search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cotton Market"

    • ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது.
    • பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பின்னர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அங்குள்ள கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த பூக்கடைகள் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்தது.

    இந்தநிலையில் வீரராகவப்பெருமாள் கோவில் பூ மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் திருப்பூர் பல்லடம் சாலை காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பூக்கடை வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. மேலும் காட்டன் மார்க்கெட் வளாகத்திலேயே பூ மார்க்கெட் செயல்படும் என தெரிவித்துள்ளனர். இது குறித்து காட்டன் மார்க்கெட் பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் கடைகள் அனைத்தும் தொடர்ந்து இதே வளாகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×