என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cracked fire
நீங்கள் தேடியது "cracked fire"
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் விழாவில் பட்டாசு வெடித்து மாணவி உள்பட 7 பேர் உடல் கருகினர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews
கும்மிடிப்பூண்டியை அடுத்த தோக்கம்பூரில் மாதா கோவில் உள்ளது. நேற்று ஆலயத்தில்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று இரவு மாதா சிலை ஊர்வலம் நடந்தது.
இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின் போது லோடு ஆட்டோவில் வைத்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அந்த ஆட்டோவில் சிறுவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர். ஒரு பட்டாசு வெடித்து சிதறிய போது அதன் தீப்பொறி லோடு ஆட்டோவில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் அனைத்தும் வெடித்து சிதறின.
இதில் அருகே நின்ற சென்னை அண்ணாநகரை சேர்ந்த அக்காள்- தம்பியான காவியா (9), சஞ்செய் (8) மற்றும் போந்தவாக்கம் தர்ஷினி (10), தோக்கம்பூர் அர்ஜூன் (11), ஜோசப் (5), ஹரீஸ்பாபு (6), கல்லூரி மாணவி பர்வீனா (21) ஆகிய 7 பேர் உடல் கருகினர்.
உடனடியாக அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இவர்களில் தர்ஷினி, அர்ஜூன், ஹரீஸ் பாபு ஆகியோரது நிலைமை மோசமாக உள்ளது. #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X