என் மலர்
நீங்கள் தேடியது "Dargah"
- 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
- 8-ந்தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற தர்காக்களில் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கந்தூரி விழாவிற்கு வருவது வழக்கம்.
கந்தூரி விழாவையொட்டி நேற்று கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பச்சை களை ஊர்வலம், 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவண சமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, 6-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைகிறது.
இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 8-ந் தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேலாண்மை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
- நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், நாலு கொடி கந்தூரி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்கீர்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.
அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்கீர்மார்கள், பொது மக்கள் சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் விளையாடி ஆன்மிக பாடல்கள் பாடி மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வழுத்தூர், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் அப்துல் ரவூப் முன்னிலையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், ஓ.பி.பசீர் அகமது, கமாலுதீன் பைஜி, முகம்மது நஜீர், ராஜம்மா மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
- சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு பலர் சந்தனம் பூசினர்.
- இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர் யூசுப் நெய்னா தெருவில் சுல்தான் கலிபா சாஹிப் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று மாலை நேர தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. தொடர்ந்து சுல்தான் கலிபா சாஹிப் சமாதிக்கு, தர்கா டிரஸ்டி ஷேக் ஹஸன் சாஹிப் உள்ளிட்ட பலர் சந்தனம் பூசினர்.
இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
- தினமும் மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது.
- ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
திருச்செங்கோடு மஜித் தெருவில் உள்ள ஹஜ்ரத் மஹபூபே சுபஹானி தர்காவில் 140-ம் ஆண்டு சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தர்காவில் தினமும் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மஹபூபே சுபஹானி பயான் வரலாறு படிக்கப்பட்டது. இதில் இந்து, முஸ்லிம்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சந்தனக்குட உரூஸ் கந்தூரி விழா முஸ்லிம் மஜீத் முத்தவல்லி முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது. நிர்வாக கமிட்டியினர் முன்னிலை வகித்தனர். கவுஸ் மைதீன் கொடியேற்றி சந்தனக்கூடு விழாவை தொடங்கி வைத்தார். ஷேக் உசேன் சந்தனக்குடத்தை தலையில் தாங்கி கொண்டு ஊர்வலமாக சென்றார்.
சந்தனக்குடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 4 ரத வீதிகளில் ஊர்வலமாக சென்று தர்கா வந்தடைந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ் பாபு, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன் முருகன் மற்றும் திருச்செங்கோடு, சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.
- நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
- தர்கா முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் தர்காவில் சந்தனக்கூடு விழாவானது கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் இரவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதற்காக மின் விளக்குகளால் கப்பல் போன்று அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதமானது, ஊர்வலமாக சிலம்பாட்டம், மேளதாள வாத்தியங்கள் முழங்க, தெற்குமாரட் வீதி, காஜிமார்தெரு, நேதாஜி ரோடு, சிம்மக்கல், நெல்பேட்டை வழியாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த விழாவில் மதுரை மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்தனர். சந்தனகூடுவிழாவினை முன்னிட்டு தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- துதிபாடும் நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது.
- பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாராவியில் 57-வது சந்தன கூடு திருவிழா கடந்த 2-ந் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை தாராவி 90 அடி சாலை சங்கம் கல்லியில் உள்ள அஸ்தானா தர்கா மற்றும் சன்னி ஜிலானி மசூதியில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி நீராட்டு விழாவும், மறுநாள் கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடந்தது.
இதனை தொடர்ந்து துதிபாடும் நிகழ்ச்சி தினமும் மாலை 6 மணி அளவில் நடந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி, ராகுல் செவாலே, சயான் கோலிவாடா பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சந்தன கூடு ஊர்வலமாக சங்கம் கல்லி, 90 அடிசாலை, கும்பர்வாடா, ஷாகுநகர், ஜாஸ்மின் மில் ரோடு, மாகி பாடக், படி மஸ்ஜித், ஹோலி மைதானம், காலக்கில்லா எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சங்கம் கல்லி வந்தடைந்தது.
அதன்பின்னர் சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற்றது. தொழுகைக்கு பின்னர் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
கோபால்பட்டி அருகே கணவாய்பட்டியில் பக்கீர் செய்யது சாயுபு தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு திருவிழா தர்காவில் கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சந்தன குட ஊர்வலம், சந்தனம் பூசுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கந்தூரி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முடிவில் பொதுமக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் தர்மராஜன், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக்சிக்கந்தர் பாட்ஷா, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷா ராமகிருஷ்ணன், கணவாய்பட்டி ஜமாத் தலைவர் ராஜ்கபூர், செயலாளர் பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார்.
