என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dog bite"

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள்.
    • லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்தவர் கீரலிங்கா. இவர் தனது மனைவி மற்றும் லாவண்யா என்ற 4 வயது மகளுடன் வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு லாவண்யா, அந்த பகுதியை சேர்ந்த மற்ற சிறுவர்-சிறுமியருடன் சாலையில் நின்று விளையாடினாள். அப்போது தெருநாய் ஒன்று திடீரென விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில் லாவண்யா உள்பட 8 சிறுவர், சிறுமிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    கழுத்தில் படுகாயம் அடைந்த லாவண்யா உள்பட அனைவருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பினர். லாவண்யாவும் வீடு திரும்பினாள்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது திடீரென சிறுமி லாவண்யா உயிரிழந்தாள்.

    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார்.
    • சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில், உப்பு பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கர்நாடக மாநிலம் மைசூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு சிகிச்சை பெறாமல் முனுசாமி இருந்து விட்டார்.

    இந்தநிலையில் வெள்ளகோவிலுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், உங்களை ஏதேனும் நாய் கடித்து உள்ளதா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைசூரில் நாய் ஒன்று கடித்து விட்டது என்று கூறியுள்ளார். உடனே அவரை கரூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், திருச்சியில் உள்ள நாய் கடி சிறப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த முனுசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    முனுசாமி நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் கதிரவன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர்.
    • பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடந்த 26-ம் தேதி சாலையோரம் தனது தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளை அங்கிருந்த தெருநாய்கள் திடீரென கடித்தது.

    நாய் கடித்ததால் படுகாயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தெருநாய்கள் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அங்கு வந்த கான்பூர் மேயர் பிரமிளா பாண்டே, "இறைச்சி விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் மீதமாவதை நாய்களுக்கு உணவாக கொடுப்பதே தெருநாய்கள் தொல்லைக்கு காரணம் என்று கூறி அந்த பகுதியில் உள்ள 44 இறைச்சி கடைகளை இடிக்க உத்தரவிட்டார்.

    மேயரின் உத்தரவு படி புல்டோசர்களில் வந்தவர்கள் அங்கிருந்த 44 இறைச்சி, மீன் கடைகளை இடித்து தள்ளினர். மேலும், இனி அந்த பகுதியில் இறைச்சி கடைகள் திறக்கக்கூடாது என்றும் மேயர் பிரமிளா பாண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜக மேயரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
    • மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

    நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.

    நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.


    நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.

    இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

    • படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழப்பு.
    • உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை.

    கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து கொன்றுள்ளது.

    குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை நாய் கடித்து குதறியுள்ளது.

    இதையடுத்து, படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

    நாய் கடித்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பகவான் மண்ட்லிக் கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார்.
    • நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

    மும்பை:

    மும்பையை அடுத்த கல்யாணை சேர்ந்தவர் பகவான் மண்ட்லிக் (வயது 27). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடைபயிற்சி சென்றார். அப்போது அவரை தெருநாய் ஒன்று கடித்து விட்டது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு பூனையும் அவரை கடித்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அவருக்கு தலைவலி, உடல் வலி மற்றும் தொண்டை வறட்சி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. உடனே அவர் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்.

    இறுதியில் மும்பை கஸ்தூர்பா மாநகராட்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாய் மற்றும் பூனை கடித்த பின்னர் பகவான் மண்ட்லிக், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும், இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து இருப்பதாக கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது

    மேலும் அந்த மாநகராட்சியின் மருத்துவ சுகாதார அதிகாரி தீபா சுக்லா கூறுகையில், "எந்த விலங்குகள் கடித்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முன்னெச்சரிக்கையாக உரிய சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்" என்று பொதுமக்களை வலியுறுத்தி உள்ளார்.

    நாய், பூனை கடித்ததை தொடர்ந்து தடுப்பூசி போட்டு இருந்தால் வாலிபரின் விலைமதிப்பற்ற உயிர் பறிபோய் இருக்காது.

    இதில் அலட்சியம் காட்டிய வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும்.

    இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

    இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பொதுமக்கள் வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்சி அரியமங்கலத்தில் வெறிநாய் கடித்து குதறியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரில் அண்ணாதெரு, சவுக்கத்அலிதெரு, முத்துராமலிங்கதெரு, ஜீவானந்தம்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. அங்கு அதிக எண்ணிக்கையில் நாய்கள் சுற்றி திரிகின்றன. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் சுற்றி திரிந்த ஒரு நாய்க்கு திடீரென வெறி பிடித்தது. உடனடியாக அந்த நாய் பாய்ந்து சென்று அதேபகுதியில் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த மூதாட்டியை கடித்து குதறியதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனால் வீடு முழுவதும் ரத்தம் சொட்டியது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து காமராஜ்நகரை சேர்ந்த காதர்(வயது 45), அண்ணாதெருவை சேர்ந்த முகமதுமைதீன்(47), கென்னடிதெருவை சேர்ந்த சுலையா(47), ஜின்னாதெருவை சேர்ந்த சகீலா(38) என அடுத்தடுத்து பலரை நாய் கடித்து குதறியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந் தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    தொடர்ந்து ஒரேநாளில் 15 பேரை கடித்து குதறியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே நடமாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள அய்யாக்குட்டி வலசு, செம்மடைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (76). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை முத்துச்சாமி தனது 9 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. முத்துசாமியின் ஒரு ஆடு காயங்களுடன் உயிர் பிழைத்தது.

    இதே பகுதியில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 2 வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளை கடலைக்காட்டுபுதூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் ஆகும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

    குலசேகரத்தில் 2 பெண்களை வெறிநாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.

    குலசேகரம்:

    குலசேரகம் அரசமூடு விளையாட்டு மைதானம் பகுதியில் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த கழிவுகளை உண்பதற்காக இந்த பகுதியில் ஏராளமான நாய்கள் இங்கு சுற்றித்திரிவது வழக்கம். இவற்றில் பல நாய்கள் வெறிபிடித்து அலை கின்றன. மேலும் இந்த வெறி நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் சென்றாலும் இதுவரை அந்த வெறி நாய்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்த நிலையில் இந்த வெறி நாய்கள் கடித்து 2 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். குலசேகரம் காவஸ்தலம் தொட்டிப்பாலம் செட்டி தெருவை சேர்ந்தவர் கீதாமணி (வயது 60). இவர் தொட்டிப்பாலம் பகுதியில் நடந்து சென்றபோது அங்கு வந்த ஒரு வெறி நாய் அவரை விரட்டி, விரட்டி கடித்தது.

    இதில் அவருக்கு கை உள்பட உடலில் பல இடங் களில் படுகாயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து வெறி நாயிடம் இருந்து அவரை காப்பற்றினார்கள். அங்கிருந்து தப்பியோடி அந்த வெறி நாய் அதே பகுதியை சேர்ந்த வசந்தா (65) என்ற பெண்ணையும் கடித்து குதறியது. மேலும் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட நாய்களையும் அந்த வெறி நாய் கடித்தது.

    வெறி நாயின் அட்டகாசத்தை பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நாயை அடித்து கொன்றனர். வெறி நாய் கடித்த பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    சாலையில் திரிந்த நாய்களும் வெறி நாயால் கடிக்கப்பட்டுள்ளதால் அந்த நாய்களும் வெறி நாய்களாக மாறும் அபாயம் உள்ளது. மேலும் விளையாட்டு மைதானம் பகுதியிலும் பல வெறி நாய்கள் சுற்றித்திரிவதால் இவற்றால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வெறி நாய்களை உடனடியாக ஒழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×