என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dalit"

    • பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.
    • 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லாமல் உள்ளது.

    மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இதுவரை ஒரு தலித் அல்லது பழங்குடியின பெண்ணுக்குக் கூட இடம்பெறாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நேற்று நடைபெற்ற 'சம்விதன் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

    எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்ற தரவுகளை முதலில் சேகரித்தாக வேண்டும். 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு  இல்லாமல் உள்ளது.

    இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை. ஊடகங்களில் உயர்மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்நதவர்கள் இல்லை. ஆனால் இன்னும் பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.

    விவசாயிகளைப் பற்றியோ தொழிலாளர்களைப் பற்றியோ அவை பேசுவதில்லை. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது என்று தெரிவித்துள்ளார். 

    • இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் நடைபெற்ற குடியரசு சுயமரியாதை நூற்றாண்டு விழா மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்தாலும் பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். காங்கிரசில் இருந்தாலும் தன்மான தலைவர் என பெயர் பெற்றவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியார் பகுத்தறிவு பகலவனாக இந்தியா முழுவதும் இருக்கிறார்.

    இந்தியா முழுவதும் பெரியாரின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமே பெரியாரை உற்று நோக்குகிறது. அவரின் கருத்துக்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.பெரியார் கடவுள் மறுப்பாளர், பார்பனர் எதிர்பாளர் என செய்தி பரப்பட்டுள்ளது. இது அவரின் கொள்கையும் கோட்பாடும் அல்ல. இவற்றை வலுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ராஜ தந்திரம்.

    பார்ப்பன எதிர்ப்பு என்பது பெரியாரில் இருந்து தோன்றியது அல்ல. அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 2500 ஆண்டுகளுக்கு முன்பே கவுதமபுத்தர் எதிர்த்துள்ளார். இவரின் வரிசையில் தான் பெரியார் வந்துள்ளார். பெரியார் சமூகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று தான் காங்கிரசில் இருந்து வெளியே வந்தார்.

    பெரியார் எளிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருந்து வெளியே வந்தவர். இந்தியாவில் 2 மரபினராக ஆரியம், திராவிட இருந்தது. ஆரிய எதிர்ப்பாக இருந்தது பெரியாரின் காலத்தில் பார்ப்பின எதிர்பாக இருந்தது. சனாதனம் என்பது கோட்பாடு, கல்வி, உரிமை, உழைப்பு, சுரண்டப்பட்ட நிலம், பறிக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி அதிகாரம் வழங்க குறிப்பிட்ட இடம், ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இவை சமூக நீதியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. திராவிடம் என்று சொன்னதால் தான் தமிழர் என்ற உணர்வு வரவில்லை என்பது அரசியல் மூடத்தனம். காந்தி இருந்த காலத்தில் சாதி, மதம், மொழியை மறந்து பிரிட்டிஷை இந்தியராக எதிர்த்தோம். பெரியார் காலத்தில் திராவிடம் என்ற அரசியல் தேவைப்பட்டது.

    திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது வரலாற்று பிழை. பா.ஜ.க.வினர் குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதை மக்கள் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் பாடம் புகட்டியுள்ளனர்.

    இது பெரியார் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டத்தின் விளைச்சல். 1938-ல் பெரியார் இந்தியை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் 1965-ல் போராட்டம் வெடித்திருக்காது. இப்போது நாம் இந்தி பேசக்கூடிய சமூகமாக மாறி இருந்திருந்தால் மோடியின் வித்தை எடுபட்டிருக்கும். உன்னாலும் போராட முடியும், சாதிக்க முடியும், வாழ்ந்து காட்ட முடியும், நீதிபதி, முதலமைச்சர், பிரதமராக முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் பெரியார் தான்.

    தலித்துகள் இங்கு முதலமைச்சராக முடியாது என நான் சொன்னது எனது வேட்கையில் சொல்லவில்லை. இயலாமையால் உலறவில்லை. இன்றைக்கு இருக்கிற சமூக இருப்பு எவ்வாறாக உள்ளது, சாதிய கட்டமைப்பு எவ்வாறு வலுமையாக உள்ளது. அவற்றை தகர்க்கின்ற சூழல் இன்னும் கனியவில்லை. எனவே இதை தகர்க்க ஜனநாயக சக்திகள் தயாராக வேண்டும் என்கிற எச்சரிக்கையை கொடுக்கின்ற உரை.

    மாநில அரசுகளிடம் சமூகங்களை இட ஒதுக்கீடு என்ற பெயரில் கூறு போடுகிற அதிகாரத்தை தருவது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்துள்ளது. இது குறித்த விமர்சனம் தான் என் மீது எதிர்மறையாக கருத்து உருவாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் பொறுத்தவரை அருந்ததியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீட்டை முதலில் இருந்து ஆதரித்துள்ளது.

