என் மலர்
நீங்கள் தேடியது "child dead"
- முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் மீது பளளி வாகனம் மோதிய விபத்தில் எல்கேஜி குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில், டிராக்டரில் இருந்த பெண், 8 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக வீட்டில் தடல் புடலாக சமையல் செய்து கொண்டு இருந்தனர்.
- வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த சோமநாத் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிக்கனுர் அடுத்த எர்ரகோட்டாவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி ராமேஸ்வரம்மா.
இவர்களது மகன் சோமநாத் (வயது 3). எமிக்னூரில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நாகராஜ் தனது மனைவி குழந்தையுடன் சென்று இருந்தார். உறவினர் வீட்டிற்கு சென்ற நாகராஜ் அவரது மனைவி குழந்தையை விளையாட விட்டு விட்டு அவரது உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறுவதற்காக வீட்டில் தடல் புடலாக சமையல் செய்து கொண்டு இருந்தனர். வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த சோமநாத் சமையல் செய்யும் இடத்திற்கு சென்றான்.
அப்போது சமையல் செய்பவர்கள் அடுப்பில் இருந்து கொதிக்க கொதிக்க அண்டாவில் சாம்பாரை கீழே இறக்கி வைத்துவிட்டு அவர்களது வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர். சோமநாத் எதிர்பாராத விதமாக அண்டாவில் இருந்த சாம்பாரில் விழுந்து அலறி துடித்தான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பதறி அடித்து ஓடிய உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர் சிறுவனை மீட்டனர்.
அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கொதிக்கும் சாம்பாரில் விழுந்து சிறுவன் இறந்ததால், உறவினர்களுடன் கலகலப்பாக இருந்த வீடு சோகமாக மாறியது.
- பிறந்த 26 நாட்களிலே பெண் குழந்தை இறந்தது சிவகிரி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் சுரேஷ், இவரது மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஜான்சி ராணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 4-ந் தேதி சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தை நஞ்சினை குடித்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையை 8 நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சையில் வைத்திருந்தனர்.
பின்னர் சிகிச்சை முடிந்து குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றனர். வீட்டிற்கு சென்றதும் மீண்டும் குழந்தைக்கு சளி மற்றும் முச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அதே பகுதியில் உள்ள ஒரு டாக்டரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை டாக்டர் டானிக் கொடுத்து கொடுக்க சொன்னார்.
இதற்கிடையே நேற்று ஜான்சிராணி குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு கட்டிலில் படுக்க வைத்து விட்டு சமையல் செய்தார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தது.
இதையடுத்து உடனடியாக தாண்டாம்பாளையம் என்ற பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிறந்த 26 நாட்களே பெண் குழந்தை இறந்ததால் இது குறித்து சிவகிரி போலீசாரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில்தான் குழந்தை மரணத்துக்கான காரணம் தெரியவரும்.
- குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர்.
- குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
சென்னை விருகம்பாக்கம், ராஜேஸ்வரி காலனி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார், வியாபாரிகள் சங்க நிர்வாகி. இவரது மனைவி தேவகி. இவர்களது மகன் இளமாறன் (வயது1).
நேற்று முன்தினம் இரவு தேவகி சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இளமாறன் திடீரென மாயமாகிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த தேவகி தேடிய போது கழிவறையில் உள்ள தண்ணீர் வாளிக்குள் குழந்தை இளமாறன் மூழ்கிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு தேவகி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இளமாறன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற விருகம்பாக்கம் போலீசார் குழந்தை இளமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இளமாறனின் பிறந்தநாள் விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் குழந்தை இளமாறன் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
- புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூர் தெற்கு மேம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் விவசாயி. இவரது மனைவி ராஜேஸ்வரி.
இவர்களுக்கு பானுஸ்ரீ என்ற 4½ வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இந்த பெண் குழந்தைக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் நேற்று முன்தினம் பண்ருட்டி தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பானுஸ்ரீக்கு உடலில் அலர்ச்சி ஏற்பட்டது. இதனால் குழந்தையின் பெற்றோர் பண்ருட்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பானுஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பானுஸ்ரீயின் பெற்றோர் தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை இறந்து விட்டதாக காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (30). இவரது மனைவி ராஜேஸ்வரி (25). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ராஜேஸ்வரிக்கு கடந்த 21-ந்தேதி அதிகாலையில் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. ராஜேஸ்வரிக்கு வலிப்பு நோய் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குழந்தை பிறந்த பின் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற ராஜேஸ்வரி, கடந்த 24-ந்தேதி சிகிச்சை முடிந்து குழந்தையுடன் வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது குழந்தையின் மூக்கிலும், வாயிலும் தாய்ப்பால் வெளியே வந்து மூச்சுவிட சிரமப்பட்டுள்ளது. இதையடுத்து சோலாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவரின் பரிந்துரையின்படி குழந்தைகள் நல மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக மீண்டும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை.
- குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த எடைபாலயம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு மனுநீதி (6), தேவவிருதன் (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சிவா செங்கல்பட்டில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு ஹாலோபிளாக் கற்களை எடுத்துக்கொண்டு டிராக்டரில் புறப்பட்டார். அப்பொழுது அவரது குழந்தைகள், நாங்களும் வருவோம் என அடம் பிடித்ததால் குழந்தைகளையும் டிராக்டரில் அழைத்துக் கொண்டு சென்றார்.
இன்று காலை 7.30 மணிக்கு கூட்டேரிப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கி வார சந்தையின் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது டிராக்டரின் பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய டிராக்டர் சிறிது தூரம் வேகமாக சென்றது. அதிர்ச்சி அடைந்த சிவா டிராக்டரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார்.
டிராக்டரில் பார்த்தபோது தனது இளைய மகன் தேவவிருதனை காணவில்லை. குழந்தையை தேடிய போது, லாரியின் அடியில் சிக்கி பலத்த காயத்துடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து குழந்தையை மீட்ட சிவா, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
அப்போது, அங்கு வந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தந்தை கண்முன்னே குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலம் போலீசார், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
- அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது
சென்னை திருவல்லிக்கேணியில் லிப்ட் அமைக்க தோண்டப்பட்ட 10 அடி ஆழ பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
பள்ளத்தில் விழுந்த பந்தை எடுக்க முயற்சித்தபோது, நீரில் மூழ்கி வனமாலி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருவல்லிக்கேணி தேரடி தெருவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் லிப்ட் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது தெரியவந்துள்ளது
- அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர்.
- செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் சுஜாதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிக மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3 மணியளவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சுஜாதாவை அழைத்து செல்லும்படி செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுஜாதாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தந்தை மற்றும் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
- குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த டீசலைக் குடித்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடலூர் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியை சேரந்த சூர்யா- சினேகா தம்பதியின் 1.5 வயது குழந்தை மைதிலி.
வீட்டில் அடுப்பு பற்றவைக்க பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த டீசலை தண்ணீர் என நினைத்து குழந்தை மைதிலி குடித்தது.
குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
- 1½ வயது குழந்தை வாழைப்பழம் சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் செல்லாண்டி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது 1½ வயது மகன் நேற்று வீட்டில் வாழைப்பழம் சாப்பிட்டான்.
அப்போது திடீரென அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து தனது மகனை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அவரது பெற்றோர்கள் கொண்டு வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
கொளத்தூர் தணிகாசலம் நகர் பொன்னியம்மன் மேடு பகுதியில் குடியிருப்பவர் சந்தோஷ்குமார். இவருடைய மனைவி கெஜலட்சுமி.
இவர்களுடைய மகன் தக்ஷன்(6), மகள் தீக்ஷா(6). இரட்டை குழந்தைகளான இவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தங்கள் இரண்டு குழந்தைகளும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதால், பெற்றோர் கதறிதுடித்தனர். உறவினர்களும், பக்கத்து வீட்டுகாரர்களும் சோகத்தில் மூழ்கினார்கள்.
நான் அமுதம் அங்காடியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறேன். 5 வருடங்களாக எங்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்காக எனது மனைவி கெஜலட்சுமி சிகிச்சை பெற்றார். அதன்பிறகு இரட்டை குழந்தைகளாக தக்ஷன், தீக்ஷா பிறந்தார்கள்.
இருவருக்கும் 6 வயது ஆகிறது. அருகில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு 2 பேருக்கும் காய்ச்சல் வந்தது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றோம். ஒரு வாரம் ஆனபிறகும் காய்ச்சல் குறையவில்லை. பரிசோதனை செய்து பார்த்தபோது வைரஸ் காய்ச்சல் என்றார்கள்.
எனவே, எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். அப்போது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது. 2 பேரும் நலமுடன் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகள் தீக்ஷா நேற்று இரவும், மகன் தக்ஷன் இன்று காலையும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 5 வருடம் தவம் இருந்து பெற்ற எங்கள் குழந்தை இறந்ததால் எங்கள் வாழ்க்கையையே இழந்து விட்டோம்.
இவ்வாறு கூறிய அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள்.
குழந்தைகள் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் சந்தோஷ்குமார் மனைவி கெஜலட்சுமி மயங்கி விழுந்தார். உறவினர்களும், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் 2 குழந்தைகளை இழந்த இந்த தம்பதியினருக்கு ஆறுதல் கூறினார்கள்.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அனைவரும் அங்கு குவிந்தனர். அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. #Denguefever