என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disposal"

    • குப்பைகள் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.
    • தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

    தற்போது பெய்து வரும் பருவ மழையால் அரசு கட்டிடங்களில் மழைநீர் தேங்கி சேதமடைவதை தடுக்கும் வகையில் ஊராட்சி சார்பில் அரசு கட்டிடங்களில் சுத்தம் செய்யும் பணி நடை பெற்றது.

    ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், நடுநிலைப்பள்ளி கட்டிடங்கள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் மேல்தளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க கட்டிடங்களின் மேல்தளத்தில் கிடந்த இலை, தழைகளையும், குப்பைகளையும் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் சாலையிலும், தெருக்களிலும் ஆங்காங்கே தேங்கியிருந்த மழை நீரையும் தற்காலிக வடிகால் அமைத்து மழைநீரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் செயலாளர்கள் செய்து இருந்தனர்.

    • கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் உள்ள டீக்கடை உள்பட 3 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த செட், மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றக்கோரி சில வாரங்க–ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இன்று மதியம் மாநகராட்சி நகரமைப்ப அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

    பின்னர் அந்த கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு திருமங்கலம் தினசரி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவி ன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடந்தது.

    இதில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், டவுன் பிளானிங் அதிகாரி வேல்முருகன், கவுன்சிலர் திருக்குமார், வீரக்குமார். வருவாய்த்துறை சார்பில் சர்வேயர் ரம்யா மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

    • புதிய கட்டிட பணிக்காக ஜெனகை மாரியம்மன் கோவிலில் குடிநீர் தொட்டி அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாற்று வேலைக்காக குடிநீர் குழாய் சின்டெக்ஸ் உடைக்கப்பட்டது.

    இக்கோவிலில் பக்தர்க ளுக்காக சுத்திரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்ப டுத்திய பா.ஜ.க. விவசாய அணியின் மாநில துணைத்தலைவர் மணி முத்தையா கூறியதாவது:-

    ஜெனகை மாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் குளிப்பதற்கான தண்ணீர் வசதி இல்லாமல் பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர்.

    இப்பகுதி பக்தர்களுடைய வேண்டு கோளை ஏற்று பக்தர்கள் வசதிக்காக எனது சொந்த செலவில் திருப்பணியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளான்ட் அமைப்பு 2000 லிட்டர் சின்டெக்ஸ் தொட்டி அமைத்துக் கொடுத்தேன்.

    இந்த தண்ணீர் தொட்டி மூலம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அனைவரும் பயன்படுத்தி வநதனர்.

    தற்போது அதனை நிர்வாகம் இடித்து சேதப்படுத்தியுள்ளது.இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையரிடம் மனு அளித்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் இளமதி கூறும்போது, நாங்கள் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தவில்லை. இந்த தொட்டியை அன்னதான மண்டபத்தின் அருகில் விரிவாக கட்டப்போகி றோம். இந்த இடத்தில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு பணி ஆணையும் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க வேலையும் நடைபெற உள்ளது என்றார்.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் தனியார் குளுக்கோஸ் தொழிற்சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலையின் கழிவுநீர் வெளியேற்றத்தால் மங்களபுரம் உள்பட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டு இருப்பதாகவும், மேலும் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு மக்கள்

    பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அப்பகுதி

    யைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

    இந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோவில் நிலம், மற்றும் புறம்போக்கு நிலங்களையும், நீர்நிலை

    களையும் ஆக்கிரமித்து இருப்ப

    தாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் நாமக்கல் கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    இதையொட்டி நேற்று வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சேர்ந்து தனியார் தொழிற்சாலை ஆக்கிரமிப்பு செய்திருந்த அரசு புறம்போக்கு நிலத்தை

    யும், கோவில் நிலத்தையும்,

    கழிவு நீர் குழாய்களையும் கட்டப்பட்ட கட்டிடங்க ளையும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    • கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது.
    • 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக் குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு தினந்தோறும் சேரக்கூடிய குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் குப்பை களை வாங்கி மக்கும் குப்பையை உரம் தயாரிப்பதற்கும், மக்காத குப்பைகளை பாது காப்பாக அகற்று வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது இந்நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் மேற்பார்வையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.    இதில் கடந்த 2 நாட்களாக மாசி மக திருவிழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நூற்றுக்கணக்கான சாமிகள் கடற்கரைக்கு திரண்டு விமர்சையாக தீர்த்தவாரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.   இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மட்டும் சுமார் 10 டன் குப்பைகள் மலை போல் குவிந்திருந்தது. கடலூர் மாநகராட்சியின் 50 துப்புரவு பணியாளர்கள் மூலம் கடந்த 2 நாட்களாக குப்பைகள் அகற்றும் பணி களில் ஈடுபட்டு வந்தனர்.  மேலும் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பெரும்பாலான பகுதிகளில் அன்றைய தினம் குவிந்த குப்பை களையும் துப்புரவு ஊழியர்கள் தீவிரமாக அகற்றி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்தனர்.

    இதனை மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், நகர் நல அலுவலர் (பொறுப்பு) அப்துல் ஜாஃபர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துப்புரவு ஊழியர் களிடம் அறிவுறுத்தி னார்கள்.

    • தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    • உரிமையாளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தஞ்சை பாலாஜி நகர் வாரிப் பகுதியில் 14 கடைகள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதையடுத்து அந்தக் கடைகளில் உரிமையா ளர்களுக்கு கடைகளை காலி செய்யுமாறு ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இன்று நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்காக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமையில் நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி செயற்பொறியாளர் கண்ணதாசன் மற்றும் காவல்துறை, வருவாய் துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

    முன்னதாக கடையில் இருந்த பொருட்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டது. தொடர்ந்து 14 கடைகளும் இடித்துத் அகற்றப்பட்டன.