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பாசிப்பட்டறைதெரு முஸ்லிம் ஜமாத் சார்பில் நபிகள் நாயகம் பிறந்ததின மீலாது விழா மற்றும் முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி நினைவு கந்தூரி மற்றும் மவுலிது விழா ஜமாத் டிரஸ்டி காதர் முகைதீன் தலைமையில் நடைபெற்றது.
நிர்வாக டிரஸ்டி அசரப் அலி, டிரஸ்டிகள் காதர், உஸ்மான் அலி, ஜபருல்லா, சைரூஸ் அலி, செய்யது அபுதாகிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதரசா ஆசிரியர் சம்சுதீன் ஆலிம் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். பாடகர் சீனி முகமது இஸ்லாமிய கீதம் பாடினார். தலைமை இமாம் அப்துல்காதர் வரவேற்றார். ராமநாதபுரம் நகர் வட்டார உலமா சபை தலைவர் முகமது யாசின், சேலம் தலைமை இமாம் முகமது இப்ராஹிம் ஆகியோர் பேசினர்.
கந்தூரி விழாவையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு அன்னதானம் வழங்கப்பட்டது. மவுலிது நிகழ்ச்சியில் ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் இமாம்கள், ஆலிம்கள், உலமாக்கள், ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மவுலவி சேக் அப்துல் காதிர் உலக நன்மைக்காக பிரார்த்தனை துவா ஓதினார். முடிவில் துணை இமாம் அன்வர் அலி நன்றி கூறினார்.
- அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும்.
- நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் சுமார் 721 ஆண்டுகளாக மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் தர்காவாக ஹக்கீம் ஷெக்ய்கு தாவூது தர்கா அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்த தர்கா விளங்கி வருகிறது. புகழ்பெற்ற தர்காவின் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் அதற்கான கொடி மரம் நடுவிழா நேற்று நடைபெற்றது.
தொடந்து, வருகிற 25-ம் தேதி புனித கொடி ஏற்றப்பட்டு அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். நிறைவு நாளில் கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். விழாவில் ஜாதி, இன, மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு விழாவை சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர்.
இங்கு மதங்களை கடந்து மனங்கள் சங்கமிப்பதும், மனித நேயம் உயிரோடு இருப்பதும், தர்காவில் உள்ள மகானின் சிறப்பம்சம் என கூறப்படுகிறது. மேலும், இந்த விழாவிற்கு விஷ்வகர்மா சங்கம் மூலம் புனித கொடி வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 14 நாட்கள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கந்தூரி விழாவிற்கு மாவட்டம் நிர்வாகம் சார்பில் சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், போலீசாரும் உரிய பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்தனர். எனவே, அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முத்துப்பேட்டை தர்கா நிர்வாகத்தினர், பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாஸ்கர் அலி தெரிவித்துள்ளனர்.
- சோழவந்தான் அருகே தர்காவில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
- இதில் தமிழ்மகன் உசேன், உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகையாற்று கரையோரமுள்ள தர்காவில் அ.தி.மு.க. அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் வேண்டி சிறப்பு தொழகை நடந்தது.
இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் தொழிற்சங்க நிர்வாகி மணி, கிழக்கு மண்டலம் ஜெயபால், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட மருத்துவ அணி கருப்பையா, பேரூர் செயலாளர் முருகேசன், ராமசந்திரன், தென்கரை ராமலிங்கம், கண்ணன், திருமங்கலம் தமிழழகன், வக்கீல் திருப்பதி, அஷ்ரத் கவுஸ் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.
- கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
ஜாம்புவானோடை தர்கா சமூக நல்லிணக்கத்துக்கு சான்றாக விளங்குகிறது என பாரம்பரிய முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹிப் உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அன்றைய காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை இருந்தது. இதன் அருகே உள்ள ஒரு கிராமம் ஜாம்புவானோடை. கடந்த 1306-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி (ஹிஜ்ரி 727 ஜமாதுல் அவ்வல் மாதம் முதல் பத்து) அன்று ஜாம்புவானோடை கிராமத்தை சேர்ந்த கருப்பையா கோனார் என்பவர் விவசாயத்திற்காக ஏர் உழுது கொண்டிருந்தார்.
