search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell phone and bike"

    • தேனி அருகே செல்போன் மற்றும் பைக் திருடுபோனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கோம்பையை சேர்ந்தவர் முருகன் (48). இவரது தோட்டத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப்புகளை ரெங்கநாதபுரத்தை சேர்ந்த கனகராஜ் (29) என்பவர் திருடிச் ெசன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து கோம்பை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (31). சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் உள்ளே புகுந்து செல்போனை திருடினார். விரட்டியபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி சீனிவாசநகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது36). தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தி இருந்தார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×