என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "devara"
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
- இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.
சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.
மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.
இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-
எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.
காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் ’தேவரா’.
- ’தேவரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் 'தேவரா'. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் 'தேவரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தேவரா' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அதில், 'இந்த கடல்ல மீன விட அதிகமா ரத்தமும் கத்தியும் கொட்டி கிடக்கு. அதுனால் தான் இதுக்கு பெயரு செங்கடல்' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இதனால் வைபான ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
- கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தில் நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.
என்டிஆர்30
இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் சில தினங்களுக்கு முன்பு இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது.
தேவரா போஸ்டர்
இந்நிலையில், ஜூனியர் என்டிஆர் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தேவரா' என பெயரிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் ரத்த கறையுடனான கத்தியுடன் ஆக்ரோஷமாக ஜூனியர் என்டிஆர் நிற்கும் முதல் தோற்ற போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
#Devara pic.twitter.com/bUrmfh46sR
— Jr NTR (@tarak9999) May 19, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்