search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk leader"

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Prabhu

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித் மற்றும் ஷாலினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. 
    இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் அஜித், நடிகை ஷாலினி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #AjithKumar

    ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    இந்த நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு ஆம்புலனஸ் மூலம் கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில், ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர்கள் சிவக்குமார், சூர்யா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். #Karunanidhi #RIPKarunanidhi #கருணாநிதி #RIPkalaingar #Suriya #Sivakumar

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியாகிய நிலையில், கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்து டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi
    சென்னை :

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்த மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 



    இதற்கிடையே பிராதன சமூக வலைதளமான ட்விட்டரிலும் கருணாநிதி (#Karunanidhi) ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் (#KauveryHospital), கனிமொழி (#Kanimozhi) உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. #Karunanidhi #KauveryHospital

    நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர் மலை ஒன்றியம் பொருங்குறிச்சி ஊராட்சியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மேற்கு மாவட்டம் கபிலர் மலை ஒன்றியம் பொருங்குறிச்சி ஊராட்சியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதநிதி மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். 

    தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி. சரத்பாலா சிறப்புரையாற்றினார், கூட்டத்தில் பரமத்தி ஒன்றிய செயலாளர் பி.பி.தனராசு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் டி.விஜயகுமார், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சரவணகுமார், முன்னால் அன்பழகன், ஊராட்சி செயலாளர்கள் ராமசாமி, ராமலிங்கம், சுப்பிரமணி, கந்தசாமி, வேல்முருகன், ஒன்றிய இளைஞர் அணிஅமைப்பாளர் மோகன்ராஜ் கலந்து கொண்டனர். 

    முடிவில் எம்.துரைசாமி நன்றி கூறினார்.
    தி.மு.க. தலைவர் கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    சென்னை:

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் 95-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் மற்றும் கலையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று இரவு பெங்களூரு புறப்பட்டு சென்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலைஞருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    அதில், திமுக தலைவர் கருணாநிதிக்கு, எப்பவும் தள்ளி நின்று வாழ்த்து சொல்லும் ரசிகன் நான். பலமுறை பிறந்தநாள் முடிந்தும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறியுள்ளேன், இம்முறையும் அதேதான் என தெரிவித்துள்ளார். #Kamalhaasan #karunanidhibirthday
    திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா். #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.

    ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை அவர் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். தற்போது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள் தங்களுடைய வாழ்த்துக்களை  தொிவித்து வருகின்றனா்.



    இதைத்தொடா்ந்து தமிழக பாஜக மாநில தலைவா் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்

    ‘தமிழக அரசியலில் மூத்த தலைவர் கருணாநிதி பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி, உடல்நலத்துடன் வாழ்ந்து மக்கள் பணி செய்ய இறைவனை வணங்குகிறேன். தமிழக பா.ஜ.க. சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  #Karunanidhi #Birthday #TamilisaiSoundararajan #Tamilnews 
    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து 2 மாதமாக ஆலோசனை நடத்தி வந்தார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் கோஷ்டி பிரச்சினைகளை கேட்டுக் கொண்டதுடன், கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

    கட்சியில் குழப்பம் விளை விப்பவர்கள், கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சிக்கு பாடுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் மரியாதை கிடைக்கும் என்று உறுதிபட கூறினார்.

    மாவட்ட வாரியான கூட்டம் முடிந்த நிலையில் மாநில அளவில் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

    இன்று காலை மகளிர் அணி மற்றும் மகளிர் பிரசார குழு தொண்டர் அணி நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., நிர்வாகிகள் ஹெலன் டேவிட்சன், விஜயா தாயன்பன், கீதா ஜீவன், தமிழரசி, குமாரி உள்பட 25-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மகளிரணியினரின் குறைகளை கேட்டறிந்த பிறகு கட்சியின் வளர்ச்சிக்கு தேவையான ஆக்கப்பூர்வ கருத்துக்களை மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

    இதைத்தொடர்ந்து சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில நிர்வாகிகளை அழைத்து மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

    இதில் மாநில செயலாளர் மஸ்தான், மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இவர்களிடம் கட்சியில் நிலவும் பிரச்சினைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் உங்கள் குறைகளை நான் களைகிறேன். நீங்கள் கட்சிக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும். எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெறும் வகையில் உங்கள் உழைப்பு இருக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து பொறியாளர் அணி, வர்த்தகர் அணி, மருத்துவர் அணியுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.

    ×