என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ByElection"
- அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
- இம்ரான்கான் கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான்கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7-ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
- உள்ளாட்சி இடைத்தேர்தலுக்காக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் விறுவிறுப்பான வாக்குபதிவு நடைபெற்றது.
- நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சியில் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஒன்றியம் பிள்ளா–நல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றி–யம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்கா–ளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.
அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. ராசிபுரம் ஒன்றியம் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று காலையில் தொடங்கியது. தி.மு.க. சார்பில் உஷாராணியும், அ.தி.மு.க சார்பில் ஜெயந்தியும், அ.ம.மு.க. சார்பில் ரத்தினம்மாளும் போட்டியிடுகின்றனர்.
இன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆண் பெண் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் 4 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலையில் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதேபோல் மத்துரூட்டு ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தலும் தொடங்கியது.
- சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
- சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் மற்றும் 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் தெத்திகிரிப்பட்டி, மின்னாம்பள்ளி, பூவனூர், புள்ளகவுண்டம்பட்டி, இலவம்பட்டி, நீர்முள்ளிக்–குட்டை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள சேலம் ஒன்றிய கவுன்சிலர் உள்பட 6 பதவிகளுக்கு இன்று ( 9ந் தேதி ) வாக்குப்பதிவு நடக்கிறது. சேலம் யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். தி.மு.க வேட்பாளராக முருகன் போட்டியிடுகிறார். மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள். வார்டு உறுப்பினர் பதவிகளில் நடுப்பட்டியில் 3 பேர், தேவியாக்குறிச்சியில் 2 பேர், கிழக்கு ராஜபாளையத்தில் 3 பேர், கூணான்டியூரில் 3 பேர், பொட்டனேரியில் 2 பேர் என மொத்தம் 6 பதவிகளுக்கு 29 பேர் போட்டியில் உள்ளனர்.
இதற்கான தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். சேலம் ஒன்றியம் 8வது வார்டில் 10 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 5 ஊராட்சி மன்ற வார்டுகளுக்கும் வார்டுக்கு ஒரு வாக்குச்சவாடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகி–றார்கள். மாலை 6 மணி வரை இந்த தேர்தல் நடக்கிறது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 9 ஆயிரத்து 510 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள். இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
3 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும், 30 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளன.
இதையொட்டி காங்கிரஸ் கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்த்து, மோடி ஆணவத்தை கைவிட வேண்டும், 3 கருப்பு சட்டங்களை (வேளாண் சட்டங்கள்) ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் கொள்ளையை நிறுத்த வேண்டும்’’ என கூறி உள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அ.திமு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. முழு ஆதரவை அளிக்கிறது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். #ADMK #DMDK #Vijayakanth
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் காரணமாக திருவாரூர் சட்டசபை தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. போஸ் மரணம் காரணமாக திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியும் காலி இடங்கள் ஆனது.
இதற்கிடையே டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சை, அரூர், மானாமதுரை ஆகிய 18 சட்டசபை தொகுதி இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, பழைய வழக்கு ஒன்றில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த ஓசூர் தொகுதியும் காலி இடமாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 21 இடங்கள் காலி இடங்களாக இருந்தன.
கடந்த மாதம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டபோது தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று தேர்தல் ஆணையம் கூறியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தி.மு.க., காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ஆளும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தி.மு.க. தரப்பில் புகார் கூறப்பட்டது. இதை மறுத்த தேர்தல் ஆணையம், “அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த தயார்” என்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. இதனால் அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் ஆலோசித்து வந்தது. இதற்கிடையே சூலூர் சட்ட சபை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்ததால் காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்த 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (மே) 19-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் கடைசி கட்ட 7-வது ஓட்டுப்பதிவு தினமான 19-ந்தேதியை 4 தொகுதி இடைத்தேர்தல் தேதியாக தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந்தேதி மனுத்தாக்கலுக்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 30-ந்தேதி மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற மே மாதம் 2-ந்தேதி கடைசி நாளாகும்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் 2016-ம் ஆண்டு தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. சூலூர் தொகுதியை காங்கிரசுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியை புதிய தமிழகம் கட்சிக்கும் விட்டுக் கொடுத்திருந்தது.
ஆனால் இந்த தடவை இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி இருப்பதால் 4 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களையே களம் இறக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதனால் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. - தி.மு.க. இடையே நேரடி போட்டி உருவாகி இருக்கிறது.
4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் உள்ளன. எனவே அதற்கு ஏற்ப தகுதியான வேட்பாளர்களை களம் இறக்க இரு கட்சிகளிலும் இப்போதே விவாதமும், ஆலோசனைகளும் தொடங்கி விட்டது.
