என் மலர்
நீங்கள் தேடியது "Devotees darshan"
- தொண்டி, சாத்தூர், தேவகோட்டை கோவில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள உந்தி பூத்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அலங்க ரிக்கப்பட்ட பல்லக்கில் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தூரில் பிரசித்தி பெற்ற வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
காலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அந்த வழியாக சாத்தூரப்பன் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடந்தது. அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும், அதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பும் நடந்தது. சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளிய ரெங்கநாத பெருமாளை திரளான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
- 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாமந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மகாகும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு மங்கள இசை, அனுக்கை, சங்கல்பம், கணபதிபூஜை, லட்சுமி ஹோமம்நவக்கிரக தீப ஆராதனைஇரண்டாம் கால யாக பூஜைகள்மூன்றாம் கால யாகசாலை பூஜைகள்மூலிகை ஹோமங்கள் பூஜைகள் நாடி சந்தானம்வருண பூஜை,வாஸ்து சாந்தி முதலிய சிறப்பு பூஜைகளும் இன்று அஷ்டபந்தன பூர்ணாகஹீதி கடம்புறப்பாடு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்று.
அதன் பின்னர் இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நாடி சந்தானம் தத்துவர்ச்சனை மூலிகை ஹோமங்கள் மகாபூர்ணா குதி, மகா தீபாரதனை கடம் புறப்பாடு ஆலய வலம் வருதல் முதலிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று பின் வாகன சுந்தரம் குருக்கள் கும்பாபிஷேக நீர் ஊற்றி 9.30 மணிக்கு பொற்கலை அய்யனார் ஆலய கும்பாபிஷேகம் அமைச்சர் அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்று பின் 10.30 மணிக்கு மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினைக்காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்தில் 3 முறை வலம் வந்து முருகப்பெருமான்-தெய்வானை அருள்பாலித்தனர்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம்
முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் வைர தேரோட்டம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்.
விழாவின் சிகர நிகழ்ச்சி யாக தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் சன்னதி யில் சுப்பிர மணியசுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடை பெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி னார். பின்னர் சன்னதி தெரு வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளினர்.
அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத் தேரில்(மிதவை)தெய்வானை யுடன், சுப்பிரமணியசுவாமி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் இன்று இரவு மின் ஒளியில் தெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அப்போது வான வேடி க்கைகளும் இசை கச்சேரி களும் நடை பெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வருவார். அப்போது சன்னதி தெருவில் உள்ள சொக்க நாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.
- குங்கும அர்ச்சனை, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது
- சாமி வீதி உலாவில் பக்தர்கள் தரிசனம்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூரில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 70 -ம் ஆண்டு திருத்தேர் உற்சவ விழா முன்னிட்டு, வல்லாள கண்டி சம்ஹாரத் திருவிழா நடைபெற்றது.
கடந்த 18-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன்தொடங்கிய விழா மகா சிவராத்திரி, மயான கொள்ளை, என தொடர்ந்து, 108- சுமங்கலிபெண்கள் கலந்துகொண்ட குங்கும அர்ச்சனை விழா, 10,008 நாமாவளி பூஜைகள் நடந்தது.
நேற்று இரவு மருத்துவகுல சமுதாயத்தினர் சார்பில் வல்லாள கண்டி சம்ஹார விழா நடந்தது.
ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவில் அருகே களிமண்ணால் செய்யப்பட்ட வல்லாள கண்டன் உருவ பொம்மை முன்பாக, தெருக்கூத்து கலைஞர்களால் நாடகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் வாணவேடிக்கை மற்றும் மேளதாளம் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா வந்தார்.
- ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வாராகி ஹோமத்துடன் பஞ்ச மஹா யக்ஞம் நடந்தது.
பஞ்சமி திதியை முன்னிட்டு வாழ்வில் வளம் பல பெறவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் சூலினி, காளி, திரிபுர பைரவி, பகுளாமுகி, வாராகி என பஞ்சமுகங் களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு விசேஷ மூலிகைகள், மஞ்சள் கிழங்கு, கோரைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, போன்ற எண்ணற்ற கிழங்கு வகைகளைக் கொண்டு சிறப்பான வாராகி ஹோமமும் பஞ்ச திரவிய அபிஷேகம், அர்ச்சனை மற்றும் வாராகி தீபம் ஏற்றப்பட்டது.
அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசித்து சென்றனர். மேலும் சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சத்ரு சம்ஹார ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது.