அப்போது ஏர் கொம்பு முனை பட்டு நிலத்தில் இருந்து ரத்தம் பீரிட்டு கருப்பையா கோனாரின் கண்களில் அடித்தது. இதனால் அவர் உடல் தளர்ந்து கண்ணொளி மங்கி தள்ளாடியவராக வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஒருவித மன குழப்பத்துடன் அவர் இரவு உறங்கும்போது, அதுவரை பார்த்திடாத அழகிய அரபி தோற்றமுடைய பெரியவர் கனவில் தோன்றி, 'நீர் ஏர் உழுத இடத்தில் நான் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கின்றேன்.
என்னுடைய பெயர் ஷெய்குதாவூது என்பதாகும். உன்னுடைய இரு கண்களும் எல்லாம் வல்ல அல்லாவின் அருளால் மீண்டும் பிரகாசம் பெற்றுவரும் கவலைப்பட வேண்டாம். இங்கிருந்து 6 கல் தொலைவிலுள்ள நாச்சிகுளத்தில் வட புலத்தைச் சார்ந்த 2 பெரியவர்கள் கபீர்கான், ஹமீதுகான் ஆகிய இருவரிடம் சென்று நடந்ததை கூறி அவர்களை அழைத்து வந்து ஏர் உழுத இடத்தில் தெற்கு வடக்காக எனது தலைபாகத்திலும், கால் பாதத்தில் இரண்டு புஷ்பங்கள் இருப்பதை காண்பீர்கள் என்று கூறி ஜியாரத்தை கபுர் இருக்கும் இடத்தை அமைத்து விளக்கு ஏற்ற சொல் என கூறிவிட்டு அந்த மகான் மறைந்து விட்டார்கள்.
இதையடுத்து அவர் கண்விழித்து பேரானந்தத்துடன் மகான் சொன்ன பெரியவர்களை சந்தித்து அழைத்து வந்து விளக்கேற்றி ஜியாரத் செய்தார்கள். அன்று முதல் எண்ணிலடங்காத அற்புதங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன.
மனித அறிவுக்கு அப்பாற்பட்டு மனித குலம் மற்றும் மருத்துவ உலகம் ஆச்சரியத்தில் உறையும் வண்ணம் பலப்பல நிகழ்வுகள் கடந்த 715 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அதன் நினைவாக மகான் அவர்களுக்கு அன்று தொட்டு இன்று வரை பெரிய கந்தூரி விழா 14 நாட்கள் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
ஜமாதுல் அவ்வல் பிறை 1-ல் புனித கொடி ஏற்றம், ஜமாதுல் அவ்வல் பிறை 10-ல் புனித சந்தனக்கூடு, ஜமாதுல் அவ்வல் பிறை 14-ல் புனித கொடி இறக்கமும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். குறிப்பாக மேன்மை தங்கிய மகான் ஹக்கீம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகையை நாகூர் குத்பு ஜமான் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம், கீழக்கரை பல்லாக்கு வலியுல்லா, இலங்கையில் அடக்கமாகி அருள்பாலிக்கும் மகான் தாலையன் பாவா, மகான் பொதக்குடி நூர் முஹம்மது வலியுல்லா, மகான் சதக்கத்துல்லா அப்பா ஆகியோர் இந்த உலகை விட்டு மறையும் முன்பு ஜியாரத்து செய்தார்கள் என்பது சிறப்பம்சம்.
எங்கள் மகான் நிகழ்த்திய அற்புதங்கள் மிகவும் அதிகம். இந்த மகானின் தர்கா தஞ்சையை ஆட்சி செய்த அச்சுதப்ப நாயக்கர்களால் மராட்டிய கலை நயத்துடன் கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை சாதி, மத பேத மில்லாமல், சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களுக்கும் நன்மையும், நலமும், வளமும், இறையருளும் என்றென்றும் கிடைக்க எங்கள் மேன்மைதங்கிய மகான் ஹக்கிம் ஷெய்குதாவூது காமில் வலியுல்லாஹ் ஆண்டகை எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் இருகரம் ஏந்தி துஆச் செய்தவர்களாக இருக்கிறார்கள். இது இன்ஷா அல்லாஹ் கியாமத் நாள் வரை தொடரும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
- யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா கந்தூரி விழா தொடங்குவதை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார். தர்கா குளத்தை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
அப்போது தர்காவை சுற்றியுள்ள சாலைகளில் பேவர் பிளாக் அமைப்பது மற்றும் யானைகட்டி முடுக்கு பகுதியில் இரு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது தர்கா நிர்வாகிகள், நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில் குமார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர், நகராட்சி ஆணையர், நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.