என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coconut Farmer"
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேளாண்மைத்துறை யின் மூலம் தென்னை விவ சாயிகளுக்கான குறைதீர்க் கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி, தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், மேலும் தென்னை விவசாயிகளிடம் அதிக மகசூல் பெறுவதற்கான மேற்கொள்ளப்படும் பணி கள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் மழை குறைவு ஏற்படும் பகுதிகளில் மகசூல் குறைந்துள்ளன. மேலும் பிரதான தொழிலாக இருந்து வரும் தென்னை விவசாயிகளாகிய எங்க ளுக்கு ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவிக் கையில், தென்னை விவசா யிகளின் முக்கிய கோரிக் கையான வணிக வளாகம் அமைத்திட உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். சோலார் திட்டத்தில் உலர் கலவை அமைத்திட வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீதம் அரசு மானிய திட்டத்தில் அமைத்துக் கொடுக்கப்படு கிறது. தேவையான தென்னை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தேங்காய் பருப்பு களை நல்ல முறையில் பதப்படுத்தி மதிப்பூட்டப் பட்ட பொருளாக விற்பனை செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். நமது மாவட் டத்தில் 2 இடங்களில் தென்னை நாற்றங்கால் பண்ணை வேளாண்மை துறையின் மூலம் பராமரிக் கப்பட்டு வருகிறது. பொது வாக மண்டபம், திருப்புல் லாணி போன்ற பகுதிகளில் விலையும் தேங்காய்க்கு மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளது.
விவசாயிகள் வேளாண் மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நன் றாக பராமரித்து பயன் பெற்றிட வேண்டும். தென்னை விவசாயிகளின் தேவைகளை சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையச்செயலா ளர் ராஜா மற்றும் தென்னை விவசாயிகள், அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்