search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drainage works"

    • சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
    • கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் சுற்றுச்சுவரை ஒட்டி வாய்க்கால் உள்ளது.

    இந்த வாய்க்காலில் முல்லை நகர், பெரியார் நகர், ஜே.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் வடிந்து செல்லும். மூடப்பட்ட இந்த வாய்க்காலின் மீது சுதேசி மில் சுவரை ஒட்டி கடைகள் அமைத்திருந்தனர்.

    இதனால் ஆண்டுக் கணக்கில் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமலும், சீரமைக்கப்படாலும் இருந்தது. இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு அங்கிருந்த கடை களை காலி செய்து, வாய்க்கால் சீரமைப்பு பணியை தொடங்கினர்.

    வாய்க்காலை மூடியிருந்த சிலாப்புகள் கடலூர் சாலை சந்திப்பிலிருந்து உருளை யன்பேட்டை போலீஸ் நிலையம் வரை அகற்றப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலில் கட்டுமா னப்பணிக்கு கான்கிரீட் அமைக்க கம்பிகள் கட்டும் பணி நடந்து வந்தது. திடீரென இந்த பணி நிறுத்தப்பட்டது. மாதக்க ணக்காகியும் இந்த பணி மீண்டும் தொடங்கவில்லை.

    அங்கிருந்து இரும்பு கம்பிகளை இரவு நேரங்களில் பலர் திருடி செல்கின்றனர்.

    அதேநேரத்தில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அதில் குப்பை, கூளங்கள் சரிந்து தண்ணீர் தேங்க தொடங்கி யது. மழை நேரத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி உட்புற சாலைகளில் கழிவுநீர் செல்ல தொடங்கி யது. சமீபகாலமாக டெங்கு, மலேரியா, வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. பிரதான சாலையில் வாய்க்கால் திறந்து கிடப்பதால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இந்த சாலையில் நாள்மு ழுவதும் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது. அதோடு அங்கு கடை வைத்தி ருந்தவர்கள் நீண்டகாலமாக காத்திருந்தும் பணிகள் முடியாததால் அங்கு கடை வைத்திருந்த வியாபாரிகள் வேதனை அடைந்து வருகின்ற னர். வாய்க்கால் கட்ட பணி க்காக அமைக்கப்பட்ட கம்பி கள் துருப்பிடித்து வருகிறது. திறந்து கிடக்கும் கால்வாயால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு ள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    • 60 வார்டுகளிலும் ஒரே சீரான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டங்களின் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
    • மாநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று ஓராண்டை நெருங்கி வரு கிறது. இந்நிலையில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை அவர் இரவு பகலமாக நேரடியாக சென்று பார்வையிட்டு பணிகளை விரைவுப்படுத்தி வருகிறார்,

    முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வகையிலும் தமிழகத்தின் முன்மாதிரி மாநகராட்சியாக திகழ்ந்திடும் வகையிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன,இதற்காக மாநகரில் உள்ள 4 மண்டலங்கள் 60 வார்டுகளிலும் ஒரே சீரான வளர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி கூட்டங்களின் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

    அதன்படி மாநகரில் குடிநீர் தேவை கள், சுற்றுச்சூழல் மேம்பாடு, புதிய சாலைகள் அமைத்தல், போக்குவரத்துகள் சீரமைப்பு, வடிகால்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளை அவர் இரவு பகலாக ஆய்வு செய்து வருகிறார்.

    இந்நிலையில் மாநகரில் நடைபெற்று வரும் சாலை பணிகள்,வணிக வளாக கட்டிட பணிகள் பழைய பேருந்து நிலைய பணிகள் ஆகியவற்றை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.எஸ்.மாணிக்கபுரம் சந்திப்பு, பசும் பொன் நகர் மற்றும் நான்காம் கேட்டில் இருந்துவி.எம்.எஸ். நகர் சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ் பிரபாகரன், ஜாஸ்பர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் உடன் இருந்ததனர்.

    • காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
    • இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி யில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

    கருவடிக்குப்பம் கால்நடை மருத்துவமனை வீதி, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள எல் வடிவ வாயக்கால் சுமார் ரூ.16 லட்சம், இடையஞ் சாவடி ரோடு, குறுக்கு தெருக்களுக்கு யூ வடிவ வாய்க்கால் அமைக்க ரூ.42 லட்சம், நாகம்மன் நகர் முழுவதும் ரூ.29 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தொகுதி எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், ஊர்மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×