என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "distribution"

    • இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
    • தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.



    பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

    போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.

     


    • குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளது.

    இதனை ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் நாளை (திங்கள் கிழமை ) முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

    பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் மா ஒட்டுச்செடிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    முக்கனிகளில் முதலிடத்திலுள்ள மாம்பழம் உற்பத்தி 55 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் பழ வகை சாகுபடிக்கு ஏராளமான மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மா சாகுபடிக்கு நல்ல வடிகாலுடன் கூடிய செம்மண் ஏற்றதாகும். ஜூலை முதல் டிசம்பர் வரை மா சாகுபடிக்கு ஏற்ற பருவமாகும்.தமிழகத்தில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரம், அல்போன்சா, ஹி மாயூதீன், மல்கோவா ஆகிய ரகங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

    மா சாகுபடிக்கு முன் நிலத்தை நன்கு உழவு செய்து தலா ஒரு மீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் தோண்டி குழி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரம் மற்றும் மேல் மண் உரம் நன்கு கலந்து குழியின் முக்கால் பாகம் வரை மூடி ஒட்டுக்கட்டிய செடிகளை நட வேண்டும்.செடிக்கு செடி, 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை அடர் நடவு முறையில் அல்போன்சா, பங்கனபள்ளி மல்லிகா போன்ற ரகங்கள் நடலாம். மாம்பழம் காய்ப்புக்கு வரும் வரை ஊடுபயிராக காய்கறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.தழை, மணி சாம்பல் சத்து கொண்ட உரங்களை செப்டம்பர் , அக்டோபர் மாதங்களில் இட வேண்டும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் மா செடிகள் வழங்கப்படுகிறது.

    சிட்டா, அடங்கல், உரிமைச் சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787; நித்யராஜ் 63821 29721 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். 

    • திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்டைக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டது.

    திசையன்விளை செல்வமருதூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் சாந்தி மருத்துவமனை அருகில் உள்ள ரேஷன் கடை, இடையன்குடி, க.உவரி, க.நவ்வலடி, க.புதூர் பஞ்சாயத்து புலிமான்குளம், உறுமன்குளம் பஞ்சாயத்து பெட்ைடக்குளம் பகுதிகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் கெனிஸ்டன், இசக்கிபாபு, பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ஜேகர், வைகுண்டம், பொன்இசக்கி, முருகேசன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், உதயா, நரேஷ் அரவிந்த் மற்றும் நிர்வாகிகள் நாகமணி மார்த்தாண்டம், அமைச்சி யார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
    • சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சரின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின்படி சிவகிரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. சங்க தலைவர் மருதுபாண்டியன் தலைமை தாங்கினார். சங்க துணைத்தலைவரும் மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவருமான திருஞானம், சிவகிரி நகர தி.மு.க. செயலாளரும் சங்க இயக்குநருமான டாக்டர் செண்பகவிநாயகம், சங்க இயக்குநர்கள் மாரித்துரை, விநாயகர், திருமூர்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகி செல்லப்பா ஆகியோர் வரவேற்று பேசினர்.

    தென்காசி மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோகரன், சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் சிவகிரி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் லட்சுமி ராமன், தி.மு.க. மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் மருதப்பன், மருத்துவர் அணி டாக்டர் சுமதி, நெசவாளர் அணி சி.எஸ்.மணி, மாணவர் அணி சுந்தர வடிவேலு, சங்க முன்னாள் தலைவர் பூமிநாதன், சிவகிரி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, ரத்தின ராஜ், முத்துலட்சுமி தங்கராஜ் மற்றும் நகர தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சங்க நிர்வாகி செல்வக்குமார் நன்றி கூறினார்.

    • பூண்டி மற்றும் ராகவம்மாள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள பூண்டி மற்றும் ராகவம்மா ள்புரம் துணை மின் நிலையங்களில் நாளை ( வியாழக்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம் , மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம் , பள்ளியூர், களஞ்சேரி, இரும்பு தலை, ரங்கநாதபுரம், சூலியக் கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளமார்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை கோட்டை, சின்ன புலிகுடிகாடு, நார்த்தேவன், குடிக்காடு அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூர்த்தி அம்மாள்புரம், பனையக்கோட்டை, சடையார் கோவில், துறையு ண்டார் கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
    • நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இணை இயக்குனர் (பொ) விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் மயிலாடுதுறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் ஆலோசனைப்படி செம்பனார்கோயில் ஒன்றியம், பரசலூர் ஊராட்சி சம்பந்தம் மேல்நிலைப்பள்ளியில் வெறிநாய்கடி தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள் அன்பரசன், சுதா, மோனிஷா புகழ் ஆகியோர் கலந்துகொண்டு வெறிநாய் கடி தடுப்பு குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    முன்னதாக கால்நடை துறை சார்பில் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி தலைவர் சண்முகம், பள்ளி ஆலோசகர் பாண்டியன், தலைமையாசிரியர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். நோய் தடுப்பு குறித்தும், நாய்களை பராமரிப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.

    இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
    • கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த தோட்டக்கலை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு கத்தரி, மிளகாய் உட்பட பல்வேறு வகையான குழி தட்டு காய்கறி நாற்றுக்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று தஞ்சை அடுத்த மருங்குளத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் , விவசாயிகளுக்கு மானிய விலையில் கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் உள்பட அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளுக்கு காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் கூறும் போது:-

    விவசாயிகளுக்கு தை பட்டத்திற்காக தங்கு தடையின்றி காய்கறி நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 10.5 லட்சம் எண்ணிக்கையில் கத்தரி நாற்றுகள், 4 லட்சம் மிளகாய் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லி, எலுமிச்சை போன்ற நாற்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்தப் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி நாற்றுக்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

    • சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
    • காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுவதால் மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

    இதனால் தஞ்சை தொகுப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தோப்புகுளம், ராமகிருஷ்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, விக்டோரியா நகர், முனிசிபல் காலனி, முத்தமிழ் நகர், சிலப்பதிகார வீதி , பெரியார் நகர், ரெயில் நகர், தமிழ் நகர், ரெட்டிபாளையம் ரோடு, மானோஜிப்பட்டி ரோடு, ஈஸ்வரி நகர், மருத்துவக்கல்லூரி சாலை 3-வது கேட் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள தனியார் செல்போன் கடை வரை மெயின் சாலையில் உள்ள வணிக வளாகங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 943 தொழிலாளர்களுக்கு ரூ3.58 கோடி வினியோகம் செய்யப்படுவதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
    • பணியாற்றிய நிறுவனங்களில் இருந்து பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் குறைந்த பட்ச சம்பள சட்ட கமிஷனர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் கமிஷனர் அறிவுறுத்தலின்படி மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களில் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு தொழில்நிறுவனத்தில் சிறப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டதில், குறைந்தபட்ச சம்பள சட்டம் 1948-ன்படி, தொழில் வணிக நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி சம்ப ளம் வழங்காத பணியா ளர்கள் தரப்பில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 462 தொழிலாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவித்திருந்தனர்.

    ×