- 4 கால பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஏரிபுதூர் கிராமத்தில் எழுந்தருளி யுள்ள காலபைரவருக்கு வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஏரி புதூர் கிராமத்தில் வனப்பகுதியின் அருகே காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு ஓராண்டுக்கு முன்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடர்ந்து தேய்பிறை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன, இதனையடுத்து நேற்று வருடாந்திர நிறைவு விழா நடைபெற்றது. இங்கு யாகசாலைகள் அமைத்து 9 கலசங்கள் வைத்து 4 கால பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
இதையடுத்து 108 வகையான சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூஜை செய்த கலசத்தை கோவிலை சுற்றி வந்து மூலவருக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதில் அணைக்கட்டு திமுக மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார பாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார்.
- அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார்.
கடலூர்:
இறைவன் தன் பக்தர் களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப் போது சோதிப்பதுண்டு. அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாள மாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழும் திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் திரிபுர சம்ஹார ஐதீக திருவிழா நேற்று இரவு நடந்தது. சிவனின் அட்ட வீரட்டத் தலங்களில் சிவனின் வீரம் அதிகம் வெளிப்பட்ட அதிகை வீரட்டானம் பிரம்மாவை வேண்டி கடும் தவம் புரிந்து பல வரங்களை பெற்ற தாருகாட்சகன், கமலாட்சகன், வித்யுன்மாலி இவர்கள் மூவரும் மூன்று பறக்கும் நகரங்களை பிரம்மாவிடம் பெற்றனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நகரங்க ளும் அருகேவரும்போது, அழியகூடியது இந்த நகரம் வரங்களைப் பெற்ற மூவ ரும், தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் தொல்லை கொடுத்தனர். துன்பத்தில் தவித்த தேவர்கள் சிவ பெருமானை வேண்டினர். மூன்று அசுரர்களை அழிக்க, தேவர்களின் பாதி ஆற்றலை சிவபெருமான் பெற்றார். பாதாளத்தைக் குறிக்கும் விதமாக ஏழு தட்டுக்களை கீழ்புறமாகவும், வானுலகை குறிக்கும்வித மாக ஏழு தட்டுக்களை மேல்புறமாகவும், அஷ்டமா நகரங்கள் சுற்றி இருக்கு மாறும் ஒரு தேரை உருவாக்க சொன்னார் சிவபெருமான்.
பூமியை பீடமாகவும், சூரிய - சந்திரர்களை சக்கர ங்களாகவும், உதய, அஸ்தமன மலைகளை அச்சாகவும், பருவங்களை கால் களாகவும் கொண்டு அந்தத் தேர் உருவாக்கப் பட்டது. நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் கடிவாளமாகவும், ஓம் என்னும் பிரணவம் சாட்டை யாகவும் அமைந்தன.பிரம்மா தேரோட்டியானார். கங்கை முதலிய நதிப்பெண்கள் சாமரம்வீச, விந்தியமலை குடையானது. வைதீகத்தேர் என்ற பெயருடன் தம் முன்பு நிறுத்தப்பட்ட தேரில் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்பை நாணாக்கி, திருமாலை அம்பின் தண்டாக்கி, வாயுவை வால் சிறகாக்கி, அக்னியை அதன் நுனியாக்கி அந்த அம்பை கையில் ஏந்தியவாறு உமாதேவியுடன், மூன்று அசுரர்களையும் அழிக்க புறப்பட்டார். அப்போது முப்புரத்தில் மூன்று அசுரர்களும் வாழ்ந்த பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகள், ஒரே இடத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
மூன்று அசுரர்களும் சிவ பெருமானுடன் போர்புரிய வெளியில் வந்தனர். அசுரர்களின் அகம் பாவத்தை பார்த்த சிவன், அவர்களை அழிக்க வில்லை வளைத்து அம்பை நாணேற்றினார். அப்போது தேவர்கள் அனைவரும், தங்களின் சக்தியில் பாதி பலம் இருப்ப தால்தான், சிவபெருமானால் அசுரர் களை அழிக்க முடிகிறது. நமது சக்தியில் பாதி பலம் இல்லை என்றால் சிவபெரு மானால் சம்ஹாரம் செய்ய முடியாது என்று அகந்தை கொண்டனர். அவர்களின் எண்ணத்தை அறிந்த ஈசன், லேசாக சிரிக்க அடுத்த கணமே தேர் முறிந்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். திருமால், ரிஷப வடிவம் கொண்டு ஈசனை தாங்கிக் கொண்டார். மீண்டும் ஒரு முறை சிவபெருமான் சிரிக்க, உலகமே நடுங்கும்படியாக ஒரு தீப்பிழம்பு உருவாகி, ஒருநொடியில் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் (முப்புரம்) சாம்பலாக்கியது.
