search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Car broken"

    • சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). சம்பவத்தன்று இவரும் இவரது மைத்துனர் சின்னதுரை ஆகிய இருவரும் நேற்று நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றர்.

    பின்னர் சமையல் பாத்திரங்களை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் உள்ள பாத்திரக்கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள சையது சலீம் என்பவரின் ரெடிமேட் கடையின் முன்பு காரை நிறுத்தினர். உடனே சையது சலீம் காரை இங்கே நிறுத்தக்கூடாது வியாபாரம் பாதிப்பதாக கூறியதாக தெரிகிறது.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையது சலீம் கார்த்திக்கின் காரின் நான்கு பக்க கண்ணாடிகளையும் கட்டையால் அடித்து நொறுக்கி உள்ளார். உடனே இதுபற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கடை உரிமையாளர் சையது சலீமிடம் விசாரித்த போது போலீசாரிடமும் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சின்னதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக சையது சலீமை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதை அறிந்த சையது சலீமின் நண்பர் அப்பு என்கிற தசரதன் (28) என்பவர் கார் உரிமையாளர் கார்த்திக்கிடம் தகராறு செய்தார். இதுகுறித்து கார்த்திக்கும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிவு செய்து சையது சலீம், தசரதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    ×