search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "children's home"

    • காலை பள்ளிக்கு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் காரை கூட் ரோடு பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்த இல்லத்தில், பெற்றோரால் கைவிடப்பட்ட, பெற்றோர் இல்லாத, மாணவர்கள் 33 பேர் தங்கி சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு சென்று மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் மாயமாகி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலை நகர் பகுதியை சேர்ந்த மாணவன் சிவக்குமார் (வயது 16) ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்து பள்ளிக்கு சென்று வந்தான்.

    நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிவக்குமார் மாலை இல்லத்திற்கு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் மாணவன் கிடைக்காததால் இல்ல கண்காணிப்பாளர் (பொறுப்பு) கோமதி ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று முன்தினம் ஒரு மாணவன் மாயமாகிய நிலையில் மீண்டும் ஒரு மாணவன் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×