search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death with a key"

    • மதுபோதையில் நண்பர்கள் வெறிச்செயல்
    • போலீசார் 3 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையத்தை சேர்ந்தவர் ஹக்கீம் (வயது 38). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மீனாங்கரை ரோட்டை சேர்ந்த அல்பாரூக் (47), இந்திரா நகர் காலனியை சேர்ந்த முருகேசன் (43),குமாரபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் (48) ஆகியோருடன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றார். அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஜாலியாக மது குடித்தனர்.

    போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து சாவியால் ஹக்கீமின் முகம் மற்றும் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் 3 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஹக்கீமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹக்கீமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சாவியால் குத்திக்கொலை செய்த அல்பாரூக், முருகேசன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×