    தமிழகத்தில் ஓ.பி.சி சமூகத்தில் உள்ள சிறுபான்மையினர் முதல்வராக வர முடிகிறது, தமிழர் அல்லாதவர் முதலமைச்சராக வர முடிகிறது. பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக்கூடிய முக்குலத்தோர், வன்னியர், நாடார், கவுண்டர் முதல்வராக வர முடியவில்லை. இதுவும் ஒரு அரசியல். ஒரு தலித் முதலமைச்சர் ஆக வர முடியாது என்ற சோசியல் ஸ்ட்ரக்சர் (சமூக கட்டமைப்பு) இங்கு உள்ளது. இந்திய குடியரசுத் தலைவராக பழங்குடியினர், தலித் வகுப்பைச் சேர்ந்தவர் வரமுடியும் ஆனால் பிரதமராக வர முடியுமா? விடுதலை சிறுத்தைகள் பெரியாரின் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட பெரியார் இயக்கம்.

    தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பெரியாரை கொண்டு சேர்த்தது திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகளும் தான். அம்பேத்கர் இயக்கங்கள் பெரியாரை ஓ.பி.சி தலைவராக பார்த்ததை உடைத்தது விடுதலை சிறுத்தைகள் தான். சமத்துவத்தை நிலை நாட்டும் வரை பெரியார் தேவைப்படுகிறார்.

    பெரியாரின் அரசியல் சமூக நீதி மற்றும் சமத்துவ அரசியல். இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் இல்லை. இதை தான் தலித் இந்த மண்ணில் முதலமைச்சராக முடியாத நிலை உள்ளது என கூறினேனே தவிர எனது ஏக்கம் மற்றும் இயலாமையால் சொல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம்.
    • செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    இந்திய ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ரெயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை சதீஷ்குமார் பெற்றுள்ளார்

    செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

    சதீஸ்குமார் 1986 ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    • சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் 6 பேர் கைது.
    • கைது செய்யப்பட்ட 6 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நடந்த நிகழ்ச்சியில் வயர்களை திருடியதாக குற்றம்சாட்டி 12 வயது பட்டியலின சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வீடியோ வைரலானது அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை சந்தித்து இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி போலீசார் வலியுறுத்தியுள்ளனர். பின்னர் சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கௌரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

    கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று
    • இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது

    பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள 2 சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நில தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், நிலத்தகராறு தொடர்பாக மஞ்ஹி தோலா எனப்படும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் உள்ள 21 குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் இத்தகைய அராஜகங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் நடக்கின்றன. இந்தக் கொடூரச் சம்பவம், பீகாரில் நடக்கும் காட்டு தர்பாருக்கு மற்றுமொரு சான்று என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

    தலித்துகளின் குடிசை எரிக்கப்பட்டதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது.
    • வறுமையால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவரது பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை

    தான்பாத் ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்து, வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சேர்க்கை மறுக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வறுமை காரணமாக கல்விக் கட்டணமாக கட்டவேண்டிய ரூ.17,500 பணத்தை ஜூன் 24ஆம் தேதிக்குள் கட்ட அவரது பெற்றோர் தவறியதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.சி. எஸ்.டி ஆணையம் என எங்கும் தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அம்மாணவனின் தந்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கில், இவ்வளவு திறமையான மாணவன் படிப்பை கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

    அதுல் குமாரை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடியிடம் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    • பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
    • இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.

    மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம்.

    படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.

    அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்
    • அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் நவராத்திரியை முன்னிட்டு நடந்த ராம்லீலா நாடகத்தை நாற்காலியில் உட்கார்ந்து பார்த்ததாகத் தலித் நபரை போலீசார்  தாக்கியுள்ளனர். உ.பி. மாநிலம் காஸ்கஞ்ச்[Kasganj] மாவட்டத்தில் உள்ள சலேம்பூர் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நவராத்திரி விழாவை முன்னிட்டு ராமாயண புராணக் கதைகளைக் கூறும் ராம்லீலா நாடக நிகழ்ச்சி நடந்துள்ளது.

    இந்த நாடகத்தைப் பார்க்க ஆவூரைச் சேர்ந்த சந்த் [Chand] [ 48 வயது நபர்] வந்துள்ளார். அங்கு காலியாக கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாற்காலியில் உட்கார்ந்து ராமாயண நாடகத்தைப் பார்த்ததால் கொதிப்படைந்த சாதிய வக்கிரம் கொண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர் சிலரை ஏவி சந்த் -ஐ அடிக்க வைத்துள்ளனர். அந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சந்த் -இன் கழுத்தில் இருந்த துண்டை பிடித்து இழுத்து சேரில் இருந்து கீழே தள்ளி சாதிப் பெயரைச் சொல்லி திட்டி மிதித்தும் சரமாரியாக அடித்தும் உள்ளனர்.

