search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cauvery"

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்வரத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    பென்னாகரம்:

    கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை படிப்படியாக குறையத்தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

    இந்த தண்ணீர், ஒகேனக்கல் பிரதான மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இவர்கள் அருவிகள் மற்றும் காவிரி கரையோரம் குளித்தனர். பின்னர் அவர்கள் பார்வை கோபுரம், தொங்குபாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பரிசலில் சென்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கர்நாடகா, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவை அளந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவி, நடைபாதை மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று திடீரென சந்தித்து பேசினார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மே 19-ம் தேதி நடக்க உள்ள இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விஜயகாந்த், திருமாவளவன், தமிழிசை உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், காவிரி விவகாரம் தொடர்பாக மே 19இல் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைக்க உள்ளேன். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். என கூறினார்.

    கமல்ஹாசனின் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மு.க ஸ்டாலின் அதன்பின்னர் தெரிவித்தார். #MKStalin #KamalHaasan
    காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    புதுடெல்லி:

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:



    * காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

    * காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

    * அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

    * காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

    * முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #CauveryDraftScheme #CauveryDams
    ×