ஒரு சிரிப்பில் தங்கள் சாம்ராஜ்யம் விழும் என்பதை சற்றும் எதிர்பார்த்திராத அசுரர்கள் திகைத்து பின் தாங்கள் பெற்ற வரத்தின்படி தங்கள் மீது அம்பு எய்துமாறு வேண்டினர். சிவனும் அப்படியே செய்து அவர்களை ஆட்கொண்டார். தங்கள் உதவி இல்லா மலேயே சிவபெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர் கள் வெட்கிதலை கவிழ்ந்தனர். சிரித்து எரித்த இந்த ஐதீக நிகழ்வு வைகாசி சுவாதி தினமான நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சரநாராயண பெருமாள் தங்க கருடவாகனத்தில் எழுந்தருள செய்துமுப்புரம் எரிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐதீக நிகழ்ச்சியை கண்டு களித்து, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் கோவில் நிர்வாகத்தினர், பண்ருட்டி திருவதிகை நகரவாசிகள், விழாக் குழுவினர், சிவனடியார்கள் சிவ தொண்டர்கள் செய்திருந்தனர்.
- 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது.
விழுப்புரம்:
செஞ்சியை அடுத்த பரதன் தாங்கல் கிராமத்தில் உள்ள மகா சக்தி மாரியம்மன் மற்றும் கோவில் பரிவாரத்தில் எழுந்தருளியுள்ள விநாயகர், முருகர், தாட்சாயினி, துர்க்கை அம்மன், நவக்கிரகம், கங்கை அம்மன், காத்தவராயன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 27-ந் தேதி காலை மங்கள இசை விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து முதற்கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது. மதியம் சுவாமிகள் கரி கோலம் வருதல் மாலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.இதை தொடர்ந்து இரண்டாவது நாள் நான்காம் கால யாகசாலை பூஜைகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
3-வது நாளான நேற்று ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடந்து தொடர்ந்து கடம் புறப்பாடு ராஜ கோபுரம் மற்றும் அனைத்து சாமிகள் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா சக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் ,தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. வனத்துறை பகுதியில் கோவில் உள்ளதால் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் நாளை (15-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது. கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதலே அடிவாரத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் காத்திருந்தனர். காலை 7 மணியளவில் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர். பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. மலைப்பாதை ஓடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
- தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
- ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை முன்னிட்டு நேற்று தீபாவளி ஆஸ்தானம் நடந்தது.
இதனையொட்டி சர்வ பூ பால வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். மூலவருக்கு அதிரசம் படையிலப்பட்டது.
நேற்று அவரவர்கள் வீட்டிலேயே தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்க வைக்கப்படாமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 74,807 பேர் தரிசனம் செய்தனர். 21, 974 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.58 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. பகலில் இதமான தட்ப வெப்பநிலை உள்ளது.
- உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.
- கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.
உடுமலை:
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக ஒரு சேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள். அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் அருவியில் குளித்து மகிழவும் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.ஆனால் நேற்று உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த பக்தர்கள் உடுமலை மத்திய பஸ் நிலையத்திலேயே மணி கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் அமாவாசை விழாவை கொண்டாடுவதற்கு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தோம்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மத்திய பஸ் நிலையத்திலேயே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது பஸ் வரும் என்றார்கள்.ஆனால் நேரம் சென்றதே தவிர பஸ் வரவில்லை.
மேலும் அமாவாசையையொட்டி மதியம் 12 மணிக்குள் திதி,தர்ப்பணம் கொடுத்து 12 மணியில் இருந்து 1 மணிக்குள் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.ஆனால் பஸ் வசதி இல்லாததால் திருமூர்த்தி மலைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை. ஒரு சிலர் ஆட்டோ மற்றும் வேனுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து திருமூர்த்தி மலைக்கு சென்றனர். போதிய பஸ்கள் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்களின் எண்ணங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அதிகாரிகள் உள்ளனர்.ஆனால் உடுமலை போக்குவரத்து கிளை அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாதது வேதனை அளிக்கிறது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.எனவே உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் கார்,வேன்,பைக் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அடிவாரத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சில பொதுமக்கள் பாலாற்றின் கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் மற்றும் அணைப்பகுதியில் பக்தர்கள்,சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
- முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.
26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர்.