மாமியார் சுகுணா தேவி மற்றும் பவித்ரா, தங்கை சுகன்யா ஆகியோருடன் காரில் மதுரைக்கு வந்தார். அப்போது அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலையில், வாலிபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். எனவே அருண் ராஜா உடனடியாக பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.
அப்போது பின்னால் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் சுரேந்திரநாத், பவித்ரா, சுகுணா தேவி, சுகன்யா படுகாயம் அடைந்தனர். அவர்களை வலையங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுரேந்திரநாத் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெருங்குடி போலீசார் சுரேந்திரநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்