    இதனால் சந்த் அழுதுகொண்டே, நாடகம் பார்க்க வந்தவர்களிடம் தான் செய்த தவறு என்ன என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது கேள்விக்கு யாரும் பதிலளிக்கவில்லை. பின் அங்கிருந்து தனது வீட்டுக்கு வந்த சந்த் தனது மனைவி ராம் ரதியிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

    திங்கள்கிழமை காலை எழுந்து பார்க்கும்போது தனது கணவர் வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை மனைவி ராம் ரதி பார்த்துள்ளார்.  இந்நிலையில் இதுதொடர்பாக மனைவி ராம் ரதி போலீசில் மேற்கூறியபடி நடத்தவை குறித்து புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாகப் பேசிய காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் பாரதி, ராம்லீலா நிகழ்ச்சிக்கு மதுபோதையில் வந்த சந்த் மேடை மீது ஏறி அமர்ந்துள்ளார்.அவரை அப்புறப்படுத்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளனர். எனவே அவரை போலீஸ் மேடையில் இருந்து இறக்கியுள்ளது. அதன்பின் அவர் பத்திரமாக வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் காலையில் அவர் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். சந்த் தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளை விவசாய வேலைகள் செய்து காப்பாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் 133 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்
    • பாஜகவின் கிஷன் லால் 130 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

    டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றுள்ளார். தேவ் நகர் வார்டு கவுன்சிலரான அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் கிஷன் லாலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகையை சூட்டியுள்ளார்.

    மொத்தமுள்ள 265 வாக்குகளில், மகேஷ் 133 வாக்குகளை பெற்றார். கிஷன் லால் 130 வாக்குகள் பெற்றார். 2 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த வெற்றியின் மூலம் டெல்லியின் முதல் தலித் மேயர் என்ற பெருமையை மகேஷ் பெற்றுள்ளார்.

    மேலும், டெல்லி துணை மேயர் தர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கவுன்சிலர் நீதா கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இதனால் டெல்லி துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ரவீந்திர பரத்வாஜ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டெல்லியில் 120 கவுன்சிலர்களை கொண்டுள்ள பாஜக மேயர் தேர்தலில் 130 வாக்குகளை பெற்றுள்ளது. ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் சில கவுன்சிலர்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.

    • போராட்டங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்ட்டனர்.
    • சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

     

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 [ஞாயிற்றுக்கிழமை] காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட அவரது பிரதேச பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.

     

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில்  மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர்.

    பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்கு பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியுள்ளது.

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது.

    பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

     

     

    இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். 

    • நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி சட்டக்கல்லூரியில் படித்து வந்தார்
    • இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    மகாராஷ்டிர மாநிலம் பர்பானி [Parbhani] நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரெயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பு பிரதியை எரிதத்தை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

    பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உட்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக [vandalism] 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

     

     

    அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA) தலித் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவர் டிசம்பர் 15 காலையில் அவர் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்தார்.

    நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக போலீஸ் தெரிவித்தது. ஆனால் போராட்டத்தின்பின் பின் வீடியோ பதிவுடன் நடத்தப்பட்ட பிரேத  பரிசோதனையில் சூர்யவன்ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்த காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே போலீஸ் கஸ்டடியில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியானது.

    நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தவர். இவரது சகோதரரும் தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.

     

    பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட்டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.

    சூரியவனாக்ஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத்துக்குள் நுழைய விடாமல் போலீசால் தடுக்கப்பட்டனர். அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வர போலீஸ் அனுமதிக்கவில்லை. ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்பால் போலீஸ் பின்வாங்கியது.

     

    காவல்துறை வேண்டுமென்றே தலித் குடிசைகளுக்குள் நுழைந்து சொத்துக்களை அழிப்பதை உள்ளூர் வாசிகளால் பதிவுசெய்யப்பட்ட பல வீடியோக்கள் காட்டுகிறது. 

     பர்பானிக்கு மாவட்டத்தில் தலித்-பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் மரணம் எடுத்துக்காட்டுவதாகவும் இந்த விவகாரத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

    இன்னும் பர்பானியில் கொந்தளிப்பான சூழல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, போலீஸ் சித்திரவதையில் உயிரிழந்த சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷியின் குடும்பத்தினரை நேற்று [திங்கள்கிழமை] நேரில் சென்று சந்தித்துள்ளார்.

     

    மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்தித்த பின் பேசிய ராகுல் காந்தி, தலித் என்ற காரணத்திற்காகவும், அரசியல் சாசனத்தைக் காத்ததற்காகவும் இளைஞன் கொல்லப்பட்டான்.இது ஒரு 100 சதவீத லாக் அப் மரணம். காவல்துறை அவரை கொன்றுவிட்டது.

    காவல்துறையை பாதுகாக்க சட்டசபையில் முதல்வர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அரசியல் சாசனத்தை துடைத்தெறிவதே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் நோக்கம் துடைத்து என்று ராகுல் தெரிவித்தார்.

    இதற்கிடையே புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தி அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இங்கு வந்தார். மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதே அவரது வேலை. கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்து வருகிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று தெரிவித்தார். 

    • கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடு வழங்கவேண்டும்.
    • தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது.

    பெரம்பலூரில் தலித் இளைஞர் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்ட விவாகரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், வஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.

    சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

    கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும், இத்தகைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று சிபிஐ(எம்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    ×