மனுத்தாக்கல் தொடங்கும் 22-ந்தேதிக்கு முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். தி.மு.க.வில் திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா, சூலூர் தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய மூவரில் ஒருவர் வேட்பாளராக வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வும் வேட்பாளர் தேர்வு ஆலோசனையை தொடங்கி விட்டன.
வருகிற 18-ந்தேதி நடக்கும் 18 தொகுதிகள் இடைத்தேர்தல் வாக்குகளும், மே 19-ந்தேதி நடக்கும் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் மே 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த தேர்தல் முடிவுகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் தலைவிதியை நிர்ணயம் செய்வதாக இருக்கும். இதனால் ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் பட்சத்தில் தனிப் பெரும்பான்மை பெற 117 பேர் ஆதரவு தேவை. தற்போது சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். எனவே 22 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அ.தி.மு.க. 4 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது.
அ.தி.மு.க.வின் தற்போதைய 114 எம்.எல்.ஏ.க்களில் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு ஆகிய மூன்று பேரும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். அது போல இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜன நாயக கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அ.தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ளனர்.
இந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்ப தயாராக இல்லை. அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கழித்துப் பார்த்தால் அ.தி.மு.க.வின் பலம் 108 ஆக குறைந்து விடும். இத்தகைய நிலையில் இடைத்தேர்தல் நடக்கும் 22 இடங்களில் குறைந்தபட்சம் 10 இடங்களில் வெற்றி பெற்றால்தான் அ.தி.மு.க.வின் நம்பகத்தன்மை பலம் 118 ஆக உயரும். எனவே 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றியை குறி வைத்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்த தொடங்கி உள்ளனர்.
சட்டசபையில் தற்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு 8, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.
தனி பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்பதால் இடைத்தேர்தல் நடக்கும் 22 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்த எண்ணிக்கையில் தி.மு.க.வால் வெற்றி பெற முடியுமா? என்பது மே 23-ந் தேதி தெரிந்து விடும். #Bypolls #TNByelections
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஏப்ரல் 18ம் தேதிக்குப் பிறகு வேறு தேதிகளில் கூட இந்த 3 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாம் என திமுக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலம் வரும்போதுதான் தேர்தலை நடத்த முடியும் என்றும், சரியான நேரம் வரும்போது தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம்தேதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது. #LSPolls #TNByelection #DMKCase
சென்னை:
தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன.
திருவாரூர், திருப்பரங்குன்றம், பூந்தமல்லி, ஆம்பூர், ஆண்டிப்பட்டி, ஓட்டப்பிடாரம், பெரம்பூர், பாப்பி ரெட்டிபட்டி, பெரியகுளம், திருப்போரூர், அரூர், சாத்தூர், அரவக்குறிச்சி, சோளிங்கர், நிலக்கோட்டை, பரமக்குடி, தஞ்சாவூர், குடியாத்தம், மானாமதுரை, விளாத்திக்குளம், ஓசூர் ஆகியவையே அந்த 21 தொகுதிகளாகும்.
இந்த 21 தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் போது 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளது. தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த கூடாது என்று எந்த கோர்ட்டும் தேர்தல் ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாதது மக்கள் விரோத நடவடிக்கை என்று தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது. தேர்தல் ஆணையம் இதில் உரிய முடிவு எடுக்காவிட்டால் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பிரதிநிதிகள் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் 3 தொகுதி இடைத்தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.
அதற்கு பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, “3 தொகுதிகளின் தேர்தல் பற்றி கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம்” என்றார்.
இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ஏ.கே. போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து தன்னை எம்.எல்.ஏ. ஆக அறிவிக்க கோரி சரவணன் புதிய மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு காரணமாகவே திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்ததும், இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சரவணன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று சரவணன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
இதுபோல அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளின் தேர்தல் வழக்குகளையும் திரும்பப் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. #ElectionCommissioner #Byelection
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.
இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்த திமுக, இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்தது.
இந்நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிடும்படி கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், வெள்ளிக்கிழமை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறியுள்ளது. #DMK #TNBypoll
பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இடைத்தேர்தல் நடத்தப்படாது என்றும், மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பின்னர் அறிவித்தார்.
அதன்பின்னர், 18 சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம், விடுபட்ட அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாததற்கு கூறும் காரணங்கள் அடிப்படை ஆதாரமற்றது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம், உயர்நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்துவிட்டது. அந்த 2 தொகுதிகள் தொடர்பான வேறு எந்த வழக்குகளிலும் தேர்தலை நடத்தக்கூடாது என உத்தரவிடப்படவில்லை. தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு அரசை மைனாரிட்டி அரசாக நீடிக்க அனுமதிப்பதா?
எனவே, விடுபட்ட 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிடப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த முன்வராவிட்டால் நீதிமன்றம் சென்று தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DMK #TNBypoll
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாக இருக்கிறது.
காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், காலவிரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டு மின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Parliamentelection #DMK #Thirumavalavan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்