என் மலர்
நீங்கள் தேடியது "Development works"
- அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும்.
- மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் அனைத்துத் துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்நடைபெற்றது. கலெக்டர் வினீத முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின் போது திருப்பூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாதவை, தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், ஆகிய திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். தமிழக அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ வேண்டும் என்றார்.
தொடர்ந்து, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பெண் குழந்தைகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் வைப்புத்தொகை பத்திரத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
- ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்புச் செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், தெக்கலூா் அங்கன்வாடி மையம், கிட்டாம்பாளையம் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம், நம்பியாம்பாளையம் மற்றும் ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
அதேபோல, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் நஞ்சண்ணன்குட்டை பகுதியில் குளத்தை தூா்வாரும் பணி, நம்பியாம்பாளையம் ஊராட்சியில் ஆரம்ப சுகராதார நிலையத்தில் உள்ள மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருந்து இருப்பு ஆகியவை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமானப் பணி, ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமானப் பணி, ஈஸ்வரமூா்த்தி பூங்காவில் கழிவறை கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
பின்னா் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- 2022-2023 ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டபணிகள் குறித்து நடைப்பெற்றது.
- தொகுதி மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தல்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்தும், 2022-2023 ஆம் ஆண்டு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்தும், ஆய்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கூடுதல் ஆட்சியர், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி செயற்பொறியாளர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூட்டத்தில் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
- தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு கிராமசபை கூட்டம் ஊராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் கோபிநாத் நிர்மல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராஜ்குமார்,வார்டு உறுப்பினர்கள் மல்லிகா, முருகேஸ்வரி,சொர்ணா, சுப்புலெட்சுமி, தெய்வராணி, அரி கிருஷ்ணன், முத்து கணபதி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி செயலர் சுப்பையா வரவேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பார்வை யாளராக மண்டல துணை வட்ட வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரி கலந்து கொண்டார். சிறப்பு கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முள்ளக்காடு ஊராட்சியில் அடிப்படை வளர்ச்சி திட்ட பணிகளான சாலை வசதி, வடிகால், பேவர் பிளாக் சாலை, தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் பராமரித்தல், வரி வசூலை முழுமையாக வசூலித்தல் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் 2 ஆயிரம் மரங்களை வளர்த்தல் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வ லெட்சுமி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 9 யூனியன்களில் வள்ளியூர், ராதாபுரம், அம்பை ஆகிய 3 யூனியன்களை தவிர மீதம் உள்ள யூனியன்களில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 208 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.4 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாவட்டம் முழுவதும் வளர்ச்சி பணிக்காக சுமார் ரூ.6 கோடி ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
- தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில் துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை துவக்கி வைத்ததை தொடர்ந்து, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், ரூ.5.83 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகை காலத்தில், போக்குவரத்துத்துறை சிறப்பாக செயல்பட்டதென பொதுமக்கள் தமிழக அரசை பாராட்டுக்கின்றனர். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை இறுதியில், தீபாவளி பண்டிகைக்கு என நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட குறைவாக வசூல் செய்யப்படும் என உறுதியளித்தார்கள். அதன்படி தீபாவளி பண்டிகையின்போது புகார்கள் வராத அளவிற்கு தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. தீபாவளி பண்டிகையின்போது அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்கி, பொதுமக்களின் பாராட்டை பெற்றது. இப்பொழுது ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் பெறப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டதில் 4 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.10,000 வரை திரும்ப பெறப்பட்டு, மக்களிடத்தில் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தின்போதும், பொங்கல் பண்டிகையின்போதும் இவ்வாறு நிகழா வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.
- ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரிபுதூர், வி.முத்து லிங்காபுரம், பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தம்ம நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தை களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய புதிய கட்டடப் பணிகளையும், கன்னிசேரிபுதூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டுள்ளதையும், அந்த பகுதியில் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
வி.முத்துலிங்காபுரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பாவாலி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்கப்பட்டுள்ள தையும், கூரைக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.15 மதிப்பில் நர்சரி கார்டன் மற்றும் கிணறு மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி, அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- அருப்புக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர் ஆனந்த்குமார், கலெக்டர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்படி கூரைக்குண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்டு ஆசிரியர்களிடம் மாண வர்களின் வருகை பதிவு, கல்வி கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்ததுடன் கழிவறைகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். கழிவறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
பின்னர், குல்லூர் சந்தையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் மானிய விலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் கவுசிகாநதி உழவர் உற்பத்தியாளர் நிறு வனத்தின் ஒருங்கிணைந்த முதல்நிலை சுத்திகரிப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள், தரம், சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மருந்துகள், அங்கு வழங்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் வருகை குறித்தும், நாய்க்கடி மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ.340 லட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும், ரூ.11.30 லட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ.3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவல, கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட் ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- வெம்பக்கோட்டை யூனியனில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
- இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை யூனியன் எதிர்கோட்டை கிராம நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் அவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
ஆலங்குளம் கிராம அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டசத்து உணவு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். கல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மருத்துவமனையில், அனைத்து விதமான நோய்கள், தொற்றா நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தார். உயர்சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் கலெக்டர் மருத்து வர்களை அறிவுறுத்தினார்.
கல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் கலந்துரையாடிய கலெக்டர், அவர்களின் லட்சியம் குறித்து கேட்டறிந்து, ஆசிரியர்களிடம் இடைநிற்றல் மாணவர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் பள்ளி கல்வியை தொடர தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
குண்டாயிருப்பு ஊராட்சியில் கனிமவள நிதி திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கான 21 தொகுப்பு வீடுகள் ரூ.128.1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு அலுவ லர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் பெருமளவு மரக்கன்று நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெம்பக்கோட்டை வட்டம், மேட்டுக்காட்டில் தொல்லியல் துறை மூலம் நடைபெற்று வரும் முதல்கட்ட அகழாய்வு குழிகளையும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து, 2-ம் கட்ட அக ழாய்வு பணி நடைபெற இருக்கும் இடம் குறித்து கேட்டறிந்தார்.
வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளான ஆதார் இணைப்பு, வேளாண் கணக்கெடுப்பு, இ-அடங்கல், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.
வெம்பக்கோட்டை அணையில் நீர் இருப்பு, நீர்வரத்து, வரத்து கால்வாய், மதகுகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பயன்பெறும் பாசன நிலங்கள் குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியளார் (வைப்பாறு) கணபதி ரமேஷ், வட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பார்வை யிட்டார்.
- கொடைக்கானலில் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானல் பகுதியில் பஸ் நிலையம் சீரமைத்தல், ஏரி அபிவிருத்தி பணிகள். புதிய காய்கறி அங்காடி அமைக்கும் பணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறைகள், ஆடு, மாடு வதைக்கூடம், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளில் நடைபெற்று வரும் விரிவாக்கப்பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா பார்வை யிட்டார்.
அவருடன் நகராட்சி களின் மண்டல இயக்குனர் சரவணன், மண்டல பொறியாளர் மனோகரன், கொடைக்கானல் நகராட்சி நகர்மன்றத்தலைவர் செல்லத்துரை,துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகராட்சி ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் உட்பட நகராட்சித்துறை அதிகாரி கள் உடன் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது,
கொடைக்கானல் நகரில் உள்ள நட்சத்திர ஏரி பகுதி யில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக சுமார் ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் சீசன் கால ங்களுக்குள் இவை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பா ர்க்கப்படுகிறது. அதேபோல மீதமுள்ள 17 கி.மீ தொலை சாலைகள் அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு ள்ளது. நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் உள்ள கே.ஆர். ஆர் கலையரங்கம் பகுதியில் சுமார் ரூ. 35 கோடி செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைய உள்ளது. இதில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெறும். அத்துடன் நகரின் மையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இடத்திலும் ஒரு அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக இடம் பார்வையிடப்பட்டது. கொடைக்கானல் நகரில் குடிநீர் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் ரூ.2½ கோடி செலவில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏரிச் சாலையை சுற்றியுள்ள சாலை நெடுஞ்சாலை த்துறைக்கு சொந்தமானது.
அதனை முழுமையாக அமைக்கும் பணி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் உள்ள பஸ் நிலையம் சுமார் ரூ.1½ கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
நகரில் குப்பைகளை அகற்றுவதற்காக தனியார் வசம் டெண்டர் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.சென்னையில் உள்ளது போல தரம் பிரிக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்படும்.
நகரில் உள்ள 1918 மின்விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு எல்.இ.டி விளக்குகளாக மாற்றப்பட உள்ளது. மேலும் 600 இடங்களில் புதிய மின்கம்பங்களுடன் கூடிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் ரூ.90 கோடி செலவில் நடை பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் சீசன் காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பிரகாசபுரம் பகுதியில் ஏற்கனவே குப்பைகளை அகற்றுவது குறித்து இடம் பார்வை யிடப்பட்டு அதிகாரிகளிடம் ஆலோ சனை நடத்தப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.