    மேலும் அந்த பகுதியில் நீர் நிலைகளில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    • மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்கள் வசூலிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 8 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    எனவே நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் பாலம் வரை பிரதான சாலையில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

    அகற்றப்பட்ட அனைத்து பொருட்களும் நகராட்சியால் கையகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது.
    • வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோவில் அமைந்து உள்ளது. கோவிலுக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகள், தண்ணீருடன் கூடிய பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசி செல்வதாக தெரிகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில் "வறட்சி நிலவி வருகின்ற தற்போதைய சூழலில் உணவு, தண்ணீரைத் தேடிக் கொண்டு ஏராளமான வனவிலங்குகள் அடிவாரப் பகுதியில் முகாமிட்டு உள்ளது.அப்போது அவை வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள உணவுடன் கூடிய பிளாஸ்டிக் பைகளை தின்று விடுகின்றது. இதனால் வனவிலங்குகள் படிப்படியாக உடல் ஆரோக்கியத்தை இழந்து பரிதாபமாக உயிரிழந்தும் வருகின்றன.

    அதன் இறப்பின் காரணத்தை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் போது வயிற்றுப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.அலட்சியத்துடன் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் வன விலங்குகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருவரும் சிந்திப்பதில்லை. நமது ஆரோக்கியத்தை காப்பாற்றும் வனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் கடவுள்தான்.இயற்கை மற்றும் வனத்தை பாதுகாக்கும் வனவிலங்குகளை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

    எனவே வனப்பகுதிக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த வேண்டும் என்றனர். இதற்கிடையில் தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இணைந்து வனப்பகுதியில் மக்கள் வீசி சென்ற பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    • மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன.
    • மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் உற்சாகமாக நடந்து முடிந்து உள்ளது. சனிக்கிழமை இரவு தொடங்கி இன்று காலை வரை பட்டாசு வெடித்து கொண்டாடியதில் சாலைகள், தெருக்களில் தேங்கிய கழிவுகளை சேகரிக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற் கொண்டது.

    பட்டாசு கழிவுகள் மிக ஆபத்தானது என்பதால் அதனை மற்ற குப்பைகள் போல் சேகரித்து அகற்றாமல் அதற்காக தனியாரிடம் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு அக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதா கிருஷ்ணன் மேற்பார்வையில் 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகள் இரவு பகலாக அகற்றப்பட்டன. 3 நாட்களில் இருந்து 250 டன் மெட்ரிக் பட்டாசு குப்பைகள் அகற்றட்டன.

    இது குறித்து கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5750 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. பட்டாசு கழிவுகள் அபாயகரமாக இருப்பதால் அதனை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    பட்டாசு கழிவுகள் அபாய கரம் என்பதால் தனியாக சேரித்து செயல்முறை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் உள்ள பட்டாசு கழிவுகள் தனியாகவும், தெருவீதிகளில் உள்ள கழிவுகளை தனியாகவும் பைகளில் சேகரித்து மண்டலத்திற்கு ஒரு இடத்தில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்ற தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    பட்டாசு குப்பைகள் தெரு பகுதிகள், சாலைகளில் தேங்கி கிடப்பதை உடனடியாக அகற்றி நகரை சுத்தமாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் விடிய விடிய ஈடுபட்டு வருகிறார்கள். மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 62 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுவதை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள அக்கறையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார்.

    • அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    பரங்கிமலை மற்றும் பல்லாவரம் கண்டோன் மென்ட் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும் அதில் பல ஆண்டு காலமாக கட்டிடங்கள் இயங்கி வருவதாகவும் செங்கல்பட்டு கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மற்றும் அதில் கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    கோர்ட்டு உத்தரவுப்படி வருவாய்த் துறையினர் கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பல்லாவரம் தாசில்தார் தலைமையில் போலீசார் உதவியுடன் அரசுக்கு சொந்தமான இடங்களை மீட்கத்தொடங்கினர். ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டது. பின்பு ஆக்கிரமித்த கட்டிடங்களை ஜே.சி.பி எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கிளப்புகள், வர்த்தக கட்டிடங்கள், ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடங்கும்.

    பரங்கிமலை மற்றும் கண்டோன்மெண்ட் சுற்றியுள்ள பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுமார் ரூ.2,500 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மீட்கப்பட்ட இந்த இடங்களில் அரசு கட்டிடம் மற்றும் மெட்ரோ ரெயில் பணிகளுக்கான இடம், இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றலாம் என்று வருவாய்த்துறை மூலமாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதற்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

    ஆலந்தூரை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை ரெயில் நிலைய பகுதியில் வாகனம் நிறுத்தும் இடங்கள் நாள்முழுவதும் நிரம்பி வழிகிறது. வாகன நிறுத்தும் இடம் அமைப்பதால் இந்த பிரச்சினையை தீர்ப்பதுடன், அரசு போதிய வருவாயும் ஈட்ட முடியும் என்றார்.

    ஆனால் பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறப்பட்டுள்ள ஒரு சில இடங்களில் சிலர் தங்களிடம் இடத்திற்கான 300 வருட பத்திரங்கள் மற்றும் பட்டா உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். இது போன்ற ஆவணம் அதிகாரிகளிடம் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் தவறாக சீல் வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ×