search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Complaint against Headmaster"

    • பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட கொந்தங்கரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டுவருகிறது.

    இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தராஜிலு என்பவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பாடம் நடத்தாமல் இருக்கையில் அமர்ந்து இருப்பதாக கூறி கிராம பொதுமக்கள் வட்டார கல்வி அலுவலருக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் முதல் - அமைச்சர் தனிப்பிரிவு, கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று கொந்தங்கரை பள்ளிக்கு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பிரேமலதா நேரில் சென்று பொதுமக்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடத்தினார்.

    அப்போது மாவட்ட கல்வி அதிகாரியிடம் தலைமை ஆசிரியரை வேறு ஊருக்கு மாற்றக்கோரி கிராம பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×