search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress street campaign"

    ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

    ஈரோடு:

    ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது.

    ஈரோடு மரப்பாலத்தில் தெருமுனை பிரச்சாரம் தொடங்கியது. மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தெரு முனை பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார்.

    மண்டல தலைவர்கள் ஆயுப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன், ஜாபர்சாதீக், துணை தலைவர்கள் ராஜேஸ் ராஜப்பா, கோதண்டபாணி, பாபு என்கிற செங்காடச்சலம், மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணப்பன், ஆறுமுகம். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து சூரம்பட்டி நால் ரோடு, சூளை பஸ் நிறுத்தம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. இது குறித்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கூறியதாவது.-

    மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் என தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த தெருமனை பிரச்சாரம் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×