search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chilli abhishekam"

    இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா இடையஞ்சாவடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வர்ணமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் செடல் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செடல் திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினமும் காலையில் வர்ணமுத்து மாரியம்மனுக்கும் அங்காள பரமேசுவரி அம்மனுக்கும் விசே‌ஷ அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகளும் நடந்தன. மேலும் இரவில் தினமும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 4 மணி அளவில் பக்தர்கள் தங்கள் உடலில் மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மனை வேண்டி பயபக்தியுடன் விரதம் இருந்த 3 பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி மிளகாய் கரைசலை ஊற்றி அபிஷேகம் செய்தார். மேலும் அந்த பக்தர்கள் மிளகாய் கரைசலை குடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து செடல் (பக்தர்கள் அலகு குத்தி வருதல்) எடுத்து வந்தும், அக்னிகுண்டம் இறங்கி தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சில பக்தர்கள் தங்கள் முதுகில் அலகு குத்தி பல்வேறு வாகனங்களையும் இழுத்து வந்தனர். தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இரவில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. 
    ×